தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.
‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடல் ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம் உலகம் முழுவதும் தெரிந்த நடிகரானார் ராம்சரண்.
ராம்சரணுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு அப்போலோ குழுமத்தின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவுடன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆகி 11 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் இன்று (ஜூன் 20) அதிகாலையில் ராம்சரண் – உபாசனா தம்பதிக்கு ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
இத்தகவலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
மேலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Ramcharan became father of girl baby after 11 years of marriage