திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைக்கு அப்பாவானார் ராம்சரண்

திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைக்கு அப்பாவானார் ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடல் ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம் உலகம் முழுவதும் தெரிந்த நடிகரானார் ராம்சரண்.

ராம்சரணுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு அப்போலோ குழுமத்தின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆகி 11 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் இன்று (ஜூன் 20) அதிகாலையில் ராம்சரண் – உபாசனா தம்பதிக்கு ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இத்தகவலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

மேலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராம்சரண்

Ramcharan became father of girl baby after 11 years of marriage

LCU வில் 10 படங்கள்.. Miss You Vijay..; லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

LCU வில் 10 படங்கள்.. Miss You Vijay..; லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே விஜய்க்கான காட்சிகளை படமாக்க இருக்கிறாராம்.

அதன் பின்னர் விஜய் இல்லாத காட்சிகளை படமாக்க இருக்கிறாராம் இயக்குநர்.

இந்த நிலையில் ‘லியோ’ படம் குறித்து லோகேஷ் தன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளதாவது…

“இந்த LCU யூனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி. ஆனால் அது எளிதான காரியமில்லை. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.

ஆனால் எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன்.

எல்சியு-வில் ‘லியோ’ வருமா என்பதை அறிய 3 மாதங்கள் காத்திருங்கள்

‘லியோ’ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. சூட்டிங் முடிந்தவுடன் விஜய்யை மிஸ் செய்வது கஷ்டம்.” என்றார்.

Will Leo movie be in LCU Lokesh open talk

‘மாமன்னன்’-க்கு வந்த சோதனை; ரிலீஸ்க்கு தடைக்கோரி மனு; என்ன செய்வார் உதயநிதி.?

‘மாமன்னன்’-க்கு வந்த சோதனை; ரிலீஸ்க்கு தடைக்கோரி மனு; என்ன செய்வார் உதயநிதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாமன்னன்’.

‘மாமன்னன்’ படம் இந்த மாதம் ஜூன் 29ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘மாமன்னன்’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஒஎஸ்டி ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன.

20 சதவிகித படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார்.

மேலும், உதயநிதி ‘மாமன்னன்’ படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்துவருவதால் ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும், ரூ.25 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

producer filed a petition on chennai high court to ban udhayanidhi’s maamannan

தன் குழந்தைகளின் படத்தை வெளியிட்ட சர்ச்சை பாடகி சின்மயி

தன் குழந்தைகளின் படத்தை வெளியிட்ட சர்ச்சை பாடகி சின்மயி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடியதன் மூலம் திரையுலகில் பாடகியாக அடியெடுத்து வைத்தார் சின்மயி.

முதல் பாடலிலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.

தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான் என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியிருக்கிறார்.

சின்மயி

திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா என தமிழின் பெரும்பாலான முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசி உள்ளார்.

நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டிருந்த பாடகி சின்மயிக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்ததனர்.

கர்ப்பமாக இருப்பதை சின்மயி அறிவிக்காததால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக விமர்சனங்கள் பல எழுந்தது.

சின்மயி

அதனை பாடகி சின்மயி மறுத்து விட்டார்.

இந்த நிலையில், பாடகி சின்மயி முதன்முறையாக தனது மகன்களின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சின்மயி-யின் குழந்தைகளின் புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சின்மயி

chinmayi reveal her twin sons photo for the first time

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ‘ஆதிபுருஷ்’..; அகிலம் முழுவதும் இத்தனை கோடி.?

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ‘ஆதிபுருஷ்’..; அகிலம் முழுவதும் இத்தனை கோடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ .

இப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

‘ஆதிபுருஷ்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த (16-06-2023)-ம் தேதிவெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது.

இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது.

இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

‘ஆதிபுருஷ்’ படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஆதிபுருஷ்’ படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், அடுத்த நாளில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 3 நாட்களில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் சுமார் 340 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ 340 கோடியை கடந்துள்ளது.

மேலும் நடப்பு ஆண்டில் வெளியான 3 நாட்களில் 300 கோடி வசூலை குறித்த 2-வது திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளது ஆதிபுருஷ்.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் ரூ 313 கோடி வசூலித்தாலும், பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் ரூ 340 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

prabhas’s adipurush film earns rs 340 crore worldwide in first week

சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த; பிரபல நடிகர் பூஜாபுரா ரவி மரணம்

சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த; பிரபல நடிகர் பூஜாபுரா ரவி மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பூஜாபுரா ரவி.

‘கல்லன் கப்பலில் தானே’, ‘ரவுடி ராமு’, ‘ஒர்மாக்கல் மரிக்குமோ’, ‘அம்மினி மம்மவன்’, ‘முத்தாரம்குன்னு பி.ஓ.’, ‘மழ பெய்யுனு மத்தளம் கொட்டுனு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கப்பி’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பூஜாபுரா ரவி, சில மாதங்களுக்கு முன்பு இடுக்கி மறையூரில் உள்ள மகள் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக பூஜாபுரா ரவி உயிரிழந்தார். அவருக்கு வயது 83.

பூஜாபுரா ரவி மறைவுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், பழம்பெரும் மலையாள நடிகர் பூஜாபுரா ரவி மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

malayalam actor poojapura ravi passes away

More Articles
Follows