‘அநீதி’ படத்தை பார்க்க காரணங்களை அடுக்கும் நடிகர் சித்தார்த்

‘அநீதி’ படத்தை பார்க்க காரணங்களை அடுக்கும் நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் சித்தார்த் பேசியதாவது…

“இப்படத்தை பணம் செலவிட்டு நீங்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று கட்டாயம் பார்க்கலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு படத்தை இயக்குநர் ஷங்கர் வழங்குகிறார் என்றாலே அது மிகவும் சிறந்த படமாகத் தான் கட்டாயம் இருக்கும்.

வசந்தபாலன் இயக்கத்தில் உருவான படம் என்றால் அது சொல்லப்பட வேண்டிய கதையாக தான் இருக்கும். ஜிவி பிரகாஷின் இசையை பற்றி நிறைய பேசலாம். இவ்வாறு ‘அநீதி’ படத்தை பார்ப்பதற்கான காரணங்கள் பல உள்ளன.

வசந்த பாலன் உடன் (‘காவியத்தலைவன்’ திரைப்படத்தில்) பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது பாக்கியம். அநீதி திரைப்படத்தை அனைவரும் ஆதரிக்குமாறு வேண்டுகிறேன், நன்றி.”

இயக்குநர் என். லிங்குசாமி பேசியதாவது…

“இயக்குநர் வசந்த பாலனும் நானும் சாலிகிராமத்தில் ஒரே அறையில் தங்கி இருந்தது முதல் இப்போது வரை நண்பர்கள். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வசந்த பாலனுக்கு உண்டு. ஆகையால் இந்த விழாவை இந்த மேடையை எனது விழாவாகவும் எனது மேடையாகவும் தான் நான் பார்க்கிறேன்.

‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இப்படம் மாபெரும் வெற்றியடைய வசந்த பாலனையும், இதை தயாரித்துள்ள அவரது நண்பர்களையும் வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

Lot of reasons to watch Aneethi says Siddharth

உலக கவனத்தை ஈர்த்த ஷங்கர் ‘அநீதி’ உடன் இணைந்திருக்கிறார் – சித்ரா லட்சுமணன்

உலக கவனத்தை ஈர்த்த ஷங்கர் ‘அநீதி’ உடன் இணைந்திருக்கிறார் – சித்ரா லட்சுமணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் பேசியதாவது…

“வசந்த பாலன் சினிமாவை மிகவும் நேசிப்பவர் என்பது மட்டுமில்லாமல் திரையுலகை பற்றி அறிந்து வைத்திருப்பவர். மிகவும் கடின உழைப்பாளி ஆன அவர் சிறந்த படைப்புகளை ஏற்கனவே தந்துள்ளார். அந்த வரிசையில் ‘அநீதி’யும் இடம்பெறும் என்று நான் நம்புகிறேன்.

தமிழ் சினிமாவை உலக கவனம் பெற வைத்துள்ள இயக்குநரான ஷங்கர் இப்படத்தை வெளியிடுவது கூடுதல் பலம். அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளார்கள். ‘அநீதி’ மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் எழில் பேசியதாவது…

“இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மட்டும் பாடல்கள் மிகவும் அருமையாக அமைந்துள்ளன. இப்படத்தை தயாரித்துள்ள வசந்த பாலன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு வாழ்த்துகள். ‘அநீதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசியதாவது…

“ஷங்கர் சாரிடம் பணியாற்றிய காலத்தில் இருந்தே வசந்த பாலனும் நானும் நண்பர்கள். வசந்த பாலனுக்கு நண்பர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதன் காரணம் என்னவென்றால் நண்பர்களின் மீது அவர் மிகவும் பாசம் காட்டுவார்.

‘அங்காடி தெரு’வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி நான் தான் அதில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது அன்புக்கு கட்டுப்பட்டு நான் அப்படத்தில் நடித்தேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையை திரையில் காட்டுவது அனைவருக்கும் கைவந்ததல்ல, வசந்த பாலனுக்கு இது மிகவும் அழகாக வருகிறது. தொடர்ந்து பல்வேறு மிகச் சிறந்த படங்களை அவர் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

Shankar added more value to Aneethi says Chitra Laxman

ஒரு கதையை வசந்தபாலன் விவரிக்கும் விதமே அலாதியானது.. – தனஞ்செயன்

ஒரு கதையை வசந்தபாலன் விவரிக்கும் விதமே அலாதியானது.. – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசியதாவது…

“‘ஒருவருக்கு நண்பர்கள் அமைவது என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் வசந்த பாலன் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. பள்ளிக்காலம் முதல் ஒன்றாக இருக்கும் நண்பர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களுக்கு வசந்த பாலன் அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தை வெளியிடுவதும் அந்த நட்பின் அடிப்படையில் தான். இந்த விழாவுக்கு பல முன்னணி இயக்குனர்கள் வந்திருப்பதும் அந்த நட்பின் அடிப்படையில் தான்.

ரசிகர்களின் நட்பும் ‘அநீதி’க்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு படத்தின் கதையை வசந்த பாலன் விவரிக்கும் விதமே அலாதியானது. ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

Vasantha Balans story narration is super says Dhananjayan

வசந்தபாலனின் நண்பர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருப்பது மகிழ்ச்சி – பாக்யராஜ்

வசந்தபாலனின் நண்பர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருப்பது மகிழ்ச்சி – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மட்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் கூறியதாவது…

“இயக்குநர் வசந்த பாலன் இயக்குநர் ஷங்கரிடம் இருந்து வந்தவர். ‘அநீதி’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கு வசந்தபாலனின் முந்தைய திரைப்படங்களே சான்று. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று சொல்வார்கள், இங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தயாரிப்பாளர்கள் ஆகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அதன் வெற்றி விழாவிலும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

Friends became Producers for friend is good says Bhagyaraj

எனக்கு முதல் படம் போல கடைசி படமும் வெற்றி.; உற்சாகத்தில் உதயநிதி

எனக்கு முதல் படம் போல கடைசி படமும் வெற்றி.; உற்சாகத்தில் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை கொண்டாடி நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…

‘மாமன்னன்’ படக்குழு அனைவருக்கும் நன்றி, நல்ல படத்தை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளீர்கள், எனக்கு முதல் படம் போலக் கடைசி படமும் வெற்றி. படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பாடலாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் மாரிதான் நடன இயக்குநராகவும், சண்டைக் காட்சிகள் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

இடைவேளை சண்டைக்காட்சிகள் அனல் பறக்கும் படத்தில் மட்டுமல்ல, படப்பிடிப்பே, அப்படித்தான் இருந்தது. படப்பிடிப்பில் நிறையக் காயங்கள் ஏற்பட்டது, எல்லாமே ரியலாக இருந்தது. படத்தில் இருக்கும் அழுத்தம் படப்பிடிப்பில் இல்லை எல்லோரும் ஜாலியாக தான் படத்தை எடுத்தோம்.

இந்நேரத்தில் படக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். வடிவேலு அண்ணன் நடித்த காட்சிகளை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதையைப் பற்றி புரிந்தது. உண்மையிலேயே இந்த படத்தை அவர்தான் தாங்கியுள்ளார்.

பஹத் பாசில் பற்றி நான் சொல்லத் தேவையில்லை தேசிய விருது பெற்ற நடிகர் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது அவரது நடிப்பு. ரஹ்மான் சாருக்கு நன்றி படத்தின் கதையை போல இசையும் பெரும் வலு சேர்த்தது.

செண்பகமூர்த்தி சாருக்கு நன்றி ரெட் ஜெயன்டை நன்றாக வழி நடத்திச் செல்கிறார். என் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன் நன்றி.

My first and last movie became mega hit says Udhayanidhi

ஸ்டாலின் போன் செஞ்சாங்க.. ரஜினி போன் செஞ்சாங்க.; மகிழ்ச்சியில் ‘மாமன்னன்’ வடிவேலு

ஸ்டாலின் போன் செஞ்சாங்க.. ரஜினி போன் செஞ்சாங்க.; மகிழ்ச்சியில் ‘மாமன்னன்’ வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை கொண்டாடி நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த விழாவில் நடிகர் வடிவேலு பேசியதாவது…

இத்தனை நாட்களாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன், ஆனால் இந்தப் படம் எனக்கு இன்னொரு உருவத்தைக் கொடுத்துள்ளது, இந்தக் கதையை முதலில் உதய் சார் தான் என்னைக் கேட்கச் சொன்னார்.

அதன் பின் கதையைக் கேட்டேன். அவர் முதலில் என்னிடம் சொன்னது ஒரு காட்சி கூட உங்களுக்கு நகைச்சுவை இல்லை என்றார். முதலில் நான் கொஞ்சம் பயந்தேன், ஆனால் முழு கதையைக் கேட்டதும் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டேன்.

இயக்குநர் மாரி செல்வராஜிற்கு ஒரு 30 படம் செய்த இயக்குநருக்கு உள்ள அனுபவம் இருந்ததை நான் அறிந்தேன், அவரது வலியை நடிகர்களுக்கு சுலபமாக உணரவைத்து விடுவார், என்னை முழுதாக மாற்றி இருக்கிறார். சிரிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டனர். அது கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போது வரும் பாராட்டுக்கள் மகிழ்ச்சியாக உள்ளது.

படப்பிடிப்பு ஜாலியாக இருக்கும் ஆனால் மாரி செல்வராஜ் அவர் குறிக்கோளை விட்டு விலகவே இல்லை. படம் பார்த்து அனைவரும் எனக்கு போன் செய்தனர், முதலமைச்சர் ஸ்டாலின் சார் எனக்கு போன் செய்து வாழ்த்துக் கூறினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்தார், எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு வாய்ப்பை இழக்க பார்த்தேன் அதற்கு உதய் சாருக்கு தான் நன்றி கூற வேண்டும்.

படப்பிடிப்பு முடிந்தது போக நான் பாடல் பாடியதும் ஒரு நல்ல அனுபவம் தான், இந்த படத்தை உலகத்தில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். மொத்த படக்குழுவும் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர், எங்கள் அனைவரையும் தாண்டி ஒரு படி மாரி செல்வராஜ் உழைப்பைக் கொடுத்தார். இந்தப் படம் அனைவருக்கும் பிடித்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

CM Stalin and Rajini appreciated me says Vadivelu

More Articles
Follows