தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் பேசியதாவது…
“வசந்த பாலன் சினிமாவை மிகவும் நேசிப்பவர் என்பது மட்டுமில்லாமல் திரையுலகை பற்றி அறிந்து வைத்திருப்பவர். மிகவும் கடின உழைப்பாளி ஆன அவர் சிறந்த படைப்புகளை ஏற்கனவே தந்துள்ளார். அந்த வரிசையில் ‘அநீதி’யும் இடம்பெறும் என்று நான் நம்புகிறேன்.
தமிழ் சினிமாவை உலக கவனம் பெற வைத்துள்ள இயக்குநரான ஷங்கர் இப்படத்தை வெளியிடுவது கூடுதல் பலம். அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளார்கள். ‘அநீதி’ மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் எழில் பேசியதாவது…
“இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மட்டும் பாடல்கள் மிகவும் அருமையாக அமைந்துள்ளன. இப்படத்தை தயாரித்துள்ள வசந்த பாலன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு வாழ்த்துகள். ‘அநீதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசியதாவது…
“ஷங்கர் சாரிடம் பணியாற்றிய காலத்தில் இருந்தே வசந்த பாலனும் நானும் நண்பர்கள். வசந்த பாலனுக்கு நண்பர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதன் காரணம் என்னவென்றால் நண்பர்களின் மீது அவர் மிகவும் பாசம் காட்டுவார்.
‘அங்காடி தெரு’வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி நான் தான் அதில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது அன்புக்கு கட்டுப்பட்டு நான் அப்படத்தில் நடித்தேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையை திரையில் காட்டுவது அனைவருக்கும் கைவந்ததல்ல, வசந்த பாலனுக்கு இது மிகவும் அழகாக வருகிறது. தொடர்ந்து பல்வேறு மிகச் சிறந்த படங்களை அவர் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
Shankar added more value to Aneethi says Chitra Laxman