தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.
தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மட்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் கூறியதாவது…
“இயக்குநர் வசந்த பாலன் இயக்குநர் ஷங்கரிடம் இருந்து வந்தவர். ‘அநீதி’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கு வசந்தபாலனின் முந்தைய திரைப்படங்களே சான்று. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று சொல்வார்கள், இங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தயாரிப்பாளர்கள் ஆகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அதன் வெற்றி விழாவிலும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.
Friends became Producers for friend is good says Bhagyaraj