தலைவர் 170 – 171 – 172 பட டைரக்டர்ஸ் அப்டேட்.; ரஜினியுடன் இணையும் KGF Team

தலைவர் 170 – 171 – 172 பட டைரக்டர்ஸ் அப்டேட்.; ரஜினியுடன் இணையும் KGF Team

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதன் பின்னர் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் இஸ்லாமியராக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன்பின்னர் ‘ஜெய் பீம்’ பட புகழ் தா.செ. ஞானவேல் இயக்கவுள்ள ‘தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினி.

லைகா தயாரிக்கும் இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளது. இதிலும் ரஜினி இஸ்லாமியராக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது என்பது இதுவரை முடிவாகவில்லை.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அல்லது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் / மைத்ரி மூவிஸ் மேக்கர் / தில் ராஜூ தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘தலைவர் 172’ படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ’கேஜிஎப்’ & ’காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ரஜினி மற்றும் சுதா கொங்காராவை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவன தரப்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடந்தததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

KGF team joins Rajinikanth for his next

‘விளம்பரம்’ வெப்சீரிஸுக்கு திட்டமிட்டோம்.. மயில்சாமி மறைவால் குறும்படமானது – ராகுல்

‘விளம்பரம்’ வெப்சீரிஸுக்கு திட்டமிட்டோம்.. மயில்சாமி மறைவால் குறும்படமானது – ராகுல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் இயக்கத்தில் மயில்சாமி மற்றும் ரேகா நாயர் நடித்திருந்த குறும்படம் ‘விளம்பரம்’.

இந்த குறும்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் A.ராகுல் பேசும்போது,

“இந்த படத்தை ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸ் ஆக உருவாக்குவதற்கு தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இந்த முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த இரண்டாவது நாளில் மயில்சாமி இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து எவ்வாறு இந்த படத்தை முன்னெடுத்துச் செல்வது என்கிற தயக்கத்திலேயே சில நாட்கள் இருந்தோம். எடுத்தவரை இதை மட்டுமே ஒரு குறும்படமாக வெளியிடலாம், மக்கள் முன் கொண்டுபோய் சேர்த்து விடலாம் என தயாரிப்பாளராக என் தந்தை ஆலோசனை கூறினார்.

அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இதை குறும்படமாக மாற்றினோம். மயில்சாமி சாரிடம் இந்த கதையை கூறியபோது அவர் என்னிடம், எல்லோரும் எனக்கு பெரும்பாலும் ஒரே விதமான கதாபாத்திரங்களையே கொடுத்து நடிக்க வைக்கின்றனர்.

இதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய பண்ண வேண்டும்.. நிச்சயமாக நாம் இருவரும் இணைந்து ஜெயிப்போம் என்று சொன்னார்.. அவர் சொன்னது போல ஜெயித்து விட்டோம்” என்று கூறினார்.

நடிகர்கள்

மயில்சாமி, ரேகா நாயர், சுகைல், இப்ராஹீம்,ராம் மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு ; அசோக்குமார்

இயக்குனர் ; A.ராகுல்

இசை ; கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு ; அசோகர்

படத்தொகுப்பு ; இம்ரான்.S

கலை ; பிரதீப்

மக்கள் தொடர்பு ; M.P.ஆனந்த்

Due to sudden demise of mayil samy vilambaram becomes short film – Rahul

விளம்பரங்கள் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.; ஆர்வி. உதயகுமார் அட்வைஸ்

விளம்பரங்கள் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.; ஆர்வி. உதயகுமார் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் இயக்கத்தில் மயில்சாமி மற்றும் ரேகா நாயர் நடித்திருந்த குறும்படம் ‘விளம்பரம்’.

இந்த குறும்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

“இந்த குறும்படத்தை பார்க்கும்போது இயக்குனர் ராகுல் மிகச்சிறந்த இயக்குனராக வரப்போகிறார் என்பது தெரிகிறது.

என்னுடைய முதல் படமான உரிமை கீதம் படத்தில் இருந்து எனக்கும் மயில்சாமிக்கும் 35 வருட கால நட்பு உண்டு.

1993ல் டிவி சேனல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து வருடத்திற்கு நான்கு நிதி நிறுவனங்களாவது விளம்பரங்கள் மூலம் மக்களை கவர்ந்து வந்தன.

வருடந்தோறும் ஏதாவது ஒரு நிதி நிறுவனம் மக்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. விளம்பரங்களை நம்புவதை விட அதை ஆராய்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று கூறினார்.

We should aware Advertisements says director RV Udhayakumar

சினிமாவுக்கு மட்டும் ஸ்க்ரிப்ட் கேட்குறீங்களே.; – சீறிய சித்ரா லட்சுமணன்

சினிமாவுக்கு மட்டும் ஸ்க்ரிப்ட் கேட்குறீங்களே.; – சீறிய சித்ரா லட்சுமணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் இயக்கத்தில் மயில்சாமி மற்றும் ரேகா நாயர் நடித்திருந்த குறும்படம் ‘விளம்பரம்’.

இந்த குறும்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது,

“நல்ல கருத்தை சொல்லும் விதமாக இந்த விளம்பரம் என்கிற குறும்படம் உருவாகியுள்ளது. இது தற்போது நாட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான்.

சினிமாவில் நடிப்பதற்கு முன் முழு ஸ்கிரிப்டையும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கதை, கதாபாத்திரம் பற்றி தெளிவு வந்த பின்னர் தானே நடிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்..

அப்படி என்றால் விளம்பரத்திலும் நடிக்கும் போது அதை பின்பற்ற வேண்டும் என்பது அதற்கும் பொருந்தும் தானே..? மயில்சாமி எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தவர் என பெயர்பெற்றவர். அவர் இறந்ததற்கு பின்னாடி வரும் இந்த குறும்படம் கூட சமுதாயத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் விதமாக விழிப்புணர்வுடன் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்.

Chitra Lakshmanan speech at Vilambaram event

MGR பெயரைச் சொல்லி அமைச்சரானவர்கள் அவரை மறந்துட்டாங்க.. – பேரரசு

MGR பெயரைச் சொல்லி அமைச்சரானவர்கள் அவரை மறந்துட்டாங்க.. – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் இயக்கத்தில் மயில்சாமி மற்றும் ரேகா நாயர் நடித்திருந்த குறும்படம் ‘விளம்பரம்’.

இந்த குறும்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் பேரரசு பேசும்போது,

“வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படி நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்பிபி, விவேக், அடுத்து மயில்சாமி உள்ளிட்ட சிலரின் மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன.

நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வை தந்தன.

மயில்சாமி ஒரு சிவ பக்தர் மட்டுமல்ல அவர் தீவிரமான எம்ஜிஆர் பக்தரும் கூட. ஆனால் அந்த இருவருக்குமே அவர் உண்மையாக இருந்தார்.

எம்ஜிஆர் பெயரைச் சொல்லி முதலமைச்சர், அமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் பின்னால் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டார்கள். ஆனால் தான் இறக்கும் வகையில் எம்ஜிஆரின் உண்மை தொண்டனாகவே அவர் பெயர் சொல்லும் விதமாக வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி.

அதுமட்டுமல்ல தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார். முதல் படத்திலேயே சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்ன இயக்குனர் என இந்த குறும்பட இயக்குனர் ராகுல் தனது நெஞ்சை நிமிர்த்தி அமரலாம்..

விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். காரணம் மக்கள் உங்களை நம்புகிறார்கள். முதலில் நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அந்த பொருளை ஒரு மாதம் வரை நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.. சரியில்லாத ஒன்றை சரி என நம்மை நம்பும் மக்களிடம் கொடுப்பது நம்பிக்கை துரோகம்” என்று கூறினார்.

Director Perarasu talks about TN Ministers

எங்க அப்பாவே மிகப்பெரிய விளம்பரம் தான்.; மயில்சாமி மகன் அன்பு உருக்கம்

எங்க அப்பாவே மிகப்பெரிய விளம்பரம் தான்.; மயில்சாமி மகன் அன்பு உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் இயக்கத்தில் மயில்சாமி மற்றும் ரேகா நாயர் நடித்திருந்த குறும்படம் ‘விளம்பரம்’.

இந்த குறும்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மயில்சாமியின் மகன் அன்பு பேசும்போது…

“இந்த படத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என தயங்க வேண்டாம். இந்த படத்திற்கு எங்க அப்பாவே மிகப்பெரிய விளம்பரமாக இருக்கிறார். என்னுடைய தந்தை படப்பிடிப்பு தளங்களில் ஒரு இடத்தில் கூட உட்கார மாட்டார். சுற்றிக்கொண்டே இருப்பார்.. எல்லோர் மீதும் அன்பு காட்டுவார்.

என் அப்பாவின் வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக்கொண்டது பெரியவங்க சொல்ற பேச்சை கேளுங்க.. உங்களுக்கு என தனியாக நினைவுகளை ஞாபகங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்பது தான்” என்று கூறினார்.

Anbu praises his father Mayil Samy at Vilambaram event

More Articles
Follows