வா மச்சி நான் கூட்டிட்டு போறேன்.; ஜெயம் ரவியை நள்ளிரவு 3 மணிக்கு அழைத்த கார்த்தி

வா மச்சி நான் கூட்டிட்டு போறேன்.; ஜெயம் ரவியை நள்ளிரவு 3 மணிக்கு அழைத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்தினம் தயாரித்து இயக்கி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ‘பொன்னி நதி…’ என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி பேசியபோது,

உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், நான், கார்த்தி, ஜெயராம் சார் மூவரும் சேர்ந்து நடிக்கும் போது மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மக்களின் ஆரவாரம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டு தான் நடித்தோம்.

ஆனால், இன்று சில காட்சிகளுக்கு நீங்கள் தந்த எதிர்வினைகள் ஒன்றே போதும். மிகவும் சந்தோஷமாக உள்ளேன். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளனர். நான் மிகவும் மதிப்பது தமிழ் ரசிகர்களை தான்.

ஏனென்றால், உலக சினிமா பார்க்கும் ரசிகர்களை நான் கடந்து வந்துள்ளேன். அவர்கள் அனைவரும் நல்ல படத்திற்கு, நல்ல இயக்கத்திற்கு, நல்ல இசைக்கு என்று தனி தனியாகத் தான் கைத் தட்டுவார்கள். ஆனால், தமிழ் ரசிகர்கள் மட்டும் தான் நல்ல காட்சிக்காக கைத் தட்டி வரவேற்பளிப்பார்கள்.

அப்படி பார்த்தால் இந்த ஒரு பாட்டுக்கு மட்டுமல்ல படத்திலுள்ள ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கைத்தட்ட வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்.

நமக்கு பிடித்த கார்த்தியும், ஏ.ஆர்.ரகுமான் சாரும், ரவிவர்மனும், பிருந்தா மாஸ்டரும் சேர்ந்து காட்சிப்படுத்திய பாடல் இது. இது நன்றாக வராமல் இருக்க எவ்வித வாய்ப்புகளும் இல்லை. நானும் கார்த்தியும் ஒவ்வொரு நாளும் எந்தளவு கஷ்டப்பட்டோம் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இன்று ஜெயராம் சாரும் அதை சொன்னார். குதிரைப்பயிற்சி செய்வதற்காக எங்களை 3 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார்கள். எனக்கு குதிரை என்றால் பயம்.

அப்போதெல்லாம் கார்த்தி தான் என்னை அழைத்து “வா மச்சி நான் கூட்டிட்டு போறேன்” என சொல்லி என்னை அழைத்து செல்வார். கார்த்தி எனக்கு மிகவும் உதவி செய்தார். எனக்கு ஊக்கமளித்தார். கார்த்தி போன்ற ஒரு நண்பன் கிடைப்பது கடினம்.

ஒருநாள் நான் ஹோட்டலில் இருக்கும் போது கார்த்தி குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. அதன் பின் சிறிது சுயநலமாக சிந்தித்தேன். கார்த்தியே குதிரையிலிருந்து விழுந்துவிட்டார் என்றால் நான் என்ன செய்யப் போகிறேன்.

ஆனால், மணி சார் அதை வேறு மாதிரி சிந்திப்பார். “என் பாடல் உனக்கு பிடிக்கவில்லை, அதனால் என்னைக் கீழே தள்ளிவிட்டாய்” என்று வசனம் சேர்த்துக் கொள்கிறேன் என்பார். இப்படத்தில் நிறைய ஹீரோக்கள் உள்ளோம்.

நான், கார்த்தி, ஜெயராம் சார், விக்ரம் பிரபு, விக்ரம் சார், சரத் சார். இவர்கள் எல்லோரும் திரையில் தெரிபவர்கள். இப்போது, திரைக்கு பின்னால் இருக்கும் ஹீரோக்களைப் பற்றி பேசுகிறேன்.

முதலாவதாக மணி சார், என்னுடைய ஹீரோவும் நம் அனைவருடைய ஹீரோவும் அவர் தான். இந்த படத்தை பலர் எடுப்பதற்கு ஆசைப்பட்டார்கள். பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட இப்படத்தை எடுக்க நினைத்தார்கள். ஆனால், முடியவில்லை. இப்போது அதை மணி சார் மட்டுமே சாத்தியமாக்கியுள்ளார்.

இரண்டாவது ஹீரோ லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் சார். நாம் அனைவராலும் பேசப்பட்ட படம் “சந்திரலேகா”. அதன் பின் அதை விட பிரமாண்டமாக நாம் ஒரு படத்தை பார்க்கப் போகிறோம் என்றால், அதற்கு சுபாஷ்கரன் சார் மட்டும் தான் ஒரே காரணம்.

இந்த படமும் சந்திரலேகா போல் பேசப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். மூன்றாவது ஹீரோ ரவிவர்மன் சார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் செதுக்கியுள்ளார் என்று சொன்னேன். அதை நீங்கள் படம் வெளியானவுடன் பார்க்கப் போகிறீர்கள். தோட்டா தரணி சார், இப்படத்தில் நிறைய கிராபிக்ஸ் இருந்தாலும், செட் போடுவதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இவர்களை போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியது எங்களுக்கு கிடைத்த பெருமை என்று தான் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்.

அதன் பின் அன்றும் இன்றும் எப்போதும் ஹீரோவாக இருக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சார். கார்த்தியும் ஏ.ஆர்.ரகுமான் சாருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற கனவு இப்படத்தின் மூலம் தான் நிறைவேறியுள்ளது. மேலும், ஜெயராம் சாருடன் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது. அவர் எனக்கு குரு சாமி, கடவுள் போன்றவர். அவருடன் இணைந்து சினிமா சம்பந்தமாக பேசிய விஷயங்கள் அனைத்தும் நான் எப்போதும் மறக்க மாட்டேன்.

இந்த படம் எனக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது. சொல்லப்போனால், எங்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இது மிகவும் சாதாரணமான படம் கிடையாது. எத்தனை முறை பேசினாலும் இதை நாங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இப்படத்திற்காக நாங்கள் நிறைய உழைத்துள்ளோம். நாங்கள் மட்டுமல்ல பல ஆயிரம் பேர் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். சிலர் தொழில் நுட்பத்துடன் படம் எடுப்பார்கள், சிலர் உணர்வுபூர்வமாக படம் எடுப்பார்கள், அதை எல்லாம் நாம் பார்த்துள்ளோம்.

ஆனால், பொன்னியின் செல்வன் உங்களுக்காக எடுத்த ஒரு படம். ஒவ்வொரு காட்சியும் உங்களை நினைத்துக் கொண்டு தான் உருவாக்கியுள்ளோம். பொன்னியின் செல்வன் புத்தகத்தை மனதில் சுமந்துக் கொண்டு எடுத்த ஒரு படம். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம். கூடிய விரைவில் படம் வெளியாகவுள்ளது. இசைவெளியீட்டு விழாவில் மீண்டும் உங்களை சந்திக்கிறோம். அனைவருக்கும் நன்றி” என்றார் ரவி.

Karthi and Jayam Ravi shared their working experience in Ponniyin Selvan

Subaskaran Presents
“PONNIYIN SELVAN-1”
#PS1
Artist & technician list:

Vikram
Jayam Ravi
Karthi
Aishwarya Rai Bachchan
Trisha
Aishwarya Lekshmi
Sobhita Dhulipala
Prabhu
Sarath Kumar
Jayaram
Prakash Raj
Jayachitra
Rahman
Vikram Prabhu
Ashwin Kakumanu
Lal
Parthiban
Riyaz Khan

Crew List

Director – Mani Ratnam
Produced By – Madras Talkies
Produced By – Lyca Productions
Music – AR Rahman
Cinematographer – Ravi Varman
Production Design – Thota Tharrani
Dialogues – Jeyamohan
Executive Producer – Siva Ananth
Choreography – Brinda
Music Rights – Tips
Costume – Eka Lakhani
HMU – Vikram Gaikwad
Jewellery – KishanDas Jewellery
VFX – NYVFXWaala
DI – Red Chillies Color
PRO: Johnson
&
OTT Platform – Prime Video In

Subaskaran Presents
“PONNIYIN SELVAN-1”
#PS1

ஜெயராம் 6 1/2 அடி.. ஆழ்வார்கடியார் கேரக்டருக்காக 5 1/2 அடி ஆனார்.; ‘பொன்னியின் செல்வன்’ ரகசியம் சொன்ன கார்த்தி

ஜெயராம் 6 1/2 அடி.. ஆழ்வார்கடியார் கேரக்டருக்காக 5 1/2 அடி ஆனார்.; ‘பொன்னியின் செல்வன்’ ரகசியம் சொன்ன கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்தினம் தயாரித்து இயக்கி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ‘பொன்னி நதி…’ என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது

“உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயராம் சார் கூறியதுபோல, இது நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும்.

இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார் தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம்.

ஜெயராம் சாருடன் பணியாற்றுவது பாக்கியம். அவர் மட்டும் தான் நடிகன். நாம் வெறும் ‘ந’ மட்டும் தான் என்று நானும், ஜெயம் ரவியும் பேசிக் கொள்வோம். அந்தளவுக்கு திறமையான நடிகர் அவர்.

ஆழ்வார்கடியார் நம்பி 51/2 அடி உயரம். ஆனால், ஜெயராம் சார் 61/2 அடி, 51/2 அடியாக மாறுவதற்கு ஒரு விஷயம் செய்திருக்கிறார். அந்த ரகசியத்தை நான் இப்போது கூற மாட்டேன். ஆனால், அது கற்பனையிலும் நினைக்கமுடியாதது. அவருடன் நாங்கள் நடித்தது ஆசிர்வாதம் தான்.

பொன்னி நதி, நதிகளில் தான் நாகரிகம் அடைந்தது. நாம் பரிணாம வளர்ச்சியடைந்ததும் நதியில் தான். அந்த காலத்தில் பொன்னி நதி என்று அழைக்கப்பட்டது. இன்று காவிரி என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். ஒரு நதி இறுக்கமாகவும், வேகமாகவும் இருக்கும். இன்னொன்று மேலே மெதுவாக செல்லும் ஆனால் கீழே வீரியம் அதிகமாக இருக்கும்.

இப்படி ஒவ்வொரு நதிக்கும் ஒரு குணங்கள் இருக்கின்றது. நதிகள் கவிஞர்களை ஊக்குவித்தும், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு உந்துசக்தியாகவும் இருந்திருக்கின்றது. பொதுவாக இந்த படத்தை எவ்வளவு போராடினாலும் எடுத்து முடிக்க முடியாது என்ற பலபேர் கூறினார்கள். நாங்கள் படத்தை ஆரம்பித்த புறகு , கோவிட் வருகிறது.

ஆனால், ஒரு நதிக்கு கடல் எங்கு இருக்கிறது என்று எப்படி தெரியுமோ, அதுபோல மணி சாருக்கு இந்த படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது தெரியும் என்கிற நம்பிக்கை இருந்தது. நாங்கள் எல்லோரும் மணி சாருடன் இருந்து பணியாற்றினோம். 120 நாட்களிலேயே பொன்னியின் செல்வன் – 1 மற்றும் பொன்னியின் செல்வன் – 2 இரண்டையும் முடித்துவிட்டார்.

120 நாட்களில் 2 படங்களை எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது யாரும் நம்பமாட்டார்கள். ஜெயராம் சார் கூறியது போல விடியற்காலை 2.30 மணிக்கு மேக்கப் அப் போடுவதற்கு தயாராக இருப்போம்.

ஆனால், அதற்குமுன் எங்களுக்கு மேக்கப் போடுவதற்கு 30 பேர் தயாராக இருப்பார்கள். யாரும் அதிகளவில் தூங்கியதில்லை. புத்தகம் படித்து விட்டு அதை நினைத்துக் கொண்டு படப்பிடிப்பிற்குச் சென்றால், அதைவிட அழகாக மணி சார் அதை உருவாக்கி வைத்திருப்பார். இப்படத்தில் பணியாற்றியது கனவு போல இருந்தது.

இதுபோன்று ஒரு படம் எடுப்பதற்கு புதிதாக ஒரு மனிதன் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வரவேண்டும். இதுபோன்ற படத்தை எடுக்க வேண்டும் என்று கற்பனை செய்வதற்கு 10 வருடங்கள் ஆகும். ஆனால், மணி சாரால் மட்டுமே அதை செய்ய முடியும்.

பாடல்களுக்கு இளங்கோ கிருஷ்ணா என்ற புதியவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பாடல் வரிகளைக் கேட்கும்போது சோழ நாட்டிற்குள் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் சார் இப்பாடலைப் பாடியிருக்கிறார். அதைக் கேட்கும்போது மெய்சிலிர்த்தது.

இப்போது நீங்கள் கூச்சலிடும்போதும் மெய்சிலிர்க்கிறது. உங்கள் அன்பிற்கு நன்றி.

இவ்வளவு பெரிய படத்தை எடுத்து சாதித்திருக்கிறோம் என்றால் அதற்கு லைகா புரடக்ஷன்ஸ் சுபாஸ்கரனுக்குப் பெரிய நன்றி. சுபாஸ்கரன் சார் ஒரு சுவாரசியமான மனிதர். தமிழ் சினிமாவை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல எல்லோரும் முயற்சி செய்வார்கள்.

ஆனால், இவர் பணமும் சேர்த்து செலவழிப்பார். மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். மலேசியாவில் நடந்த ஒரு விழாவில் முதல்முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பாட்டு மிக சிறப்பாக உள்ளது. முற்றிலும் மாயமாக உள்ளது. நாங்க எடுத்ததை விட இப்போது பார்க்கும்போது சிறப்பாக உள்ளது. அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசை தான் காரணம். லைகா நிறுவனம் சுபாஸ்கரன் சாருக்கு நன்றி. இரவு 10 மணிக்கு நாங்கள் விமானம் ஏறவேண்டும் என்று கேட்டபோது, மலேசியா விமான நிலையத்தில் வெறும் அரைமணி நேரத்தில் தொலைபேசி வாயிலாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

எங்களுக்காக 15 நிமிடம் விமானம் தாமதம் ஆகும் அளவிற்கு புதிய விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். சுபாஷ்கரன் சார் மிகவும் அன்பான மனிதரும் கூட. அந்த அன்பு சினிமா மீது மட்டுமல்லாமல் அவருடன் பழகும் அத்தனை பேரிடமும் அந்த அன்பை வெளிப்படுத்துவார். இந்த படத்தை பேரார்வத்துடன் தயாரித்தார்.

இப்படத்தை அவருடன் அமர்ந்து பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். இந்த படம் அவருடைய கனவு. மேலும், பல விஷயங்கள் பேசவேண்டும். ட்ரைலர் வெளியீட்டின் போது நான் அதை பேசுகிறேன். அனைவருக்கும் நன்றி. இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இருப்பது மிக சிறந்த அனுபவமாக உள்ளது என்றார்.

Karthi talks about Jayaram character in Ponniyin Selvan

Subaskaran Presents
“PONNIYIN SELVAN-1”
#PS1
Artist & technician list:

Vikram
Jayam Ravi
Karthi
Aishwarya Rai Bachchan
Trisha
Aishwarya Lekshmi
Sobhita Dhulipala
Prabhu
Sarath Kumar
Jayaram
Prakash Raj
Jayachitra
Rahman
Vikram Prabhu
Ashwin Kakumanu
Lal
Parthiban
Riyaz Khan

Crew List

Director – Mani Ratnam
Produced By – Madras Talkies
Produced By – Lyca Productions
Music – AR Rahman
Cinematographer – Ravi Varman
Production Design – Thota Tharrani
Dialogues – Jeyamohan
Executive Producer – Siva Ananth
Choreography – Brinda
Music Rights – Tips
Costume – Eka Lakhani
HMU – Vikram Gaikwad
Jewellery – KishanDas Jewellery
VFX – NYVFXWaala
DI – Red Chillies Color
PRO: Johnson
&
OTT Platform – Prime Video In

‘திருச்சிற்றம்பலம்’ இசை விழாவிற்கு வீல் சேரில் வந்த நடிகை நித்யா.; ஏன்.??

‘திருச்சிற்றம்பலம்’ இசை விழாவிற்கு வீல் சேரில் வந்த நடிகை நித்யா.; ஏன்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’.

இதில் ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நாயகிகளாக தனுஷுடன் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் படங்களுக்கு இசை அமைக்காமல் இருந்த அனிருத் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இணைந்திருப்பதால் இந்தப் படத்திற்கும் இந்த படத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது.

அப்போது, நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்து கலந்துகொண்டார்.

“படியில் இருந்து தவறி விழுந்ததால் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாலும் அந்த காயம் காரணமாக, அவரால் நடக்க முடியவில்லை.” என தெரிய வந்துள்ளது.

Nithya Menon came in wheel chair for Thiruchitrambalam audio launch

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை விஜய்யுடன் இணைக்கும் சன் பிக்சர்ஸ்

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை விஜய்யுடன் இணைக்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் சிவா.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா என அழைக்கப்பட்டார்.

இதன் பிறகு ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ எனத் தொடர்ந்து அஜித் படங்களை இயக்கி அவரின் ஆஸ்தான இயக்குனர் ஆனார் சிவா.

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவா.

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு சூர்யாவின் படத்தை சிவா இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா படத்தை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக மீண்டும் சிவா ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் ) வந்துள்ளன.

இந்த படத்தில் நடிகர் விஜய் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

ஆக சன் பிக்சர்ஸ் – விஜய் – சிவா ஆகியோரது கூட்டணி உருவானால் ரசிகர்களிடையே நிச்சயம் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

New combo in Kollywood Vijay Sun pictures Siva

வசூலிலும் ‘தி லெஜண்ட்’ தான்.; பாக்ஸ் ஆபீசில் பட்டைய கிளப்பும் சரவணன்

வசூலிலும் ‘தி லெஜண்ட்’ தான்.; பாக்ஸ் ஆபீசில் பட்டைய கிளப்பும் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

800 விளம்பர படங்களுக்கு மேல் இயக்கிய ஜே டி & ஜேரி இயக்கத்தில் கடந்த வாரம் ஜூலை 28ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தி லெஜண்ட்.

சென்னையில் பிரபலமான தொழிலதிபர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் இந்த படத்தை தயாரித்து முதன்முறையாக நாயகனாக அறிமுகமானார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர், பிரபு, விஜயகுமார், லதா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 650-க்கும் அதிகமான திரைகளிலும், நாடு முழுவதும் 1150 திரைகளில் வெளியானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ‘தி லெஜண்ட்’ தமிழகத்தில் முதல் நாளில் ரூ.2 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான பான் இந்தியா படமான இப்படம் உலகம் முழுக்க ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Saravanan starrer The Legend movie box office collection

வேற லெவல் அப்டேட் : ரஜினி – விஜய் ஆகியோருடன் கைகோர்க்கும் கமல்

வேற லெவல் அப்டேட் : ரஜினி – விஜய் ஆகியோருடன் கைகோர்க்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்து தற்போது வரை சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இது கமல் நடிப்பில் உருவான 232 வது படமாக இருந்தாலும் அவர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எடுக்கப்பட்ட 52வது திரைப்படமாகும்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார் கமல்.

இதனையடுத்து உதயநிதி நடிக்க உள்ள படத்தை தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர்.

இது கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படைப்பாகும்.

இந்த நிலையில் விரைவில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோரது படங்களையும் தயாரிக்க கமல்ஹாசன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, மாதவன் நடித்த ‘நள தமயந்தி’, சீயான் விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களையும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal plans to produce Rajini and Vijay movies

More Articles
Follows