நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி மரணம்.; வெளிநாட்டில் என்ன நடந்தது.?

நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி மரணம்.; வெளிநாட்டில் என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ் லீடன்’, ‘ஜானி’, ‘லால்குடி டேஸ்’ போன்ற கன்னடப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் விஜய் ராகவேந்திரா.

இவரது மனைவி ஸ்பந்தனா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

விஜய் ராகவேந்திரா- ஸ்பந்தனா தம்பதிக்கு சவுர்யா என்ற மகன் உள்ளார்.

விஜய் ராகவேந்திரா கன்னட நடிகர் ராஜ்குமார், புனித் குமாரின் பேரனானவர்.

நடிகர் விஜய் ராகவேந்திரா குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அங்கு ஸ்பந்தனாக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பந்தனாவின் உடல் இன்று பெங்களூர் கொண்டுவரப்படும் என்றும் அங்கு அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Kannada Actor Vijay Raghavendra’s Wife Spandana Dies

சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் ‘ஜெயிலர்’.. 345 காட்சிகள் ஹவுஸ்புல்.; ரஜினி இமயமலை பயணம்

சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் ‘ஜெயிலர்’.. 345 காட்சிகள் ஹவுஸ்புல்.; ரஜினி இமயமலை பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் நள்ளிரவு 1 மணி காட்சி அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சியின் போது நடந்த அசம்பாவிதங்கள் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே எந்த புது படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை.

தற்போது இதே நடைமுறை தான் ‘ஜெயிலர்’ படத்திற்கும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் காட்சிகள் 8 மணி 9 மணி அளவில் தான் தொடங்குகின்றன.

ஆனால் கேரளா கர்நாடகா ஆந்திராவில் அதிகாலை 6:00 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெய்லர் ரிலீஸ் அன்று 345 காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

இதனிடையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி புதன்கிழமை ‘ஜெயிலர்’ ரிலீஸ்க்கு முன் ஒரு நாள் முன்னதாக ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Jailer First day all shows full Rajini visits Himalayas

JUST IN விஜயகாந்த் விஜய் சூர்யா படங்களின் இயக்குநர் சித்திக் கவலைக்கிடம்

JUST IN விஜயகாந்த் விஜய் சூர்யா படங்களின் இயக்குநர் சித்திக் கவலைக்கிடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத் திரையுலகில் பிரபலமான இயக்குனர் சித்திக் இஸ்மாயில்.

இவர் மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன படங்களை தமிழில் ரீமேக் செய்து இயக்கி உள்ளார்.

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயாணி் இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளை இன்றளவும் நம்மால் மறக்க முடியாது.

அதே போல விஜயகாந்த், வடிவேலு நடித்த ‘எங்கள் அண்ணா’ படத்தையும் இவரே தமிழ் இயக்கி இருந்தார். இந்த படத்திலும் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தன.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துக் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வயது 69 ஆகிறது.

கூடுதல் தகவல்கள்…

1989 ஆம் ஆண்டில் முதல் மலையாள படத்தை இயக்கினார். 1984 ஆம் ஆண்டு சஜிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார் இந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் மலையாளத்தில் திலீப் & நயன்தாரா நடித்த ‘பாடிகாட்’ என்ற படத்தை இயக்கினார். இதன் பின்னர் இதே படத்தை தமிழில் விஜய்யை வைத்து ‘காவலன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

அதன் பின்னர் ஹிந்தியில் 2011 ஆண்டில் ஹிந்தியில் சல்மான் கான் நடித்த பாடிகாட் என்ற படத்தையும் இயக்கி பாலிவுட்டில் நுழைந்தவர் சித்திக்.

2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் மம்முட்டி நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.

இதே படத்தை தான் தமிழில் அரவிந்தசாமி மற்றும் அமலாபால் நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். இந்த படம் தமிழில் 2018 ஆம் ஆண்டில் வெளியானது.

இவர் மலையாளத்தில் இயக்கிய பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மோகன்லால் வைத்து பிக் பிரதர் என்ற படத்தை இறுதியாக இயக்கி இருந்தார்.

Director Siddique hospitalised following heart attack

ஈழத்துக் குயில் சாந்தரூபி பாடி இசையமைத்த ‘என்னுயிர்க் கீதங்கள்’ விரைவில்..

ஈழத்துக் குயில் சாந்தரூபி பாடி இசையமைத்த ‘என்னுயிர்க் கீதங்கள்’ விரைவில்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிஞர் ‘சாந்தரூபி’ அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர். ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம் என்கிறார் கவிஞரும், இசையமைப்பாளரும், பாடகியுமான ‘சாந்தரூபி’ அம்பாளடியாள்.

அம்பாளடியாள்

பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் ஆற்றல் கொண்டவர்.

அம்பாளடியாள்

“என்னுயிர்க் கீதங்கள்” என்ற தலைப்பில், 50′ பாடல்கள் இசையமைத்து, இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையில், இயக்குனர்கள் பேரரசு, செந்தில்நாதன், ராசி அழகப்பன், இசையமைப்பாளர்கள் சௌந்தர்யன், ஏ.ஆர்.ரெஹானா, பாடகர் மூக்குத்தி முருகன், கண்ணதாசன் பதிப்பகம் நிறுவனர் காந்தி கண்ணதாசன், பேச்சாளர் ஜான் தன்ராஜ் , கம்பம் குணா ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.

அம்பாளடியாள்

பிஆர்ஓ கோவிந்தராஜ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து, வழங்கினார்!

அம்பாளடியாளின் தமிழ் புலமையும், குரல் வளமும் கேட்ட அத்தனை இயக்குனர்களும், அத்தனை இசையமைப்பாளர்களும் வியந்து, பாராட்டினார்கள். பாடல்கள் எழுதவும், பாடவும் தமிழ் திரையுலகில் தற்போது வாய்ப்பு பெற்றுள்ளார்.

விரைவில் இந்த ஈழத்து குயிலின் குரல், வெற்றிப் படங்களில் ஒலிக்கும்.

Santharoobi ambaladiyaal new album Ennuyir Geethangal 50

‘குஷி’ படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ..

‘குஷி’ படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள படம் ‘குஷி’.

இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கு இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறது படக்குழு.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

‘குஷி’ படத்தின் டிரைலர் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

‘குஷி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஷி

Vijay Deverakonda and Samantha in ‘Kushi’ as trailer date announcement

பாரம்பரிய கலையை தொடரும் கலைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்… – கார்த்தி

பாரம்பரிய கலையை தொடரும் கலைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்… – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன.

பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட பாடல்கள் உருவாகி வரும் சூழலில் நமது நாட்டுப்புற கலைகளையும் நம் சொந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது ‘ஊருசனம்’ என்கிற தனி இசை பாடல்.

இந்த பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து இந்த இசை ஆல்பத்தை தயாரித்தும் உள்ளார் அட்ராம் (ATRam). முத்துச்சிற்பி மற்றும் ரேப்பர் ஃபனோஹா இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்த பாடலை கண்கவரும் வகையில் இயக்கியுள்ளார் முகின் ஜெயராஜ். இந்தப் பாடலுக்கான நடனத்தை கோகுல் வடிவமைத்துள்ளார். ட்ரெண்ட் மியூசிக்கில் வெளியாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த பாடலை பார்த்துவிட்டு நடிகர் கார்த்தி, தனது மகிழ்ச்சியையும் இந்த இசைக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது…

“நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் இன்றைய இளம் கலைஞர்களும் நமது மக்களும் கொண்டாடுவதை பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக உணர முடிகிறது. பல தலைமுறைகளாக கடந்து வரும் நம் முன்னோர்களின் சொத்தான பாரம்பரிய கலை வடிவத்தை இப்போதும் தொடர்ந்து பயிற்சி செய்து வரும் கலைஞர்களை பார்த்து தலை வணங்குகிறேன்.

இந்தப் பாடலை வடிவமைத்த விதமும் அதில் அழகாக நாம் பாரம்பரியத்தை வெளிப்படுத்திய விதமும் சிறந்த ஒரு முயற்சி” என்று கூறியுள்ளார் கார்த்தி.

ஊருசனம்

Young artists celebrates native folk art says Karthi

More Articles
Follows