தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை முறைப்படுத்த விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து அவர்கள் சொல்லும் தேதிகளில் படத்தை வெளியிட சொல்கின்றனர்.
ஆனால் இடையில் ஏற்பட்ட (தனுஷ், விஜய்சேதுபதி படங்கள்) சில பிரச்சினைகளால், வருகிற கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் தினத்தில் எத்தனை படங்களை வேண்டுமானாலும் ரிலீஸ் செய்துக் கொள்ளுங்கள் என கூறி சங்கம் விலகி விட்டது.
இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வருகின்றன.
வருகிற 14-ந் தேதி பிரசாந்தின் ஜானி, விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, மோகன்லால் நடித்துள்ள மலையாள படம் ஒடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வரவுள்ளது.
இதனையடுத்து அடுத்த வாரம் 20-ந் தேதி விஜய்சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுஷின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, விஷால் வெளியிடும் கேஜிஎப், அந்தரிக்ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன.
ஆக மொத்தம் 10 நாட்கள் இடைவெளியில் கிட்டதட்ட 20 படங்கள் திரைக்கு வருகிறது.
இதனால் தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இவர்கள் இத்தனை படங்களை ரிலீஸ் செய்தால் எல்லா படத்தையும் ரசிகர்கள் எப்படி பார்ப்பார்கள்? என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்தான்.