ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்று ‘அரபி’ படத்தில் நடிகரானார் பாஜக அண்ணாமலை

ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்று ‘அரபி’ படத்தில் நடிகரானார் பாஜக அண்ணாமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரா ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை அள்ளியவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ்.

இவர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது கைகளை இழந்து வாழ்ந்து வருகிறார்.

ஆனாலும் தன்னம்பிக்கை தளராது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நிலைப்பாட்டில் மாற்றம் வரும்..- முன்னாள் IPS அண்ணாமலை

பின்னர் மற்ற விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளார். முக்கியமாக நீச்சல், குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், கே.எஸ்.விஸ்வாஸ் சாதனைகளை பார்த்த இயக்குநர் ராஜ்குமார் அவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க முன்வந்தார்.

அதன்படி விஸ்வாஸின் சாதனை வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீவிஜய ராகவேந்திரா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில விஸ்வாஸின் பயிற்சியாளராக நடித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை என ரஜினி சொன்னாரா.? தேவையே இல்லாமல் ஆணி புடுங்கும் கறுப்பு ஆடுகள்

அண்ணாமலை நடித்துள்ள கன்னடப் படமான ‘அரபி’ படத்தின் டீஸர் இன்று வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளிவைப்பு.

தமிழக பாஜக தலைவர் திரு K அண்ணாமலை அவர்கள் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

உண்மை கதை என்பதால் ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு நடித்துள்ளார் அண்ணாமலை ஜீ.

#Annamalai | #Arabbie | #KannadaMovie

BJP Annamalai became an actor in the film ‘Arabbie’ earning only one rupee

போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஓர் அப்பாவி..; நாங்க சொல்லல.. தீர்ப்பே இதான்

போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஓர் அப்பாவி..; நாங்க சொல்லல.. தீர்ப்பே இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்.

இவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைதானவர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ஆர்யன் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில் ஆர்யன்கான் மற்றும் நண்பர்கள் போதை பொருட்களுடன் சில மாதங்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கினர்.

3 வாரங்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

அக்ஷய்குமாரை அடுத்து ஷாரூக்கானுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்

பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியிலும் வந்தார்.

தற்போது ஆர்யனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை. அவர் அப்பாவி என போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகையை போதைப்பொருள் தடுப்பு போலீசார் (என்சிபி) தாக்கல் செய்தது. அதில், அர்யன்கான் அப்பாவி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஆர்யன்கான் மற்றும் மொகக் என்பவர் தவிர மற்றவர்கள் அனைவரும் போதைப் பொருள் வைத்திருந்தனர்.

ஆர்யன்கானுக்கு எதிராக போதிய ஆதாரங்களை திரட்ட முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை ஐகோர்ட்டால் கைது செய்யப்பட்டு 25 நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Verdict on Shah Rukh Khan’s son arrested in drug case

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கு இதுதான் தலைப்பா.?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கு இதுதான் தலைப்பா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இதில் நாயகனாக ராம்சரண் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.; ஹீரோ யார் தெரியுமா?

ராஜமௌலி இயக்கிய RRR படத்தில் 2 நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார் ராம்சரண்.

தற்போது ஷங்கர் இயக்கும் இந்த RC15 படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

கியாரா அத்வானி கலக்கல் புகைபடங்கள்
இந்த படத்தில் ராம்சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு அதிகாரி என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Is this the title of the film directed by Shankar and starring Ramcharan?

‘யோசிச்சு யோசிச்சு..’ செம ஹிட்டானது.; ‘அந்தகன்’ பாட்டில் அசத்தும் பிரசாந்த்

‘யோசிச்சு யோசிச்சு..’ செம ஹிட்டானது.; ‘அந்தகன்’ பாட்டில் அசத்தும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் பாலிவுட்டில் ‘அந்தாதூன்’ திரைப்படம் வெளியானது.

சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ‘அந்தகன்’.

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அந்தகன்’.

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

இந்த படத்தை பிரசாந்த் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இதில் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா உள்ளிட்டோர் நடிக்க முக்கிய கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

தற்போது படத்தின் டப்பிங் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை கலைப்புலி தாணுவின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

விரைவில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

ஆன்டி ஹீரோவாக பிரசாந்த் நடிக்கனும்.. அப்போதான் அது நடக்கும்.. – ஆர்கே. செல்வமணி

இப்படத்தில் இடம்பெற்ற ‘என் காதலே’ என்ற பாடல் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான “யோசிச்சு யோசிச்சு” பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையடுத்து தற்போது இந்த பாடல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடலை ஹரிச்சரன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

யோசிச்சு யோசிச்சு பாடல் தற்போது வைரலாகி வருகிறது..

The feet-tapping #YosichiYosichi from #Andhagan is OUT NOW

மீண்டும் கமல்.. மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா.; லோகேஷ் கனகராஜ் பக்கா ப்ளான்

மீண்டும் கமல்.. மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா.; லோகேஷ் கனகராஜ் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்தவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அது படத்திற்கு திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

நீ என்ன வேணாலும் செய்..; லோகேஷுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

விரைவில் மீண்டும் கமல் படத்தை இயக்குவேன் என அண்மையில் தெரிவித்தார் லோகேஷ்.

இத்துடன் விரைவில் விஜய்யின் 67 வது படத்தை இயக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ்.

‘தளபதி 67’ படம் இயக்குவது குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ்

இதனிடையில் கைதி படத்திற்கு முன்பே சூர்யாவை வைத்து ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை இயக்கவிருந்தார் லோகேஷ்.

ஆனால் அப்போது அந்த படத்தை இயக்க முழு தைரியம் இல்லாததால் அப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் தெரிவித்தாராம்.

சில படங்களை இயக்கி விட்ட பிறகு சூர்யா நடிக்க இருந்த ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை இயக்குவேன் என தெரிவித்தாராம் லோகேஷ்.

விஜய்- சேதுபதி – கமலை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

எனவே லோகேஷின் அடுத்த பட இயக்க வரிசை லிஸ்ட்டில் மீண்டும் கமல்ஹாசன்… மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா ஆகியோரை நிச்சயமாக எதிர்ப்பார்க்கலாம்.

Kamal , Vijay, Suriya again to team up with Lokesh Kanagaraj

கத்துக்கிட்ட மொத்த வித்தையை..; ரஜினி கமலை இயக்க அல்போன்ஸ் புத்திரன் திட்டம்

கத்துக்கிட்ட மொத்த வித்தையை..; ரஜினி கமலை இயக்க அல்போன்ஸ் புத்திரன் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேரம்’ & ‘பிரேமம்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

தமிழ் & மலையாளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த இரு படங்களிலும் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார்.

தற்போது பிருத்விராஜ் , நயன்தாரா இணைந்து நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ்.

சிம்புவை இயக்கும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர்.

இந்த நிலையில் தன் ரசிகர் ஒருவர் கேட்ட ரஜினி & கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அவரின் பதிவில்…

ரஜினி கமல் இருவரை நான் சந்தித்தால் நிச்சயமாக நான் சொல்லும் கதையில் அவர்களை ஈர்ப்பேன்.

கமலுக்கு முதல்வர் பதவி கொடுத்து பாருங்க… – அல்போன்ஸ் புத்திரன்

ஆனால் அவர்களை சந்திக்கும் அதிர்ஷ்டத்தை நான் இதுவரை பெறவில்லை.

என் கதையை அவர்கள் விரும்பினால் நிச்சயம் நான் கத்துக்கிட்ட வித்தைகளை வைத்து அந்த படத்தை இயக்குவேன்.”

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ளார்.

Director Alphonse Puthren replied, “If I meet Rajini or Kamal sir in person, there are possibilities that both of them might be interested in the scripts I have for them. I believe that luck doesn’t have my name in its dictionary. So, I have never met them till now in my life. In future if luck favours and I meet them, and if they like my scripts. I will use all my multiple skills and do good entertaining films with each of them and then with both of them.”

Alphonse Puthiran to direct Rajinikanth and Kamal Haasan

More Articles
Follows