தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் பிரசாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஜானி.
இப்படத்தை அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சேலஞ்ச் என்று பெயரிடப்படலாம் என கூறப்படுகிறது.
இப்படம் குறித்த விவரம் வருமாறு…
‘ஜீன்ஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராய், `காதல் கவிதை’ படத்தில் இஷா கோபிக்கர், `பொன்னர் சங்கர்’ படத்தில் பூஜா சோப்ரா என உலக அழகிகளுடனும் இந்திய அழகிகளுடனும் நடித்தவர் பிரசாந்த்.
தற்போது நடிக்கவுள்ள புதிய படத்தில் கடந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற திருச்சியைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்பவருடன் இணைகிறார்.
பிரசாந்த்துக்கு அக்காவாக நடிகை பூமிகா நடிக்கிறார். மேலும் நாசர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களிலும் படக்காட்சிகளையும் பாடல்களை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் படமாக்க இருக்கிறார்களாம்.