ரஜினியின் *பேட்ட* படத்துடன் இணையும் லாரன்ஸின் *காஞ்சனா3*

ரஜினியின் *பேட்ட* படத்துடன் இணையும் லாரன்ஸின் *காஞ்சனா3*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanchana3 motion poster will be released along with Petta releaseலாரன்ஸின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘முனி’.

இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளியானது.

இந்த படமும் வெற்றிப் பெற இதனையடுத்து காஞ்சனா2 என்ற படத்தை எடுத்தார்.

தற்போது இந்தப் படங்களின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது.

தன் ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே இப்படத்தை தயாரிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர்.

மேலும் கோவை சரளா , தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசைக்காக பாடலாசிரியர் மதன் கார்க்கியின் டூபாடூ நிறுவனத்துடன் லாரன்ஸ் கை கோர்த்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை பேட்ட படத்துடன் இணைத்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

காஞ்சனா 3 (முனி 4) படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kanchana3 motion poster will be released along with Petta release

ரஜினி பெயரில் புது டிவி சேனல்; ரங்கராஜ் பாண்டே இணைகிறாரா?

ரஜினி பெயரில் புது டிவி சேனல்; ரங்கராஜ் பாண்டே இணைகிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Journalist Rangaraj Pandey may join in Rajini TV new channelநடிகா் ரஜினிகாந்த் விரைவில் ஒரு தனிக்கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.

அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் கட்சி தொடங்கப்படவில்லை என்றாலும் கட்சிக்கான 60 சதவீத பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக ரஜினிகாந்தே அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் புதியதாக ஒரு டிவி சேனல் தொடங்கவுள்ளதாக தகவல் பரவியது.

இதுகுறித்து ரஜினிகாந்த் கூறியதாவது…

என் பெயரில் டிவி சேனல் யாரும் தொடங்கிவிட கூடாது என்பதற்காக, நாங்கள் அந்த பெயரில் பதிவு செய்து வைத்துள்ளோம். என்றார்.

மேலும் ரஜினி டிவி, தலைவர் டிவி, சூப்பர் ஸ்டார் டிவி என்ற ஏதாவது ஒரு பெயரில் இது தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அண்மையில் தந்தி டிவி.யில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே இதில் செய்தி ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேலும் ரங்கராஜ் பாண்டே அவர்கள் ரஜினி ரசிகர் என்பதால் இது நடக்கலாம் எனவும் தெரிகிறது.

Journalist Rangaraj Pandey may join in Rajini TV new channel

பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கேட்பது சட்ட விரோதம்.: பிடி. செல்வகுமார்

பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கேட்பது சட்ட விரோதம்.: பிடி. செல்வகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PT Selvakumar slams Music Composer Ilayaraja for his songs Royalty case issueசம்பளம் பெற்று இசையமைத்த பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை (ராயல்ட்டி) கேட்பது சட்ட விரோதம் என திரைப்பட தயாரிப்பாளர்கள் 6 பேர் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் பிடி செல்வகுமார், அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீராகதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது…

திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கும்போது இயக்குனரை தீர்மானிக்கின்றனர்.

இயக்குனரின் அறிவுரைப்படி நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் முடிவு செய்யப்படுகின்றனர். கடந்த 80 ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் சினிமா துறையில் நடந்து வருகின்றது.

ஊதியம் பெற்றுக்கொண்டு பணியாற்றும் இசைமைப்பாளர்கள் தங்கள் பணிக்கு எந்த உரிமையும் கோர முடியாது. படத்தில் அவர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர்தான்.

இந்த உரிமையை இந்திய காப்புரிமைச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்களின் காப்புரிமை தனக்கே சொந்தம் என கூறி வருகிறார்.

இளையராஜாவை இசையமைப்பாளராக நியமித்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் காப்புரிமையை அவருக்கு வழங்கி, எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் அவர் இசையமைத்த பாடல்கள் மீது உரிமை கோருவது சட்டவிரோதமானது.

இதை அனுமதித்தால் படத்தின் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், இயக்குனர் ஆகியோரும் காப்புரிமை கோரக் கூடும். பெரும் தொகையை முதலீடு செய்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இறுதியில் எதுவும் கிடைக்காத நிலை உருவாகும்

எனவே தயாரிப்பாளர்களே அப்படத்தின் இடம்பெற்றிருக்கும் காட்சி, பாடல், என அனைத்திற்கு முழுமையான உரிமையானவர்கள் என அறிவிக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். தங்களது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் இளையராஜா சம்பாதித்த பணம் குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக 6 பேரும் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் விளக்கத்தை அளித்தனர்.

PT Selvakumar slams Music Composer Ilayaraja for his songs Royalty case issue

அஜித் படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் ரங்கராஜ் பாண்டே

அஜித் படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் ரங்கராஜ் பாண்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Journalist Rangaraj Pandey to lock horns with Ajith in Thala 59அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் 2019 பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கிறார்.

இந்த 2 படங்களையும் வினோத் இயக்கவுள்ளார்.

இதில் அஜித் 59 படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார்.

இது ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதில் அஜித்தின் நண்பராக டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார்.

இவருடன் தந்தி டிவியின் முன்னாள் செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டேவும் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறாராம்.

இந்த தகவலை ரங்கராஜ் பாண்டேவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Journalist Rangaraj Pandey to lock horns with Ajith in Thala 59

அடங்கமறு அனைவருக்கும் பிடிக்கும் விதமா இருக்கும் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்

அடங்கமறு அனைவருக்கும் பிடிக்கும் விதமா இருக்கும் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adanga maruஎல்லா வகை படங்களோடு ஒப்பிடுகையில் ‘வணிக ரீதியான பொழுதுபோக்கு’ படங்களை கொடுப்பது தான் மிகவும் கடினமான விஷயம் என்பது மறுக்க முடியாத உண்மை. நிச்சயமாக, ஒவ்வொரு ‘உணர்ச்சியும்’ ஒரு ‘வகையான’ சினிமாவை குறிக்கும். அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து கொடுப்பது தான் இயக்குனர்களின் பெரிய சவால். அது ஒரு சில இயக்குனர்களுக்கே கை வந்த கலை. அடங்க மறு மொத்த குழுவும் நம்பும் ஒரு விஷயம் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் அத்தகைய திறமையை கொண்டிருக்கிறார் என்பது தான். இயக்குனர்கள் சரண், அமீர் மற்றும் சேரன் போன்ற பிரபலமான இயக்குனர்களின் பள்ளியில் இருந்து வந்தவர் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

“மிகத் திறமையானவர்கள் இருக்கும் ஒரு குழுவில் இருந்து இது போன்ற ஒரு தீர்ப்பை கேட்பது பெரிய விஷயம். குறிப்பாக, சுஜாதா மேடம் அதை சொல்வது பெரிய ஆசீர்வாதம். ஆரம்ப நிலையிலிருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தவர், அவரின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் குழு மற்றும் அடங்க மறு படத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர்கள் இது ஒரு சரியான பொழுதுபோக்கு படம் என கூறுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயத்தில், எல்லா பாராட்டும் ஜெயம் ரவி சாருக்கே செல்ல வேண்டும். ஆரம்பத்தில், என் ஸ்கிரிப்ட் மிகவும் சீரியஸான ஸ்கிரிப்டாக இருந்தது, அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் விதத்தில் மாற்ற அவர் தான் தொடர்ந்து வலியுறுத்தினார். அவருக்கு நிறைய கதைகள் காத்திருந்தன, அவர் நினைத்திருந்தால் இந்த ஸ்கிரிப்ட்டை எளிதில் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவர் என் கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு, எனக்கு உறுதுணையாக இருந்தார் என்பது நான் அவரிடம் வியந்த விஷயம். இது தான் ஒரு நல்ல படமாக மாற முக்கிய காரணமாகவும் இருந்தது” என்றார்.

மேலும், இந்த படத்துக்காக ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் நம்பமுடியாத முயற்சியை மேற்கொண்டனர். அப்படிப்பட்ட நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் நான் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்” என்றார்.

இந்த அடங்க மறு படத்தை டிசம்பர் 21ஆம் தேதி க்ளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் உலகெங்கும் வெளியிடுகிறது. ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங்கை கையாள, சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.

ஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதி போராளிகள்

ஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதி போராளிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gypsyஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’.. குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஜிப்ஸி படத்தின் படபிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இப்படத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் எளிய மனிதர்களின் குரலாகவும், கள போராளிகளின் குரலாகவும்,‘ வெரி வெரி பேட் ..‘ எனத் தொடங்கும் பாடல் ஒன்றை யுகபாரதி எழுதியிருக்கிறார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்த பாடலுக்கான ப்ரமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் படமாக்க திட்டமிட்டபோது, தமிழ் சமூகத்தில் உண்மையாகவே களத்தில் போராடும் போராளிகள் இந்த பாடல் காட்சியில் இடம்பெற்றால் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று எண்ணினார்கள். அதைத் தொடர்ந்து தோழர் நல்லக்கண்ணு, தோழர் திருமுருகன் காந்தி, தோழர் முகிலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சுற்றுசூழலியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ப்யூஷ் மனுஷ், திருநங்கைகளின் உரிமைக்காக போராடும் க்ரேஸ் பானு, ஆதி தமிழர் பேரவையைச் சோர்ந்த தோழர் ஜக்கையன், தோழர் வளர்மதி ஆகியோரை சந்தித்து அனுமதி கேட்டனர். அதற்கு அவர்களும் மனமுவந்து ஒத்துழைப்பு அளித்தனர்.

இவர்கள் அனைவரும் பங்குபெற்ற படபிடிப்பு சென்னையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்றது இவர்களுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்அவர்களும் கலந்து கொண்டார்,
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு படத்தின் ப்ரமோ பாடலுக்காக வெளிபுறப் படபிடிப்பில் கலந்து கொண்டு, நடித்து ஒத்துழைப்பு கொடுப்பது இது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது,

இதன் படபிடிப்பின் போது தொன்னூறு வயதைக் கடந்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் படபிடிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பை அளித்ததுடன், வித்தியாசமான முறையில் விளிம்பு நிலை மக்களுக்கான சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் இந்த பாடலுக்கு தங்களாலான உதவியை மனமுவந்து அளிக்க வந்த ஏனைய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கள போராளிகளுடன் இணைந்து கலந்துரையாடியது அனைவரையும் கவர்ந்தது.
பெரிய அதிர்வை ஏற்படுத்தவிருக்கும் இந்த படத்தின் ப்ரமோ பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More Articles
Follows