தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இசைக் கலைஞரான பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், சிவக்குமார், பின்னணி பாடகர் யேசுதாஸ் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிவக்குமார் பேசியதாவது….
பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கர்ணாடக சங்கிதத்தில் ஒரு பீஸ்மர் என்று சொல்லலாம்.
அப்படி பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள் ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் A.P.நாகராஜன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவிளையாடல் படத்துல T.S. பாலையா அவர்களுக்கு ஒரு நாள் போதும்மா இன்று ஒரு நாள் போதும்மா. என்ற பாடலை பாடினார்.
அந்த படம் வெற்றி படமாக ஓடியதற்கு அந்த பாடல் 25% சதவிகிதம் காரணமாக அமைந்தது. ஏன் என்றால் பாலமுரளியின் மாறுபட்ட குரலும் T.S.பாலையாவின் நடிப்பும் ஒரு காரணம்.
அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஆனால் இளையராஜா இசையில் கவிகுயில் படத்தில் எனக்காக அவர் பாடினார் சிக்மகளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணர், ராதா வேடத்தில் நடித்தோம்.
அந்த பாடல் சின்ன கண்ணன் அழைகிறான் என்கிற பாடல்காட்சிகள் எடுத்தோம். அந்த பாடல் தமிழ்சினிமா ரசிகர்கள் அனைவரும் மரக்க முடியாத பாடல் அந்த மாமனிதர் எனக்காக பாடினார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.
கமல்ஹாசன் பேசியதாவது…
இந்தியாவே பெருமைப்படும் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. அவரது மறைவு பேரிழப்பாகும்.
அவரைப் பற்றி பேச எனக்கு அருகதை இருப்பதாக நான் நினைக்கவில்லை.
என்னைவிட தகுதி உள்ள இசை கலைஞர்களும், அவரது சிஷ்யர்களும் அவரைப் பற்றி பேச இங்கே உள்ளனர்.
இங்கே நான் பேசியதை பெருமையாக நினைக்கிறேன்.
இப்படி ஒரு இசை மேதை இங்கே வாழ்ந்தார் என்ற செய்தியே வரும் தலைமுறைக்கு ஆச்சரியமாக இருக்கும்.” என்றார் கமல்ஹாசன்.