தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரிட்டிஷ் அரசாட்சியில் 70 ஆண்டுகள் மேலாக ராணியாக அரியணையில் ஆட்சி செய்தவர் ராணி எலிசபெத்.
இவர் 96 வயதை நிறைவு செய்தவர். அவர் நேற்று காலமானார்.
உலகமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது..
“இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன்.
ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
‘மருதநாயகம்’ கதையை மாத்தனும் இல்லனா நடிகனை மாத்தனும்.. – கமல்
அநேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.
தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்…
இங்கிலாந்து ராணி எலிசபெத் 1997 ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது சென்னை தரமணி எம்ஜிஆர் திரைப்பட நகரில் நடந்த கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க “மருதநாயகம்” படத்தின் திரைப்பட தொடக்க விழாவில் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்தினார்.