தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்தவொரு சினிமா கலைஞனுக்கும் கனவுப் படம் அல்லது கேரக்டர் ஒன்றிருக்கும்.
சகலகலா வல்லவன் கமலின் கனவுப் படம் மருதநாயகம் என்பது நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான்.
‘மருதநாயகம்’ படப்பிடிப்பின் துவக்க விழாவையை இங்கிலாந்து ராணி எலிசபத் அவர்கள் கடந்த 19976ல் ஆரம்பித்து வைத்தார்.
ஆனால் நிதி நெருக்கடியால் அந்த படத்தை கமல் அப்படியே விட்டுவிட்டார்.
அதன்பின்னர் பல வித்தியாசமான வேடங்களில் நடித்தாலும் மருதநாயகம் படத்தை தொடவில்லை.
அவரின் கனவும் படம் ‘மருதநாயகம்’ அவரின் கனவாக மட்டுமே இருந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கூட இனி மருதநாயகம் டத்தில் நான் நடிக்க முடியாது, வேறு யாராவது நடிப்பார் என்றார்.
இந்த நிலையில் தான் இன்று இன்ஸ்டாகிராமில் விஜய்சேதுபதி உடன் கலந்துரையாடினார் கமல். அப்போது மருதநாயகம் குறித்த கேள்வியை விஜய் சேதுபதி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், மருதநாயகத்தை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றால் உடனே வெளியிட்டு விடலாம். ஆனால் படம் பண்ண, பணம் வேண்டும்.
நான் உருவாக்க நினைத்த மருதநாயகத்திற்கு 40 வயது தான். இப்போது அந்த கேரக்டரி என்னால் நடிக்க முடியாது. வேறு ஒரு நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும், இல்லையேல் கதையையே மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
எவர் நடித்தாலும் மருதநாயகம் என்றால் கமல் முகம் தானே நினைவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.
Kamal says Marudhanayagam need young actor or Story to be Changed