தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகநாயகன் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைகா.
இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பல உண்மை தகவல்களை மறைத்துவிட்டது லைகா நிறுவனம் என குற்றம் சாட்டியுள்ளார் இயக்குனர் சங்கர்.
அவர் தெரிவித்துள்ளதாவது…
“இந்தியன் 2 படத்தை முதலில் தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார்.
அதன்பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்தது.
படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போடப்பட்டது.
அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. எனவே பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தேன்.
ஆனால், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியது லைகா.
தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும்.
செட் அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது.
நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது. அதற்கு தான் பொறுப்பல்ல.
படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் விவேக் இறந்துவிட்டார். நடிகர் பாபி சிம்மா உள்ளிட்ட கலைஞர்கள் தற்போது வேறு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.
மேலும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது.
ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாக கூறியும், அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ஷங்கர்.
கடந்த ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான்.
இதன் காரணமாக தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டது.
எனவே, தனக்கெதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஷங்கர் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
Shankar blames lyca for Indian 2 delay