‘இந்தியன் 2’ பட தாமத்திற்கு அடுக்கடுக்கான காரணங்களை கோர்ட்டில் தெரிவித்த ஷங்கர்

‘இந்தியன் 2’ பட தாமத்திற்கு அடுக்கடுக்கான காரணங்களை கோர்ட்டில் தெரிவித்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director shankarஉலகநாயகன் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைகா.

இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பல உண்மை தகவல்களை மறைத்துவிட்டது லைகா நிறுவனம் என குற்றம் சாட்டியுள்ளார் இயக்குனர் சங்கர்.

அவர் தெரிவித்துள்ளதாவது…

“இந்தியன் 2 படத்தை முதலில் தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார்.

அதன்பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்தது.

படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போடப்பட்டது.

அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. எனவே பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தேன்.

ஆனால், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியது லைகா.

தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும்.

செட் அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது.

நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது. அதற்கு தான் பொறுப்பல்ல.

படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் விவேக் இறந்துவிட்டார். நடிகர் பாபி சிம்மா உள்ளிட்ட கலைஞர்கள் தற்போது வேறு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

மேலும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது.

ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாக கூறியும், அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ஷங்கர்.

கடந்த ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான்.

இதன் காரணமாக தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டது.

எனவே, தனக்கெதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஷங்கர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Shankar blames lyca for Indian 2 delay

கவிதை ஈசியா எழுதுறோம்.. டியூனுக்கு பாட்டு எப்படி எழுதுவது..? இதோ பத்தே நாளில் பாட்டு எழுத ஆன்லைன் க்ளாஸ்.!

கவிதை ஈசியா எழுதுறோம்.. டியூனுக்கு பாட்டு எப்படி எழுதுவது..? இதோ பத்தே நாளில் பாட்டு எழுத ஆன்லைன் க்ளாஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lyricistபத்து நாள்களில் பாடலாசிரியர் ஆக இணைய வழி பயிற்சி வகுப்பு.

10 வகுப்புகள் |

ஒரு வகுப்பு குறைந்த பட்சம் 1 மணி நேரம் |

எளிமையான பயிற்சி |

வீட்டுப்பாடம் & தேர்வு உண்டு |

பயிற்சி வகுப்பு தவிர பயிற்சியின் சிறப்பு பகுதியாக 5 பாடலாசிரியர்கள் உடன் கலந்துரையாடல் |

பயிற்சி முடிவில் சான்றிதழ் உண்டு.

பயிற்சி கட்டணம் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள…

கீழ்க்காணும் எண்களில் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு எண்கள்:
9841869379
9500059379
8489368355

Online coaching class for Lyricist

Everyones favorite super hero ‘Venom’ is back and this time there will be Carnage

Everyones favorite super hero ‘Venom’ is back and this time there will be Carnage

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VenomSony Pictures Entertainment has released the trailer of their most anticipated ‘Venom: Let there be Carnage’, starring Tom Hardy.

The actor who impressed everyone in 2018 as Venom, returns to the big screen as one of MARVEL’s greatest and most complex characters.

Directed by Andy Serkis, the film also stars Michele Williams, Naomie Harris, and Woody Harrelson, who will be playing one of the most feared villains in the Marvel universe- Cletus Kasady, aka Carnage.

Fans in India have been waiting with bated breath for the teaser to drop and the film takes ahead the story of Eddie Brock aka Venom taking on Carnage.

The original film was a huge hit for the studio grossing a massive USD 855 million worldwide.

Fans are all set to experience this big-screen phenomenon only in cinemas in September 2021.

Sony Pictures Entertainment India releases ‘Venom: Let there be Carnage’ in Hindi, English, Tamil, and Telugu; in 3D and IMAX.

Only in Theatres, this September!

3 நியமன MLAக்கள் விவகாரம்.: புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி.; திமுக தலையிட திருமா வலியுறுத்தல்

3 நியமன MLAக்கள் விவகாரம்.: புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி.; திமுக தலையிட திருமா வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thirumavalavanபுதுச்சேரியில் வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் மற்றும் அசோக் பாபு என மூவரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது பாஜக.

யூனியன் பிரதேச அரசாங்க சட்டம் 1963, பிரிவு 3, உட்பிரிவு 3இன் படி மத்திய அரசு நேரடியாக புதுச்சேரி சட்டப் பேரவைக்கான மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமிப்பதாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது…

புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட நபர்களைத் தேர்தலில் நிறுத்தி 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அதன் கூட்டணி கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது திரு.என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராகப் பரவியேற்றிருக்கிறார்.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ யாரும் இன்னும் பதவியேற்கவில்லை. இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் ஒரு அங்கமாக பாஜகவை சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி கட.சியென்றும் பாராமல், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு. என்.ரங்கசாமி அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது.

மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

புதுவையில் 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும்
பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்துக் கொள்ளவேண்டுமென்றும்; தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்றுப் பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்றும் சுட்டிக் காட்டுகிறோம்!

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்
விடுதலை சிறுத்தைக் கட்சிகள்.

VCK request DMK to solve pondicherry issue

JUST IN விஜயகாந்த்-சூர்யா-தனுஷ் படங்களை தயாரித்தவர் கொரோனா தொற்றால் மரணம்

JUST IN விஜயகாந்த்-சூர்யா-தனுஷ் படங்களை தயாரித்தவர் கொரோனா தொற்றால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த ‘சபரி’, சூர்யா நடித்த ‘கஜினி’, தனுஷ் நடித்த ‘சுள்ளான்’ படங்களை தயாரித்தவர் சேலம் சந்திரசேகர்.

மேலும் பிப்ரவரி 14 & கில்லாடி உள்ளிட்ட படங்களையும் தயாரித்து இருக்கிறார்.

ஸ்ரீ சரவணா கிரியேசன்ஸ் என்ற பெயரில் தயாரித்தார்.

இவர் கொரோனா தொற்று காரணமாக சேலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7.15 மணியளவில் உயிரிழந்தார்.

Producer Salem Chandrasekar passed away due to Covid

#RIP ! #gajini producer #salemchandrasekar passed away now at 7pm in Salem. Due to #COVID19 #RIPSalemchandrasekar

85 கோடியை நெருங்கும் விஜய் சம்பளம்..? தெலுங்கு தயாரிப்பாளரின் தாராள மனசு

85 கோடியை நெருங்கும் விஜய் சம்பளம்..? தெலுங்கு தயாரிப்பாளரின் தாராள மனசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 66மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனரான ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறாராம்.

இப்படத்திற்காக விஜய்க்கு 85 கோடி சம்பளத்தைத் தர அவர் முன் வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் படத்தின் பட்ஜெட் 150 கோடி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Vijay gets highest salary ever for next movie

More Articles
Follows