தமிழக விஐபிக்கள் வசிக்கும் பகுதிக்கு தன் வீட்டை மாற்றிய கமல்ஹாசன்

தமிழக விஐபிக்கள் வசிக்கும் பகுதிக்கு தன் வீட்டை மாற்றிய கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கும் ’விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இன்று கமலுடன் படப்பிடிப்பில் நரேன் இணைந்துள்ளார். அந்த படங்கள் வைரலாகி வருகிறது.

கமல் கடந்த சில ஆண்டுகளாக ஆழ்வார் பேட்டையில் வசித்து வந்தார். இதனாலேயே இவரை ஆழ்வார்பேட்டை ஆண்டவா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

இப்போது அதை அலுவலமாக மாற்றி விட்டார் கமல்ஹாசன்.

இந்நிலையில் சென்னையின் போட் கிளப் ரோடு பகுதிக்கு தனது வீட்டை கமல்ஹாசன் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த பகுதியில்தான் பிரபல தொழில் அதிபர்களான இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், சன் டிவி கலாநிதி மாறன், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஸ்ரீனிவாசன், உள்ளிட்ட பல தொழிலதிபர்களின் வீடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan shifts his house into Boat Club area

ஆல் டைம் பேவரைட்.. கவுண்டமணி – சிவகார்த்திகேயன் சந்திப்பு.; புதிய கூட்டணி.?

ஆல் டைம் பேவரைட்.. கவுண்டமணி – சிவகார்த்திகேயன் சந்திப்பு.; புதிய கூட்டணி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா காமெடியன்களில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சில காலமாக நடிப்பதை நிறுத்தி விட்டார் கவுண்டமணி.

இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

இவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளமாட்டார்.

இறுதியாக மறைந்த நடிகர் விவேக் இறுதி சடங்கில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் கவுண்டமணியை அவரது இல்லத்திலேயே சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன்.

“லெஜண்ட் உடன், பல மகிழ்ச்சிகளை கொண்ட சிறப்பான தருணம், என்றும் நினைவில் இருக்கும் நாள் ஆல் டைம் பேவரைட்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் சிவகார்த்தியன் படத்தில் கவுண்டமணி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sivakarthikeyan meets legendary comedian Goundamani

ராஜமௌலிக்காக விட்டுக் கொடுத்து காத்திருக்கும் ஷங்கர்

ராஜமௌலிக்காக விட்டுக் கொடுத்து காத்திருக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது டைரக்டர் ஷங்கர் தான்.

இவரது படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசானாலும் இவர் நேரிடையாக மற்ற மொழி படங்களை இயக்கவில்லை.

(ஹிந்தியில் மட்டும் ஒரு படம்)

தற்போது முதன்முறையாக தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்பட படப்பிடிப்பை செப்டம்பர் 10 முதல் ஆரம்பிக்க இருந்தனர்.

ஆனால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் விடுப்பட்ட காட்சிகளை ராம் சரணை வைத்து 3 வாரங்கள் எடுக்கவுள்ளாராம் ராஜமவுலி.

மேலும் ‘ஆச்சார்யா’ படத்திலும் ராம் சரண் நடிக்க வேண்டி காட்சிகள் மீதம் உள்ளதாம்.

எனவே அந்த இரு படங்களையும் முடித்துவிட்டு வாருங்கள் என ராம்சரணிடம் சொல்லிவிட்டாராம் ஷங்கர்.

அதன்படி தற்போது அக்டோபர் மாதம் முதல் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

Ram Charan – Shankar film gets delayed

பாஜக பதவியை ராஜினாமா செய்த கேடி ராகவன்..; பாலியல் ஜல்சா கட்சி ட்ரெண்டிங்.; பாலியல் புகார்களை விசாரிக்க அண்ணாமலை விசாரணைக்குழு

பாஜக பதவியை ராஜினாமா செய்த கேடி ராகவன்..; பாலியல் ஜல்சா கட்சி ட்ரெண்டிங்.; பாலியல் புகார்களை விசாரிக்க அண்ணாமலை விசாரணைக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாஜக-வின் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இன்று காலை இணையத்தளங்களில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராகவன்.

இது தொடர்பாக, இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.

நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன்.

என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன்.

நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!”.

இவ்வாறு கே.டி.ராகவன் பதிவிட்டுள்ளார்.

மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.

பாஜக வினர் மீது இதுபோல பல குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில்…

“பாஜகவினர் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும்.

“ராகவன் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TN BJP leader KT Raghavan quits after YouTuber accuses him of sexual harassment

ஜோதிகாவின் 50வது படம் ‘உடன்பிறப்பே’..; ‘கத்துக்குட்டி’ இயக்குனருக்கு வாய்ப்பளித்த சூர்யா

ஜோதிகாவின் 50வது படம் ‘உடன்பிறப்பே’..; ‘கத்துக்குட்டி’ இயக்குனருக்கு வாய்ப்பளித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா தங்கையாக நடித்து வரும் படம் ‘உடன்பிறப்பே’.

கத்துக்குட்டி என்ற பட இயக்குனர் து ப சரவணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

‘கத்துக்குட்டி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இவருக்கு அடுத்த பட சான்ஸ் கிடைக்கவில்லை.

தற்போது சூர்யா மூலம் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிக்குமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

Kathukutty director gets a chance to direct Jyothika’s 50th film

udanpirappe director saravanan
udanpirappe director saravanan
கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் உலகெங்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவிஷீல்டு & கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ள https://www.cowin.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.

சிலருக்கு இது எளிதாக இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு பின்னர் வாட்ஸ் ஆப் எண் மூலம் (+91 90131 51515) தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் பெறும் வசதியை மத்திய சுகாதாரத் துறை அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் தற்போது அதே வாட்ஸ்ஆப் எண்ணைப் பயன்படுத்தி கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இடங்களை நாமே தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (ஆகஸ்ட் 24) தனது டிவிட்டர் பக்கத்தில்…

‘மக்களின் வசதிக்கான புதிய சகாப்தத்தை இந்தியா உருவாக்கியுள்ளது.

இப்போது, ​​சில நிமிடங்களில் உங்கள் வாட்ஸ்ஆப்பில் மிக எளிதாக கோவிட் தடுப்பூசி இடங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.” என பதிவிட்டுள்ளார்.

Now you can book vaccine slots on WhatsApp.

First, one must save the WhatsApp number +91 9013151515, and send a message, ‘Book Slot’ to the same number. An OTP will then be received via SMS. Post which, one can choose their preferred location, centre and slot.

How to book your Covid vaccine appointment via WhatsApp

More Articles
Follows