தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் உலகளவில் 600 கோடிக்கு மேல் வசூலித்து இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.
இருந்தபோதிலும் மக்கள் ஆர்வத்துடன் தியேட்டர்களிலும் கண்டு களித்து வருகின்றனர். படத்தின் மிகப்பெரிய வெற்றியை முன்னிட்டு நடிகர் ரஜினி, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசளித்திருந்தார் சன் டிவி கலாநிதி மாறன்.
தனக்கு கிடைத்துள்ள விலை உயர்ந்த கார் பற்றி நடிகர் அனிருத் சமீபத்தில் பேசுகையில்…
“என்னிடம் பலரும் ‘விக்ரம்’ படத்தில் இயக்குனருக்கு கார் பரிசளிக்கப்பட்டது உங்களுக்கு ஒன்றுமில்லையா என்று கேட்டனர். அது போல சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்திற்கும் கேட்டனர். தற்போது ஜெயிலர் படத்திற்காக கார் கிடைத்துள்ளது.
என்னைப் பொருத்தவரை எனக்கு ‘விக்ரம்’ படம் கிடைத்ததே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். அது போல ‘ஜெயிலர்’ படம் கிடைத்ததும் மிகப்பெரிய சந்தோஷம்தான்.
பொதுவாக படத்தின் வெற்றிக்கு காரணமான நடிகர் இயக்குனர்களுக்கு பரிசுகள் கிடைத்திருக்கிறது. முதன்முறையாக ஒரு இசை அமைப்பாளருக்கு கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த கார் எனக்கு ஒரு பொக்கிஷம் போன்றது” என தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
Anirudh talks about Car gift for Jailer success