லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் நான் என மேடைக்கு மேடை சொல்பவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் அடிக்கவே ஹாட்ரிக் இயக்குனர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ்.

இதனையடுத்து கமல்ஹாசனின் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கமல் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.

இது சமீப காலத்தில் மெகா ஹிட் திரைப்படம் என வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ்.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் தன்னுடைய உதவி இயக்குனர் விஷ்ணு எடவன் என்பவர்க்கு தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் கமல்ஹாசன் வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாடல் ஆசிரியர் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் விஷ்ணு.

மேலும் லோகேஷ் கனகராஜ் உடன் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

விரைவில் கமல்ஹாசன் மற்றும் விஷ்ணு எடவன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

விஷ்ணு

Lokesh assistant Vishnus debut movie in Rajkamal films

எனக்கு ‘பேட்ட’-க்கு பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் X’ தான்.. – கார்த்திக் சுப்பராஜ்

எனக்கு ‘பேட்ட’-க்கு பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் X’ தான்.. – கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், நான் இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ‘பேட்ட’ படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

‘பீட்சா’ இசை வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

இந்த திரைப்படத்தை பற்றி நான் அதிகம் பேசமாட்டேன். இந்த கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. சந்தோஷ் நாராயணன் சொன்ன மாதிரி இந்தப்படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு கட்டாயம் வேண்டும். அனைவருக்கும் நன்றி.

After Petta movie Jigarthanda Double x will give me success says KS

கூடுதல் தகவல்…

ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் மற்றும் விக்ரம் நடித்த மகான் ஆகிய இரண்டு படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது இங்கே கவனிக்கத்தக்கது. ‘பேட்ட’ மாபெரும் வெற்றி பெற்றது. )

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்

தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன்

அசோசியேட் தயாரிப்பாளர்: அலங்கார் பாண்டியன்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு

படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி

தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி. சந்தானம்

சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்

கலை இயக்கம்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன்

நடன அமைப்பு: ஷெரிப் எம், பாபா பாஸ்கர்

ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்

ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா

ஒப்பனை: வினோத். எஸ்

ஆடைகள்: சுபேர்

பாடல்கள்: விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ்

ஸ்டில்ஸ்: எம். தினேஷ்

வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்: எச். மோனேஷ்

கலரிஸ்ட்: ரங்கா

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ட்யூனி ஜான்

டீசர் கட்: ஆஷிஷ்

சவுண்ட் மிக்ஸ்: சுரேன். ஜி

ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: கணேஷ் பி.எஸ்

தயாரிப்பு நிர்வாகி: ஜி. துரைமுருகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ராஜ்குமார்

தயாரிப்பு மேலாளர்கள்: என். சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள்

நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன். எம்

ரஜினி போல கார்த்திக் சுப்புராஜும் என் குருதான்… – ராகவா லாரன்ஸ்

ரஜினி போல கார்த்திக் சுப்புராஜும் என் குருதான்… – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது…

வந்திருக்கும் பத்திரிக்கையாளர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் அன்பு செலுத்தும் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

‘ஜிகர்தண்டா 1’ நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள்.

தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன்.

அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான் குரு என்று தான் சொல்லுவேன்.

பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோ அது தான் இந்தப்படம்.

கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.

சந்தோஷ் நாராயணன் சாரோட பெரிய ரசிகன் நான். நிறைய மேடைகள் இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி.

Like Rajini Karthik Subburaj also my Guru says Lawrence

நல்ல படைப்புகளை இறைவன் எனக்காக அனுப்பி வைக்கிறார்.. – எஸ்.ஜே. சூர்யா

நல்ல படைப்புகளை இறைவன் எனக்காக அனுப்பி வைக்கிறார்.. – எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

எல்லைகளை தாண்டி ரசிகர்களை சென்றடையும் விஷயம் இப்படத்தில் உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்று நான் பார்த்துள்ளேன். அதிகம் பேசாத சந்தோஷ் நாராயணன் அவர்களே இந்த மேடையில் நிறைய பேசியுள்ளார். இந்த படம் அவ்வளவு பேச வைத்துள்ளது.

லாரன்ஸ் சார் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் சார் படைப்பும் காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனா இருப்பதற்கு ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணம். அதற்காக கார்த்திக் சுப்பராஜ் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நிறைய பேச வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக பேசுவோம். இந்த படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது.

God sending me good scripts says SJ Suryah

கார்த்திக் சுப்புராஜ் ஸ்பேஸ் கொடுப்பார்.; ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வேற மாரி.. – சந்தோஷ் நாராயணன்

கார்த்திக் சுப்புராஜ் ஸ்பேஸ் கொடுப்பார்.; ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வேற மாரி.. – சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது.

‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’-யை இன்று மதியம் 12.12 மணிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் இணையத்தில் வெளியிட்டார்.

எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்) பேசியதாவது…

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், இந்த திரைப்படத்தின் 2023 தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கிறோம். இந்த மேடையை தந்த கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் உங்களை சந்தித்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினோம்.

நிறைய செலவில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். ராகவா லாரன்ஸ், எஸ்,ஜே. சூர்யா சார், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறோம். திரையரங்குகளில் இதை தீபாவளிக்கு பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டும்.

‘ஜிகர்தாண்டா 1’ தேசிய விருது வாங்கியது. ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’-ம் நேஷனல் அவார்ட் வாங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எடிட்டிங், இசை எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. என்னுடைய ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இல்லாமல் நான் இல்லை. எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், திகட்டாத பாடல் என்று இன்று வெளியிடப்பட்ட பாடலை சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆல்பமே பண்ணியிருக்கிறோம். இந்த திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் வந்து பாருங்கள். கார்த்திக் சுப்பராஜ் உடன் படம் பண்ணும் போது எனக்கு தனி ஸ்பேஸ் கிடைக்கிறது.

கார்த்திக் சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவை அளிப்பவர். நல்ல இசை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்தவற்றில் இதற்கு தனி இடம் உண்டு.

இந்த படம் வேறு மாதிரி இருக்கும். எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இது உங்களுக்கு கண்டிப்பாக கனெக்ட் ஆகும், நன்றி.

Jigarthanda Double x movie will be vera level says Santhosh Narayanan

விஜய் மீது புகார்..; ‘லியோ’ ரிலீசாகும் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம்

விஜய் மீது புகார்..; ‘லியோ’ ரிலீசாகும் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் ‘லியோ’.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதமேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த ட்ரெய்லரில் தே…்பையா என்ற ஒரு வார்த்தையை நடிகர் விஜய் பயன்படுத்தியிருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

விஜய் போன்ற முன்னணி நடிகர் ஒருவர்.. அதிகமான குழந்தைகளை ரசிகர்களாக வைத்திருக்கும் ஒரு நடிகர் இப்படி பேசலாமா ? என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையை திரையிடக்கூடாது எனவும் அந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி படம் வெளியானால் *லியோ ரிலீஸாகும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்.* என தெரிவித்துள்ளனர்.

Leo movie controversy dialogue should be removed

More Articles
Follows