தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல படங்களின் நடித்து இன்று வரை ரசிகர்களின் ஆஸ்தான நடிகராக இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தந்தையின் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமான இவர் பின்னர் முன்னணி இயக்குனரின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் இளம் வயதிலேயே திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு உயர்ந்து ‘மன்மதன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
சிம்புவின் சினிமா கேரியரில் இந்த படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் சிம்புவின் நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்றது.
இதனையடுத்து வெற்றி தோல்வி என அனைத்தையும் கலந்து கொடுத்தார் சிம்பு.
அண்மைக்காலமாக ‘மாநாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில்..
“நான் காட்டுப் பசியில் இருக்கிறேன்.. என் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு சிறந்த திரைக்கதை வேண்டும்.. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு மன்மதன் படத்தில் அமைந்தது அந்தப் படத்தை நானே இயக்கியிருந்தேன்.
தற்போது மீண்டும் நடிப்பு பசியில் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
எனவே மீண்டும் சிம்பு படம் இயக்குவது குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தன் ட்விட்டர் பதிவில் எஸ் டி ஆர் 48 எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிம்பு.
Patience is a virtue. It took a lot of faith but it’s worth the wait ??
#STR48 https://t.co/VqG0NTEtkk
STR plans to direct his next film