’தலைவன் இருக்கின்றான்’: கமல் – ஏஆர் ரஹ்மான் மீண்டும் கூட்டணி..?

’தலைவன் இருக்கின்றான்’: கமல் – ஏஆர் ரஹ்மான் மீண்டும் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal ar rahmanகமல் நடித்த இந்தியன், பஞ்ச தந்திரம், தெனாலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏஆர். ரஹ்மான்.

விரைவில் இந்த கூட்டணி கமல் நடித்து தயாரித்து இயக்கவுள்ள ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்திலும் இணைய வாய்ப்புள்ளாக தெரிகிறது.

’தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் சிவாஜி, கமல் நடித்த ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

வடிவேலு, விஜய்சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த நிலையில் நாளை ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரசிகர்களுடன் கமல், ரஹ்மான் இணைந்து உரையாடவுள்ளனர்.

இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ’தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் டைரக்சனில் நடிகர் தனுஷ்..; தயாரிப்பாளர் மாற்றம்..?

மீண்டும் டைரக்சனில் நடிகர் தனுஷ்..; தயாரிப்பாளர் மாற்றம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush directorநடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டையே கலக்கி வருபவர் தனுஷ்.

நடிப்பில் பிசியாக இருந்த போரே ’பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் தனுஷ்.

இந்த படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடிக்க தனுஷே தயாரித்திருந்தார்.

அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், சில மாதங்களிலேயே தன் அடுத்த பட இயக்கத்தை தொடங்கினார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தொடங்கிய அந்தப் படத்தில் நாகார்ஜூன், ஸ்ரீகாந்த், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திங்கள் நடிக்க தொடங்கினர்.

‘நான் ருத்ரன்’ எனப் பெயரிடப்பட்ட அப்படம் ஒரு சரித்திர காலத்து கதையாகும்.

ஆனால் சில தினங்களிலேயே பைனான்ஸ் பிரச்சினையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது அதே படத்தை மீண்டும் தொடங்க தனுஷ் முடிவெடுத்துள்ளாராம்.

ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் அந்த படத்தை தயாரிக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

கோலிவுட்டை தாண்டி பாலிவுட் செல்லும் விக்ரமின் ’கோப்ரா’

கோலிவுட்டை தாண்டி பாலிவுட் செல்லும் விக்ரமின் ’கோப்ரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cobra vikramவிக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் ’கோப்ரா’.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரே இதன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்பட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற போது கொரோனா ஊரடங்கால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

உடனடியாக படக்குழுவினர் நாடு திரும்பினார். கொரோனா பிரச்சினைக்கு பிறகு இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ’கோப்ரா’ பட ஹிந்தி உரிமையை கோல்டு மைன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் ஹிந்தி டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐ, ’ராவண்’ மற்றும் ‘டேவிட்’ ஆகிய படங்களின் மூலம் ஹிந்தியில் விக்ரம் பிரபலமானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

ஆந்திர முதல்வரை சந்தித்த சிரஞ்சீவி – நாகார்ஜுனா – ராஜமவுலி

ஆந்திர முதல்வரை சந்தித்த சிரஞ்சீவி – நாகார்ஜுனா – ராஜமவுலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jagan mohan reddyகொரோனா தொற்று பரவலை தடுக்க நாடெங்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதே சமயத்தில் சில தளர்வுகளுடன் தொழில் நிறுவனங்கள் திறக்க அரசு அனுமதியளித்து வருகிறது.

நமது பக்கத்து மாநிலமான தெலங்கானாவில் சினிமா சூட்டிங் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்கு திரைப்படநடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு உள்ளிட்டோர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துள்ளனர்.

அதன் பின்னர் சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:

தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15ம் தேதிக்கு பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.

சினிமாவை காப்பாற்ற சில சலுகைகளை முதல்வரிடம் கேட்டிருக்கிறோம்.

பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும்போது நாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வது, தியேட்டர்களுக்கு மின் கட்டண சலுகை, வரி குறைப்பு, சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

NAKED TRAILER.. ராம்கோபால் வர்மாவுக்கு சவால் விடும் ‘PUBG’ விஜய் ஸ்ரீ

NAKED TRAILER.. ராம்கோபால் வர்மாவுக்கு சவால் விடும் ‘PUBG’ விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sri gகமலின் அண்ணன் சாருஹாசன் 87 வயதில் ஹீரோவாக நடித்த ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ.

ஒரு திருநங்கையின் காதலை மையப்படுத்தியும் ஒரு வயதான தாதா கேரக்டரையும் மையப்படுத்தியும் இருந்தார்.

தற்போது இவரின் 2வது படமாக ‘பீட்ரூ’ என்ற படம் உருவாகி வருகிறது.

இதில் அம்சவர்தன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இத்துடன் தற்போது ஐஸ்வர்யா த்த்தாவை நாயகியாக வைத்து ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா தத்தா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிக்பாஸ் ஜுலி, அனிதா, ரித்திகா சரண் என பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா நிர்வாண கோலத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவரும் யூகிக்க முடியாத அளவில் இந்த கதையினை உருவாக்கியிருக்கிறாராம் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான ராம்கோபால் வர்மாவின் NAKED TRAILER படத்திற்கு ஒரு சவால் விட்டுள்ளார்.

உங்கள் படங்களை பார்த்திருக்கிறோம். நீங்கள் தைரியமான ஆள். எங்க ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) டீசருக்கு காத்திருங்கள்.. நீங்களே பாராட்டுவீர்கள் என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே NAKED TRAILER பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதில் அந்த ஆபாச படத்திற்கு விஜய்ஸ்ரீ சவால் விடுகிறார் என்றால்… இவரின் டீசர் எப்படி இருக்குமோ…?

டைரக்டர் பாலா மரணம்..; மூன்று படங்கள் ரிலீசுக்கு ரெடி

டைரக்டர் பாலா மரணம்..; மூன்று படங்கள் ரிலீசுக்கு ரெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bala aka Balamithran passed away“உடுக்கை” பட இயக்குனர் பாலா என்ற பால மித்திரன் நேற்று 09.06.2020 காலமானார். இவர் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

இவர் இயக்கி வந்த “உடுக்கை” படம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரமே மீதி உள்ளது.

இந்த நிலையில் வாதம் நோயால் பாதிக்கப்பட்டு, சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல்நிலை மேலும் மோசமாக, பண வசதியில்லா காரணத்தால் இயக்குனர்கள் சங்கம் மூலமாக காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இவரின் உடல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்”, “கள்வர்கள்” என் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் இவையிரண்டு வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

மறைந்த இயக்குனர் பாலா என்ற பால மித்திரன் வயது 39.

மனைவி மற்றும் பெண் குழந்தை ஒன்றும், ஆண் குழந்தை ஒன்றும் அவரது வாரிசுகளாக இருக்கிறார்கள்.

Director Bala aka Balamithran passed away

Director Bala aka Balamithran passed away

 

More Articles
Follows