காளி படத்தின் அரும்பே பாடலால் மெய் சிலிர்க்கும் ஷில்பா

காளி படத்தின் அரும்பே பாடலால் மெய் சிலிர்க்கும் ஷில்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaali movie heroine Shilfa Manjunath talks about Arumbae songவிஜய் ஆண்டனி இசையமைத்து, தயாரித்து நடித்துள்ள காளி படம் 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் “காளி” படத்தில் வரும் “அரும்பே” இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.

அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத்.

இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.

” காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது.

சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.

என்னுடைய கதா பாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம்.

நான் நவ நாகரீகமான சூழ் நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.

“அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது.

ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்.

தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்” என்கிறார் அழகு புயல் ஷில்பா மஞ்சுநாத்.

Kaali movie heroine Shilfa Manjunath talks about Arumbae song

எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்; சிவகுமார்-நாசர்-லிங்குசாமி நேரில் அஞ்சலி

எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்; சிவகுமார்-நாசர்-லிங்குசாமி நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Writer Balakumaran passes awayபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று மதியம் காலமானார்.

இலக்கிய உலகிலும் திரையுலகிலும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

அவருக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் பேசியதாவது…

பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள்.

சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பால குமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல.

சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது. பாலகுமாரன் எழுத்துக்களுக்கு விகடன் மற்றும் கல்கி போன்ற பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார்.

கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன் , ஜென்டில்மேன், ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார்.

பாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மீகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மீக நூல் ஒன்றை எழுதியுள்ளார். என்னை பொறுத்த வரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவருக்கு மனைவி உண்டு, காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராக தான் நான் பார்க்கிறேன்.

சித்தர்களின் வார்த்தைகள் படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றார் நடிகர் சிவகுமார்.

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் பற்றி நடிகர் நாசர் !!

பாலகுமாரன் அய்யா அவர்களை என்னுடைய முதல் பட செட்டில் வைத்து தான் முதன் முதலாக சந்தித்தேன். அப்போது தான் இலக்கியம் எனக்கு பரிட்சயமான சமயம்.

நிறைய புத்தங்கங்களை படித்துக்கொண்டு இருந்த போது பாலகுமாரன் அவர்களின் புத்தகங்களையும் படித்தேன். மனித உணர்வுகளை மிகவும் ஆழமாக கூறிய எழுத்தாளர் அவர்.

அவர் நடிகர்களுக்காக சொன்ன விஷயம் நடிகர்கள் எவ்வளவு புத்தங்கள் படிக்கிறார்களா, எவ்வளவு மனித உறவுகள் பற்றி தெரிந்துகொள்கிறார்களோ அவ்வளவு தூரம் நல்ல நடிகராக முடியும். அவர் அன்று சொன்னதை நான் இன்றும் கடைபிடிக்கிறேன்.

நாயகன் படைத்தில் அவர் எழுதிய வசனத்தை நானும் பேசி நடித்துள்ளேன். அவருடைய புத்தங்கங்கள் மற்றும் நாயகன் போன்ற படங்களின் கடைசி பிரதி இருக்கும் வரையில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

எழுத்தாளர் பாலகுமாரனை பற்றி இயக்குநர் லிங்குசாமி பேசியது :-

நான் ஜென்டில்மேன் படத்தில் வேலை செய்யும் போது எனக்கு எழுத்தாளர் பாலகுமாரனை தெரியும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் இயக்குனர் ஷங்கர், வசந்தபாலன் போன்ற இயக்குநர்கள் ஆரம்பித்து வசந்தபாலன் வரை பலருடன் அவர் இனைந்து பணியாற்றியுள்ளார்.

சினிமா மற்றும் இலக்கியத்தில் ஜொலிக்க கடுமையான உழைப்பு மட்டும் போதாது வெறிவேண்டும் என்று கூறியவர் அவர். ஒரு காலத்தில் சுஜாதாவும் அவரும் தான் தமிழில் மிகப்பெரிய எழுத்தாளர்கள்.

ஒரு வாரத்தில் 7 நாட்களும் அவருடைய கதைகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. அவருடைய ஆன்மீகமும் , எழுத்தும் மிகச்சிறந்தது. அவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. அவருடைய ஆன்மா சாந்தியடைய நான் பிராத்திக்கிறேன் என்றார்.

Cinema celebrities pays final respect to writer Balakumaran

என் செம படத்தை விட ஒரு குப்பைக் கதை ஹிட்டாகனும்.: பாண்டிராஜ்

என் செம படத்தை விட ஒரு குப்பைக் கதை ஹிட்டாகனும்.: பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Kuppai Kathai movie must win more then my sema movie says Pandirajபாண்டிராஜ் தயாரிப்பில் ஜிவி. பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள படம் செம.

பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் அர்த்தனா பினு நாயகியாக நடிக்க, யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த வாரம் மே 25ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் இன்று டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடித்துள்ள ஒரு குப்பைக் கதை படத்தின் இசை விழாவில் பாண்டிராஜ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது.. அடுத்த வாரம் நான் தயாரித்துள்ள செம படம் வெளியாகிறது.

அதே நாளில் இந்த ஒரு குப்பைக் கதை படமும் வெளியாகிறது.

என் செம படத்தை விட இந்த படம் மிகப்பெரிய ஹிட்டாகனும்.” என்று பேசினார்.

Oru Kuppai Kathai movie must win more then my sema movie says Pandiraj

sema gvp

ஒரே நாளில் கிட்டதட்ட ஒரே பெயரில் ரிலீஸாகும் அதர்வா-ஜிவி.பிரகாஷ் படங்கள்

ஒரே நாளில் கிட்டதட்ட ஒரே பெயரில் ரிலீஸாகும் அதர்வா-ஜிவி.பிரகாஷ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Semma Botha Aagatha and Sema movie clash on 25th May 2018பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அதர்வாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் பத்ரி வெங்கடேஷ்.

இவர் மீண்டும் அதர்வாவை வைத்து இயக்கியுள்ள படம்
செம போத ஆகாதே.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மிஷ்டி, அனைகா சோதி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், நரேன், ஜான் விஜய், யோகி பாபு, மனோ பாலா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தை இந்த வாரம் மே 18ஆம் தேதி வெளியாகவிருந்தது.

ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் படத்தின் வெளியீட்டு தேதியை இம்மாதம் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதே தேதியில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள செம படம் வெளியாகிறது.

இந்த இரு படங்களும் கிட்டதட்ட ஒரே பெயரில் வெளியானால் ரசிகர்கள் குழப்பம் அடைய வாய்ப்புள்ளது.

Semma Botha Aagatha and Sema movie clash on 25th May 2018

ஹீரோவை திட்டி விட்டு ஒரு குப்பைக் கதையை வாங்கிய உதயநிதி

ஹீரோவை திட்டி விட்டு ஒரு குப்பைக் கதையை வாங்கிய உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayடான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு குப்பைக் கதை.

காளி ரங்கசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி வெளியிடுகிறார்.

வருகிற மே 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

அதில் நடிகர் உதயநிதி, ஆர்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் உதயநிதி பேசும் போது,

தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார்.

என்னை நடனமாட ஊக்குவித்தவர் அவர் தான்.

ஒரு படத்தில் இவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை அறிந்தேன். இதுவரை நல்லாதானே இருந்தார். இப்போ ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன்.

பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான்.” என்று பேசினார்.

Oru Kuppai Kathai movie will be released by Red giant movies

okk movie audio

ரஜினி-சூர்யாவை அடுத்து தனுஷை இயக்கும் பா. ரஞ்சித்..?

ரஜினி-சூர்யாவை அடுத்து தனுஷை இயக்கும் பா. ரஞ்சித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and ranjithகார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை அடுத்து சூர்யாவின் படத்தை இயக்கவிருந்தார் ரஞ்சித்.

ஆனால் அதற்குள் ரஜினியின் கபாலி பட வாய்ப்பு வரவே, அதில் பிஸியாவிட்டார்.

எனவே சூர்யா மற்ற படங்களுக்கு தன் கால்ஷீட்டை ஒதுக்கி விட்டார்.

அதற்குள் மீண்டும் ரஜினி பட வாய்ப்பு வரவே, காலா படத்தை இயக்க சென்றுவிட்டார்.

இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

அந்த படங்களை முடித்துவிட்டு பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

இந்த படங்கள் தொடர்ந்து தனுஷ் படத்தை ரஞ்சித் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இப்படம் சமூகம் கலந்த அரசியல் கதையாக இருக்குமாம். ஏற்கெனவே கொடி என்ற படத்தில் அரசியல்வாதியாக கலக்கியிருந்தார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows