தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் இந்த வாரம் மே 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்த படத்தை அவரை இயக்கி இசையமைத்து எடிட்டிங் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடைபெற்றது.
இதில் விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா மேடை ஏறி பேசினார்.
அவர் பேசும்போது மிகவும் உருக்கமாக விஜய் ஆண்டனிக்கு நடந்த விபத்து குறித்து பேசினார்.
“மாமா எங்கே இருக்கீங்க? இன்று உங்கள் முன்னால் இருக்கிறார். நீங்கள் அனைவரும் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கடந்த பொங்கல் சமயத்தில் அவரது உதவியாளர் எனக்கு போன் செய்தார்.
சாருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சுய நினைவின்றி தண்ணீரில் மூழ்கி விட்டார் என்றார்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லாம் முடிந்து விட்டது என்று கூட நினைத்தேன்.
அதன் பின்னர் ஒவ்வொரு நண்பர்களும் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் காட்டிய அன்பு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. இவ்வளோ பேர் அவருக்காக இருக்கும்போது அவருக்கு ஒன்று நடக்காது என்ற நம்பினேன்.
இன்று அவர் மீண்டு வந்திருக்கிறார் எல்லாம் பாசிட்டிவாக இருக்கிறது. பிச்சைக்காரன் 2 படத்தில் நிறைய ரொமான்ஸ் செய்துள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது” என்று பேசினார் பாத்திமா.
Where are you? I thought everything was over. Fathima Vijay Antony tears