பஜனை கூட்டணியின் அடுத்த பூஜை… இருட்டு அறையில் முரட்டு குத்து

பஜனை கூட்டணியின் அடுத்த பூஜை… இருட்டு அறையில் முரட்டு குத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iamk stillsசந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த ஹரஹர மஹாதேவகி படம் அண்மையில் வெளியானது.

அடல்ட் காமெடி படமாக உருவான இந்த பஜனை படம் இளைஞர்களை கவர்ந்தது.

இப்படம் வெளியாகும் முன்னரே தங்களின் அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி அக்டோபர் 7ஆம் தேதி இதன் பூஜை போடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு….

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார்.

பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்.’ என்றார்.

இதன் டைட்டில் லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் காண்டம் மற்றும் பிரா உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Iruttu Araiyil Murattu Kuthu movie Pooja and First look updates

Iruttu Araiyil Murattu Kuthu movie Pooja and First look updates

ஜெய்யின் லைசென்ஸை கேன்சல் செய்து ரூ.5200 ஃபைன் போட்டது கோர்ட்

ஜெய்யின் லைசென்ஸை கேன்சல் செய்து ரூ.5200 ஃபைன் போட்டது கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai artகடந்த மாதம் குடிபோதையில் கார் ஓட்டிய சர்ச்சையில் சிக்கினார் நடிகர் ஜெய்.

மேலும் விபத்து ஏற்படுத்தியதாலும் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதாலும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஜெய் ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அவர் ஆஜராகவில்லை என்பதால் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்து, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஜெய்.

இதனையடுத்து ஜெய்க்கு ரூ. 5200 அபராதமும், 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jai driving licence is cancelled for 6 months for Drunk Driving case

கமல் நன்றாக நடிப்பார்; ஆனால் தலைவர்ன்னா ரஜினிதான்.. – சாருஹாசன்

கமல் நன்றாக நடிப்பார்; ஆனால் தலைவர்ன்னா ரஜினிதான்.. – சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal is good Actor but Rajini is Thalaivar says Charuhasanகமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அவர்கள் ரஜினி மற்றும் கமலின் சினிமா பயணம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் கூறியதாவது…

சிவாஜி நன்றாக நடிப்பார். அவர் நடிக்கட்டும்ய்யா. நமக்கு அண்ணன் எம்ஜிஆர்தான் என்று நாங்கள் சொல்வோம். அன்று பலருடைய மனநிலையும் இதுதான். அதே நிலைமைதான் இன்று ரஜினிக்கும் கமலுக்கும் உள்ளது.

கமல் நன்றாக நடிக்கக்கூடிய திறமையான நடிகர். ஆனால் ரஜினிக்குதான் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்தான் தலைவர்.

கமலுக்கு நிறைய ரசிகைகள் உண்டு. கமலை பெண்கள் ரசிப்பதால் கோபப்படுபவர்களும் அதிகம் உண்டு.

ரஜினியை காதலிக்கிறேன் என யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் மக்களை கவரும் காந்தம் கவர்ச்சி ரஜினியிடம் உள்ளது.

ரஜினி கட்சி துவங்கமாட்டார். அவர் அரசியல் பேசிக் கொண்டிருப்பார். கமலை விட நண்பர் ரஜினி எனக்கு நெருக்கமானவர்.

ரஜினியை விமர்சித்தால் வாக்குகள் சிதறும். அதனால்தான் எந்த அமைச்சரும் ரஜினியைத்தான் விமர்சிக்க மாட்டார்கள்.” என்றார்.

Kamal is good Actor but Rajini is Thalaivar says Charuhasan

கமல்ஹாசன் நாத்திகவாதி அல்ல…. ரகசியத்தை போட்டு உடைத்த சாருஹாசன்

கமல்ஹாசன் நாத்திகவாதி அல்ல…. ரகசியத்தை போட்டு உடைத்த சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan charuhasanதிரைப்படங்களில் எந்த வேஷம் என்றாலும் தயங்காமல் ஏற்பவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

ஆனால் வெளியுலக வாழ்க்கையில் மனதில் பட்டதை வேஷம் போடாமல் பேசுபவர் இவர்.

தன்னை நாத்திகவாதியாக (அவரது பாஷையில் பகுத்தறிவாளர்) காட்டிக் கொள்பவர் இவர்.

இவரைப்போல இவரின் அண்ணன் சாருஹாசனும் நாத்திகவாதிதான். ஆனால் கமல் மகள் ஸ்ருதிஹாசன் கடவுள் பக்தி கொண்டவர்.

இந்நிலையில் கமல் அண்ணன் சாருஹாசன் கமலின் நாத்திகம் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதில்…

கமல் என்னிடம் இருந்துதான் நாத்திகம் கற்றார். கடவுளே இல்லை என்பவன் நான்.

ஆனால் அவர் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.

ஆனால் கடவுள் இருந்தாலும் நன்றாக இருக்காது என்கிறேன் நான்.

ஒரு ஆன்மிகவாதிதான் கோயிலை இடிக்கிறான். அவன்தான் கட்டுகிறான். நாங்கள் நாத்திகவாதிகள். நாங்கள் இடிப்பதில்லை.” என்றார்.

Kamalhassan is not an Atheists says his brother Charuhasan

கமல்-ரஜினி நட்பை யாராலும் பிரிக்க முடியாது.. சாருஹாசன்

கமல்-ரஜினி நட்பை யாராலும் பிரிக்க முடியாது.. சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No one can break Kamal Rajini friendship says actor Charuhassanகமலின் சகோதரர் சாருஹாசன் அவர்கள் கமல் மற்றும் ரஜினியின் நட்பு குறித்து பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

அரசியலில் ஜெயிக்கும் ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கும் என சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி விளையாட்டுக்கு பேசியிருக்கலாம்.

அந்த விழாவில் கமலை ரஜினி கேலி செய்யவில்லை. காரணம் அவர்களின் நட்பு குறித்து எனக்கு தெரியும்.

அவர்களை பிரிக்க முடியாது. இந்த சாருஹாசனால் கூட அவரை பிரிக்க முடியாது.

மக்கள்தான் அவர்களை பிரித்துப் பார்க்கிறார்கள்” என்றார்.

No one can break Kamal Rajini friendship says actor Charuhassan

மக்கள் ரஜினியை வணங்குகிறார்கள்… – கமல் அண்ணன் சாருஹாசன்

மக்கள் ரஜினியை வணங்குகிறார்கள்… – கமல் அண்ணன் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

charuhassanவிரைவில் தமிழக அரசியல் களத்தில் நாங்கள் குதிப்போம் என்ற வகையில் ரஜினி, கமலும் இருவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கமல் அண்ணன் சாருஹாசன் இவர்களின் அரசியல் பயணம் குறித்து பிரபல டிவிக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது…

மக்கள் விரும்பினால் முதல் அமைச்சர் ஆவேன் என யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.

மக்களை விரும்ப வைப்பேன் என யாராவது சொல்ல முடியுமா?

கமலை ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என கேட்கிறார்கள்? நிச்சயம் அவர் அரசியலுக்கு வர காரணத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.

ரஜினியை தமிழக மக்கள் வணங்குகிறார்கள். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்.

ரஜினி மற்றும் கமல் இணைந்தால் 10% வாக்குகள் மட்டுமே பெறுவார்கள். மக்கள் அந்தளவு சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் இல்லை. என்று தெரிவித்தார்.

Tamil peoples praying Rajini as God says Charuhassan

More Articles
Follows