சம்பளத்தை தயாரிப்பாளர் நிர்ணயிக்கட்டும்; பிரகாஷ்ராஜ் போல் நடிக்க ஆசை.. : ராஜ்கமல்

சம்பளத்தை தயாரிப்பாளர் நிர்ணயிக்கட்டும்; பிரகாஷ்ராஜ் போல் நடிக்க ஆசை.. : ராஜ்கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I would like to act like Prakash Raj says Actor Rajkamalசின்னத்திரையில் பிரபலமான பல சீரியல்களில் நடித்துள்ளவர் ராஜ்கமல்.

மேலும் பல மேடை நிகழ்ச்சிகள், டிவி ஷோக்கள் என அனைத்தையும் தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இப்படியான திறமைகள் இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து வருகிறார்.

இவர் சீரியல் நடிகர் என்பதால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு பெரும்பாலும் மறுக்கப்பட்டு வருகின்றன.

இவர் நாயகனாக நடித்த சண்டி குதிரை படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மேல்நாட்டு மருமகன் என்ற படம் நாளை வெளியாகவுள்ளது.

இதனையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…

டிவி சீரியல்கள் அனுபவம் இருந்தாலும் னிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை.

கில்லியில் த்ரிஷாவுக்கு வில்லன், அதே த்ரிஷாவுக்கு அபியும் நானும் படத்தில் அப்பாவாக நடித்தவர் பிரகாஷ்ராஜ். அவரைப் போன்று விதவிதமாக நடிக்கவே எனக்கு ஆசை.

இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டதால் கேரக்டர் ரோலில் நடிக்க என்னை யாரும் அழைப்பதில்லை.

மேலும் நான் நிறைய சம்பளம் கேட்பேன் என நினைக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளர் இந்த கேரக்டருக்கு இந்த சம்பளம் போதும் என நினைத்து அவர் எதை கொடுக்கிறாரோ? அதுவே எனக்கு போதும்.

என் சம்பளத்தை அவரே நிர்ணயிக்கட்டும். நான் என் சம்பளம் பற்றி பேசமாட்டேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.

I would like to act like Prakash Raj says Actor Rajkamal

பிரியா வாரியரை மயக்கிய அந்த இளைஞர் யார் தெரியுமா..?

பிரியா வாரியரை மயக்கிய அந்த இளைஞர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Roshan abdulப்ரேமம் சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ஷெரில் பட்டியலில் அடுத்ததாக தற்போது கேரளாவை கலக்கியவர் பிரியா வாரியர்.

ஒரு பாடலின் ஒரு சில நொடி காட்சிகளில் காட்டிய எக்ஸ்பிரஷினிலேயே இளைஞர்களைத் தவிக்க விட்டுள்ளார் இவர்.

பிரியா வாரியரின் முகநூல், இன்ஸ்ட்கிராம், ட்விட்டர் எல்லாமும் லைக்ஸ்களாலும், பாலோயர்ஸ்களாலும் நிரம்பி வழிகிறது.

பிரியா வாரியரை பார்த்து கண்ணடித்த அந்த புதுமுக நடிகர் யார் என்கிற கேள்விக்கு இப்போது எல்லோரும் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ரோஷன் அப்துல் ரஹூஃப் என்பவர் தான் அந்த இளைஞர். பிரியா வாரியரைத் தொடர்ந்து தற்போது ரோஷனும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றார்.

கேரளா, திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஷன் அப்துல் ரஹூஃப்பிற்கு வயது 20. இவர் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலமாக திரை உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து, ரோஷன் அப்துல் ரஹூஃப் தனது, இளங்கலை பட்டத்தை தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு நடன கலையில் ஆர்வம் அதிகம் இருந்ததினால் முறையான பயிற்சியினை மேற்கொண்டு, D3-D4 சிசன்3 என்ற நடன நிகழ்ச்சியில் தன்னுடன் பிறந்த அண்ணனோடு கலந்து கொண்டு ஜோடி நம்பர் ஒன் டைட்டில் பெற்றிருக்கிறார்.

நடன கலைஞராக வலம் வந்த நிலையில் இவரை தேடி வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இஸ்லாமியர் மனதை காயப்படுத்திவிட்டார்; பிரியா வாரியர் மீது வழக்கு

இஸ்லாமியர் மனதை காயப்படுத்திவிட்டார்; பிரியா வாரியர் மீது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priya varrier‘ஒரு அடாரு லவ்’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை, காதலர் தினத்தை முன்னிட்டு வெளிட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி படக்குழுவினரால் வெளியிடப்பட்ட “மாணிக்ய மலராய பூவி” என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்

ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்க, அப்போது தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பிரியாவின் பார்வையும், அவர் புருவத்தை உயர்த்தும் விதமும் வைரலாf பரவி வருகிறது.

சில நொடிகள் ஓடும் அந்த வீடியோவை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்.

தற்போது யூடியூபில் டிரெண்டான வீடியோக்களில் முதலிடத்தில் உள்ள அந்த வீடியோவால், பிரியா வாரியருக்கு தனி ரசிகர்கள் பட்டாளேமே உருவாகியுள்ளது.

கேரளா மட்டும் இன்றி தமிழகம், ஆந்திரா என தென்னிந்தியா முழுவதும் பிரியா வாரியர் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில், பிரியா வாரியர் மீது ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ”மாணிக்க மலராய பூவி..” பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, பிரியா வாரியர் மற்றும் இயக்குநர் மீது ஐதராபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காலா ரிலீஸ் எபெக்ட்; தேதியை மாற்றிய சூப்பர் ஹீரோக்கள்

காலா ரிலீஸ் எபெக்ட்; தேதியை மாற்றிய சூப்பர் ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaalaரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் ஏப்ரல் 27-ம் தேதி வரவுள்ளது.

இதை ஒரு சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இப்படத்திற்கு இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காலா வெளியாகும் இதே நாளில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுனின் படங்களும் திரைக்கு வரவுள்ளதாம்.

தற்போது காலாவின் ரிலீஸ் உறுதியாகிவிட்டதால் அந்த இரண்டு படங்களையும் ஏப்ரல் 26-ம் தேதியே ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

எனவே காலா வெளியாகும் ஏப்ரல் 27-ம் தேதி மற்ற படங்களால் எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் லீக்கான காட்சிகள்; ரஜினி-விஜய் படக்குழுவினர் அதிர்ச்சி

வைரலாகும் லீக்கான காட்சிகள்; ரஜினி-விஜய் படக்குழுவினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and vijayசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அதை படத்தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவித்தார்.

இதனிடையில் படத்தில் ரஜினி மோதும் சண்டைக்காட்சி ஒன்று லீக்காகியுள்ளது.

கிட்டதட்ட 13 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ அது. இந்த வீடியோ எப்படி வெளியானது என படக்குழுவினர் புரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் ஃபோட்டோ ஷுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்தன.

தற்போது இதன் சூட்டிங் கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

அங்கு படமாக்கப்பட்ட காட்சிகளில் 10 விநாடி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.

ரஜினி மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள். இவர்களின் சூட்டிங்க்கு எப்போதும் பலத்த கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.

அப்படி இருந்தபோதிலும் காட்சிகள் லீக்காவது படக்குழுவினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

அன்லாக் குறும்பட பர்ஸ்ட் லுக்கை ஸ்கெட்ச் இயக்குநர் வெளியிட்டார்

அன்லாக் குறும்பட பர்ஸ்ட் லுக்கை ஸ்கெட்ச் இயக்குநர் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unlock first lookஇன்று மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது மொபைல் போன்.

கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை, நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட செல்போன் தவறுதலாக தொலைந்து விட்டால், வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ‘ லாக்’ செய்து வைத்திருப்பார்கள்.

அதில் பாஸ்வேர்டு தெரிந்த செல்போனை உரிமையாளர் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கால் செய்யும் வசதியையும் லாக் செய்திருப்பார்கள்.

மொபைல் வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து அவருக்கு உதவும் எண்ணத்தில் மொபைல் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயன்றால் அது லாக் ஆகியிருக்கும்.

இதனால் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியாது. சில நேரம் அவர் யாரென்று தெரியாமல் அவரது உயிரைக் காப்பாற்றக்கூட முடியாமல் போய் விடும். இப்படிப்பட்ட கருத்தை மையமாக வைத்துத்தான் ‘அன்லாக் ‘ குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்கியிருப்பவர் மாஸ் ரவி. இவர் திரைப்பட நடிகர் .அண்மையில் வெளிவந்த விக்ரமின் ‘ ஸ்கெட்ச் ‘ படத்தில் கூட முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார். இசை – கிறிஸ்டி, ஒளிப்பதிவு – சரண் மணி, படத்தொகுப்பு – ஸ்ரீ ராஜ் குமார், டிசைன் – சரத்குமார், இனை தயாரிப்பு – பூபாலன். லைக் அண்ட் ஷேர் மீடியா சார்பில் இதைத் தயாரித்து இருப்பவர் Pro சக்தி சரவணன்.

இக் குறும்படத்தில் மாஸ் ரவி, நடிகர் நாகா, நடிகர் ஆல்வின், சக்தி சரவணன் , பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சென்னை நகரின் ஜன சந்தடியுள்ள போக்குவரத்து நெருக்கம் உள்ள இடங்களில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

சில நிமிடங்கள் ஓடும் ‘அன்லாக்’ குறும்படம் பார்ப்பவர்களை நெடுநேரம் யோசிக்க வைக்கும். செல்போனில் எது எதை மூடி வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஊட்டும்.

இதை படிப்பினையூட்டும் குறும்படம் என்றும் கூறலாம்.

More Articles
Follows