நான் என்ன சூர்யா? விக்ரம்? ஆனாலும் சேலஞ்ச் ஏத்துக்கிட்டேன்… – அபர்ணதி்

நான் என்ன சூர்யா? விக்ரம்? ஆனாலும் சேலஞ்ச் ஏத்துக்கிட்டேன்… – அபர்ணதி்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘இறுகப்பற்று’.

எலி படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வரும் அக்-6ஆம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகை அபர்ணதி பேசும்போது…

“தேன் படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். இயக்குநர் யுவராஜ் முதலில் ஸ்கிரிப்ட் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என கூறினேன். அடுத்த நிமிடமே இந்த படத்திற்காக எனது உடல் எடையை கூட்ட வேண்டும் என்று கூறினார்.

இது என்ன சாதாரணம் தானே என நினைத்து உடல் எடையை கூட்ட ஆரம்பித்தாலும் மூன்று மாதம் ஆகியும் கூட என்னால் அவர் சொன்ன அளவிற்கு எடையை கூட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட இந்த படத்திற்கு நான் செட்டாக மாட்டேன் என்றே சொல்லிவிட்டார்கள்.

அந்த சமயத்தில் தான் ஒரு சரியான டயட்டீசியனை விதார்த் எனக்கு கைகாட்டினார். அவரது ஆலோசனையை கடைபிடித்து எடையை கூட்டினேன்.

காலையில் துவங்கி எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். அதற்கே அதிக பட்ஜெட் ஆனது. ஒரு கட்டத்தில் சாப்பிடவே பிடிக்காமல் போய்விட்டது. நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ? எடையை கூட்டி குறைப்பதற்கு.. ஆனாலும் இதை ஒரு சேலஞ்சாக எடுத்து பண்ணினேன்.

இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு விதார்த்தம் தான் காரணம். பார்க்க பர்கர் மாதிரி இருக்கிறேனே, ஆனால் ஸ்கிரீனில் காட்டமாட்டேன் என்கிறார்களே என நினைத்து ஆர்வமுடன் ஸ்பாட்டுக்கு போனால் ஒளிப்பதிவாளர் கோகுல் வேறு மாதிரி என்னை காட்டிவிடுவார்.

இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமை. நிச்சயமாக இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும். இந்த படம் துவங்கியதிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளியே வர ஒன்றை வருடம் ஆனது. இடையில் விளம்பர படம், ஆல்பம் என தேடி வந்த சில வாய்ப்புகளையும் இதனால் மிஸ் செய்தேன்” என்று கூறினார்.

I am not Suriya or Vikram says Abarnathi

ஆணுக்கும் பெண்ணுக்கும் அடி விழும்.. – கவிஞர் கார்த்திக் நேத்தா

ஆணுக்கும் பெண்ணுக்கும் அடி விழும்.. – கவிஞர் கார்த்திக் நேத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’.

வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் இசைக்கு ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவிற்கு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா என பக்கபலமான தொழில்நுட்ப கூட்டணியும் இணைந்து கைகோர்த்துள்ளனர்.

வரும் அக்-6ஆம் தேதி இப்படம் உலகெங்கும் ரிலீஸாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து இறுகப்பற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது…

“இன்றைக்கு உலகமெங்கும் ‘மைய குடும்ப உறவு முறை’ தான் இருக்கிறது. கூட்டமாக இருந்தபோது வராத சிக்கல் இப்போது வெடித்திருக்கிறது. நவீன வாழ்க்கையில் கணவன், மனைவி பிரச்சனை நரக வேதனையாக இருக்கிறது.

அந்த சிக்கலை ஆணித்தரமாக அலசும் படம் தான் இந்த ‘இறுகப்பற்று’. ஆண், பெண் இருவருக்குமான ஈகோ தான் இதற்கு காரணம். நான் படம் பார்த்து விட்டேன். நிறைய இடங்களில் கண்கலங்கினேன். படம் பார்க்கும்போது ஒரு பயமும் வந்தது. காரணம் இப்போதுதான் என்னுடைய திருமண வாழ்க்கையே ஆரம்பித்திருக்கிறது.

இந்த படம் வெளியாகும்போது ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” என்றார்.

படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பேசும்போது…

“ஸ்கிரிப்ட்டில் நன்றாக இருக்கும் விஷயங்களை சினிமாவில் சொல்லும்போது சில நேரங்களில் அது பார்வையாளர்களிடம் சரியாக ரீசாகாமல் போய்விடும். ஆனால் இயக்குநர் யுவராஜ் அதை தெளிவாக கையாண்டு திரையில் கொண்டு வந்துள்ளார். படத்தில் நடித்தவர்களின் காட்சிகளை வெட்டுவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது.

அந்த அளவுக்கு அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். கணவன், மனைவியாக படம் பார்க்க வருபவர்கள் படம் முடிந்து போகும்போது தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவந்து விட்டுதான் வீட்டுக்கு செல்வார்கள்: என்றார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது… “இயக்குநர் யுவராஜுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்து, அவரிடம் கதை கேட்டதுமே இவருக்கும் நமக்கும் செட்டே ஆகாது என்கிற எண்ணம் தான் தோன்றியது.

ஆனால் இரண்டாவது சந்திப்பில் இருந்து அது மாறியது. அவர் ஒரு குழந்தை மாதிரி. விக்ரம் பிரபு சின்னச்சின்ன கியூட் எக்ஸ்பிரஷன்களால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

விதார்த் அபர்ணதி ஜோடியுடன் எல்லாரும் தங்களை எளிதாக தொடர்புபடுத்தி பார்பார்கள். குறிப்பாக அபர்ணதி இந்த படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார் படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்து விடும்” என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது…

“ஒளிப்பதிவாளர் கோகுல் இவ்வளவு பேசுவாரா என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. அந்த அளவுக்கு படம் அவரை ஈர்த்திருக்கிறது. எனக்கும் இப்போதுதான் திருமணம் நடந்தது. எனக்கு இந்த படம் ஒரு நல்ல டீச்சர் மாதிரி என்று சொல்வேன்..

அதேசமயம் ஒரு பிரச்சாரமாக இது இருக்காது. ஆனால் படம் முடிந்து செல்லும்போது எல்லோரும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்வீர்கள் என்பது மட்டும் உறுதி” என்றார்.

Lyricist Karthik netha sema speech at Irugapatru event

ஆஸ்கர் விருது போட்டி அப்டேட் : தமிழ் 4.. தெலுங்கு 4.. மலையாளம் 2018.;

ஆஸ்கர் விருது போட்டி அப்டேட் : தமிழ் 4.. தெலுங்கு 4.. மலையாளம் 2018.;

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023-ம் ஆண்டுக்கான அகாடமி (ஆஸ்கார்) விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் திரு. கிரிஷ் காசரவல்லி தலைமையிலான குழு 2023-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு ‘2018 – ‍‍எவரிஒன் ஈஸ் எ ஹீரோ (2018 – Everyone is a Hero) மலையாள‌ திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. கிரிஷ் காசரவல்லி, கேரளாவில் நடைபெற்ற இயற்கை பேரிடரை மையப்படுத்தி மனிதமே முக்கியம் எனும் கருத்தை ‘2018 – ‍‍எவரிஒன் ஈஸ் எ ஹீரோ’ மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும், ஒட்டு மொத்த உலகத்திற்கும் இக்கருத்து பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டரக்கரா கூறியதாவது: “பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை உலகெங்கிலும் நாம் காண்கிறோம். தன்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று பூமித்தாய் மன்றாடுகிறாள். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளம், 2018ம் ஆண்டு கேரள வெள்ளம், 2023ம் ஆண்டு இமாச்சல், உத்தரகண்ட் பேரழிவு மற்றும் லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு போன்ற இயற்கை சீற்றங்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி பணம் பறிபோனது.

இவற்றில் இருந்து பாடம் கற்று, உலகைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ’ இதைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களையும் திறம்பட பேசும் ஒரு சிறந்த படமாகும்.”

*ஆஸ்கார் விருது 2023 க்கான தேர்வுக் குழுவின் பட்டியல்:*

1. திரு. கிரிஷ் கசரவல்லி (தலைவர்) – பெங்களூர் – இயக்குனர்

2. திரு. ஜோஷி ஜோசப் – கொல்கத்தா – இயக்குனர்

3. செல்வி. சதரூபா சன்யால் – கொல்கத்தா – தயாரிப்பாளர் , இயக்குனர் , நடிகை

4. திரு. எம். வி . ரகு – ஹைதெராபாத் – இயக்குனர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர்

5. செல்வி. மஞ்சு போரா – குவஹாத்தி – இயக்குனர், எழுத்தாளர்

6. திரு. சந்தீப் சேனன் – கொச்சி – தயாரிப்பாளர்

7. திரு. முகேஷ் மெஹ்தா – சென்னை – தயாரிப்பாளர்

8. திரு. ஆர். மாதேஷ் – சென்னை – இயக்குனர், எழுத்தாளர்

9. திரு. எஸ் . விஜயன் – சென்னை – ஸ்டண்ட் மாஸ்டர்

10. திரு. ஸ்ரீகர் பிரசாத் – சென்னை – எடிட்டர்

11. செல்வி. வாசுகி பாஸ்கர் – சென்னை – கோஷ்டியும் டிசைனர்

12. செல்வி. தினேஸ் கால்வாசிவால – மும்பை – தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர்

13. திரு. ராகுல் போலே – வதோதரா – இயக்குனர், எழுத்தாளர், எடிட்டர்

14. திரு. ஷகாஜீட் டே – டெல்லி – தயாரிப்பாளர், எழுத்தாளர்

15. திரு. அசோக் ரானே – மும்பை – இயக்குனர், எழுத்தாளர், எடிட்டர்

16. திரு. என் . ஆர் . நஞ்சுண்டே கவுடா – பெங்களூர் – இயக்குனர்

*ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைப்பதற்காக பரிசீலக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் – 2023*

1 பாலகம் – தெலுங்கு
2 தி கேரளா ஸ்டோரி – ஹிந்தி
3 12th பெயில் – ஹிந்தி
4 ஸ்விகடோ – ஹிந்தி
5 ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி – ஹிந்தி
6 தி ஸ்டோரிடெல்லேர் – ஹிந்தி
7 மியூசிக் ஸ்கூல் – ஹிந்தி
8 Mrs. சட்டர்ஜீ vs நோர்வே – ஹிந்தி
9 விடுதலை பார்ட் 1 – தமிழ்
10 குஹும்மர் – ஹிந்தி
11 தசரா – தெலுங்கு
12 காதர் 2 – ஹிந்தி
13 வால்வி – மராத்தி
14 மாமன்னன் – தமிழ்
15 பாப்லயோக் – மராத்தி
16 தி வாக்சின் வார் – ஹிந்தி
17 சார் – தெலுங்கு
18 வாத்தி – தமிழ்
19 அபி டொஹ் சப் பகவான் பரோஸ் – ஹிந்தி
20 விருபாக்ஷா – தெலுங்கு
21 2018 ‍ எவரிஒன் ஈஸ் எ ஹீரோ – மலையாளம்
22 ஆகஸ்ட் 16, 1947 – தமிழ்

தமிழ் படங்கள் (4)

விடுதலை பாகம் 1
வாத்தி
மாமன்னன்
ஆகஸ்ட் 16,1947

தெலுங்கு படங்கள் (4)

பாலகம்
தசரா
சார்
விருபாக்ஷா

ஹிந்தி படங்கள் (11)

தி கேரளா ஸ்டோரி
12 th பெயில்
ஸ்விகடோ
ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி
தி ஸ்டோரி டெல்லர்
மியூசிக் ஸ்கூல்
Mrs . சட்டர்ஜி vs நார்வே
குஹூம்மர்
காதர் 2
தி வாக்சின் வார்
அபி டொஹ் சப் பகவான் பரோஸ்

மலையாள படங்கள் (1)

2018 எவரிஒன் ஈஸ் எ ஹீரோ

மராத்தி படங்கள் (2)

வால்வி
பாப்லயோக்

On selection of Indian Film for Entry to Oscar Awards

JUST IN ரசிகர்களை சமாதானப்படுத்த மிலாடி நபி-யில் விருந்தளிக்கும் விஜய்

JUST IN ரசிகர்களை சமாதானப்படுத்த மிலாடி நபி-யில் விருந்தளிக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் படத்தின் பாடல்கள் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் திடீரென நேற்று செப்டம்பர் 26 ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர். இந்த நிலையில் இன்று செப்டம்பர் 27ஆம் தேதி மாலை லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படாஸ் மா.. லியோதாஸ் மா.. . என்று தொடங்கும் இந்தப் பாடலை விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார். நாளை செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையின் போது இந்த பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் புது புத்துணர்ச்சியை கொடுக்கும் என நம்பலாம்.

லியோ

Leo 2nd Single Badas ma Leodas ma release update

லெஸ்பியன் கதையை படமாக்க வேணுமான்னு தோனுச்சி.. ஆனா…. – நடிகை நீலிமா

லெஸ்பியன் கதையை படமாக்க வேணுமான்னு தோனுச்சி.. ஆனா…. – நடிகை நீலிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

ஜெயராஜ் பழனி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில்….

” இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. ‘அரண்மனைக்கிளி’ எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள்.

ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்… எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம். நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ…! அதற்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கங்கள் இந்த செயலியில் இருக்கிறது.

ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது ‘பாணி பூரி’ தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ தொடங்கியது.

இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, ‘அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் ‘ என்றார்.

அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஏராளமான திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது. அந்த வகையில் இந்தப் படத்திற்காக உழைத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என் அனைவரும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.‌ இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Neelima became co producer in Vaazhvu Thodangumidam neethanae movie

மாடலில் துறையில் Lesbian Gay Bisexual and Transgender.. – ஸ்ருதி

மாடலில் துறையில் Lesbian Gay Bisexual and Transgender.. – ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

ஜெயராஜ் பழனி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில்…

” இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். முதலில் ‘சூல்’ எனும் பெயரில் திருநங்கைகளை முதன்மைப்படுத்திய படைப்பை உருவாக்கினேன்.

இந்தப் படைப்பை ஷார்ட் ஃபிளிக்ஸ் வாங்கி என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லி போதுமான பொருட்செலவில் உருவாக்கி, பரிசாக அளித்திருக்கிறார்கள்.

நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த படைப்பு.” என்றார்.

நடிகர் அர்ஷத் பேசுகையில்…

” வாழ்வு தொடங்கும் இடம் நீதானே எனும் இந்த திரைப்படத்தில் இர்ஃபான் எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படைப்பு காகிதத்திலிருந்து டிஜிட்டல் படைப்பாக உருவாகி இருக்கிறது என்றால், அதற்கு ஷார்ட் ஃபிளிக்ஸ் கொடுத்த ஆதரவு தான் முக்கிய காரணம். கலைஞர்களாகிய நாங்கள் இந்த கதை மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட… ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் இந்த கதை மீது அதீத நம்பிக்கையை வைத்து தயாரித்திருக்கிறார்கள்.

இதற்காக அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்த இசை பிக்சர்ஸ் நீலிமா இசை மற்றும் இசை அவர்களிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இது போன்ற வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

இது என்னுடைய கனவு நனவான தருணம். இயக்குநர் ஜெயராஜ் பழனியின் இயக்கத்தில் உருவான ‘சூல்’ என்ற குறும்படத்திலும் எனக்கு வாய்ப்பளித்திருந்தார். தற்போது இந்தப் படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார். வாய்ப்பிற்கும் நேரத்திற்கும் நன்றி.” என்றார்.

நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசுகையில்…

” வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தின் கதையை இயக்குநர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் எல் ஜி பி டி எனும் பிரத்தியேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

இந்தப் படத்தை தயாரித்த ஷார்ட் ஃபிளிக்ஸ் மற்றும் இசை பிக்சர்ஸிற்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ படத்தை பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்” என்றார்.

Lesbian Gay Bisexual and Transgender were at Modelling says Shruthi

More Articles
Follows