என்ன கிழிக்க போற கேட்டவரு என் பட சினிமா டிக்கெட்டை கிழிக்கிறாரு – அபர்னதி

என்ன கிழிக்க போற கேட்டவரு என் பட சினிமா டிக்கெட்டை கிழிக்கிறாரு – அபர்னதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் – அபர்னதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘இறுகப்பற்று’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இந்த படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார்.

அக்டோபர் 6 தேதி வெளியான இப்படம் வெற்றி பெற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகை அபர்ணதி பேசும்போது..

“இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்ட என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது.

நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன ‘கிழிக்க’ போகிறாய் என்று கேட்டான்.

ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி ‘கிழித்து’ போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான்.

இப்போதுதான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு

வேலை வாங்குகிறாரே என்று நினைத்ததால் வந்து அழுகை. இப்படத்தில் நடித்தது ஒரு சவாலாகவே இருந்தது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியது சந்தோஷம். விதார்த்தை பார்க்கும்போது மைனாவில் இருந்த அதே பவர் இதிலும் இருந்தது.

விக்ரம் பிரபு இப்படத்தில் உணர்வுகளை சரியாக பேலன்ஸ் செய்திருக்கிறார். இயக்குனர் யுவராஜ், ஸ்ரீயை நன்றாக வேலை வாங்கி இருந்தார்.” என்று கூறினார்.

Abarnathi emotional speech about her past experience

நிஜமாவே இவர்தான் விக்ரம் பிரபு.? பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு வந்த கன்ப்யூசன்

நிஜமாவே இவர்தான் விக்ரம் பிரபு.? பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு வந்த கன்ப்யூசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைகளுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ‘இறுகப்பற்று’ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது…

“இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதுவதற்கு ஜஸ்டின் பிரபாகரன் தான் காரணம். ஏற்கனவே அவருடன் இணைந்து பல படங்களில் எழுதியிருந்தாலும் இந்த படத்தில் பாடல் எழுதியது ஸ்பெஷல் என்று சொல்லலாம். இப்படத்தின் காட்சிகளை பார்த்து அதற்கேற்றபடி தான் பாடல்களை எழுதினேன். அதற்கு வசதியாக பாலாஜி மணிகண்டன் தேவையான காட்சிகளை அழகாக படத்தொகுப்பு செய்து தந்தார். எனக்கும் இயக்குனருக்கும் ஒவ்வொரு பாடலை உருவாக்கும்போதும் ஆரோக்கியமான விவாதம் நடந்தது.

இப்படத்தில் விக்ரம் பிரபுவின் காஸ்டியூம் எனக்கு ரொம்பவே பிடித்தது. இந்த படத்தில் அவரை பார்த்துவிட்டு இதுதான் நிஜமான அவரா, இல்லை டாணாக்காரன் படத்தில் பார்த்த அவர் தான் உண்மையா என்கிற ஒரு குழப்பமே எனக்கு ஏற்பட்டு விட்டது.

ஸ்ரீ, சானியா அய்யப்பன் ஜோடியினர் இன்றைய இருக்கிற இளைஞர்களை அழகாக பிரதிபலித்திருக்கின்றனர். லாப நோக்கில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் மத்தியில் நல்ல கதைக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு நன்றி” என்று கூறினார்

ஆடை வடிவமைப்பாளர் ஏகன் பேசும்போது,… “இதுவரை சார்பட்டா பரம்பரை, தங்கலான் என பீரியட் படங்களுக்கு பணியாற்றி வந்த எனக்கு இப்படத்தில் பணியாற்றுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவரவர் தொழிலுக்கு ஏற்ற மாதிரி ஆடைகளை வடிவமைத்தோம். அந்த ஆடைகள் கூட அவர்களை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்த்தனர்” என்று கூறினார்.

படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பேசும்போது…

“தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இந்த சமூகத்திற்கு நல்ல நல்ல படங்களாக கொடுத்து வருகிறார். படம் பார்த்த பல ஜோடிகள் தங்களுடைய உணர்வுகளை என்னிடம் பேசும்போது வெளிப்படுத்தினார்கள். அதிலேயே இந்த படம் எந்த அளவிற்கு அவர்களை பாதித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது” என்றார்.

Lyricist confusion with Vikram prabu character and role

LEO FDFS FINAL கடுப்பில் விஜய் ரசிகர்கள்.; மகிழ்ச்சியில் ரஜினி – அஜித் ரசிகர்கள்

LEO FDFS FINAL கடுப்பில் விஜய் ரசிகர்கள்.; மகிழ்ச்சியில் ரஜினி – அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாகவே கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக ‘லியோ’ உருவெத்துள்ளது.

இதற்கு காரணம் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது. அதன் பிறகு லியோ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெறும் எனக் கூறப்பட்டது. அதுவும் இதுவரை நடைபெறவில்லை.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு சிறப்பு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோரப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் இணையதளங்களில் வைரலான நிலையில் விஜய் ரசிகர்களும் சில பொய் மீடியாக்களும் தவறான செய்திகளை பரப்பியது. அதன்படி காலை 4 மணிக்கு காட்சி ஒளிபரப்பாகும் என பொய் செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் நம் FILMISTREET தளத்தில் அப்படி ஒரு எந்த செய்தியும் வெளியாகவில்லை. நமக்கும் இது தொடர்பான பல அழைப்புகள் வந்தன. நாம் எவ்வளவு எடுத்துக் கூறியும் பல முன்னணி மீடியாக்கள் செய்தி வெளியிட்டு இருந்தன என சிலர் கருத்து தெரிவித்தனர்.

லியோ

முன்னணி நிறுவனமாக இருந்தாலும் பொய் சொன்னால் அது உண்மையாகாது என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதன்படி காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட வேண்டும் எனவும் இரவு 1.30க்குள் 5 காட்சிகளையும் முடித்து விட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நேற்று வெளியான தமிழக அரசு ஆணையில் தளபதி விஜய் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது லியோ என படத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சில ஊடகங்களும் ரசிகர்களும் அந்த அரசாணையை தவறாக படித்த நிலையில் காலை 4 மணிக்கு காட்சிகள் தொடங்கும் என போய் செய்திகளை பரப்பியதால் சில விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு அவர்களை அப்செட் ஆக்கியிருக்கும் என நம்பலாம். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ரஜினியின் ‘ஜெய்லர்’ படத்திற்கு சிறப்பு அதிகாலை காட்சிகள் வழங்கப்படவில்லை.

அப்படி இருக்கையில் ‘லியோ’ படத்திற்கு மட்டும் எப்படி வழங்கலாம் ? ரஜினி – அஜித் ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் தற்போது வந்துள்ள புதிய அரசாணை அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

லியோ

Leo FDFS timing Government Order is here

ராவ்வான ஆக்ஷன் காட்சிகளுடன் சல்மான்கான்..; விரோதிகளை வேட்டையாட வரும் ‘டைகர் 3’

ராவ்வான ஆக்ஷன் காட்சிகளுடன் சல்மான்கான்..; விரோதிகளை வேட்டையாட வரும் ‘டைகர் 3’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர்ஸ்டார் சல்மான்கான், யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘டைகர்-3’ படத்தின் டிரைலரை வரும் அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார்.

இரும்புச் சங்கிலி அணிந்த வெறும் கைகளால் எதிரிகளை கிழித்தெறிய தயாராகும் டைகராக இதுவரை பார்த்திராத சல்மான்கானின் தோற்றத்தில் இப்படத்தின் டிரைலர் பிற்பகல் 12 மணி அளவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் யதார்த்தாமான ராவான ஆனால் கண்கவரும் விதமாக இருக்கும் என கூறுகிறார் சல்மான்கான். இந்த புதிய தோற்றம் டிரைலரிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.

டைகர் தன்னுடைய விரோதிகளை அழிப்பதற்காக முரட்டு சக்தியுடன் வேட்டையில் இறங்குவார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரில்லரான டைகர்-3 தீபாவளி பண்டிகையில் வெளியாக இருக்கிறது.

“டைகர்-3யில் ஆக்சன் காட்சிகள் ராவாக, யதார்த்தமாக மற்றும் கண்கவருதாக இருக்கும். இது சாதரணமாக இந்த உலகத்திற்கு வெளியே இருக்கும்.

இந்த டைகர் பட வரிசையில் நான் எதை விரும்புகிறேன் என்றால் தனது வெறும் கைகளாலேயே மக்கள் படையை எதிர்கொள்ள முடிகின்ற ஹிந்திப்படங்களின் பிரமாண்ட கதாநாயகனாக ‘டைகர்’ காட்டப்பட்டு இருப்பதுதான். அவனை சுற்றியுள்ள அனைவரையும் முடிக்கும் வரை இன்னும் நின்றுகொண்டே அவன் ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறான்” என்கிறார் சல்மான்கான்.

“டைகரின் ஹீரோயிசம் என்பது சவாலை முன்னெடுத்து செல்லும்போது பின்வாங்காமல் நிஜமான புலி எப்படி வேட்டையாடுமோ அதுபோல அவனுடைய இரையை வேட்டையாடுவதுதான்.

என்னுடைய கதாபாத்திரமான டைகர் சண்டையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டான். அவன் சுவாசிக்கும் வரை ஒருபோதும் விட்டுவிட மாட்டான்.. மேலும் இந்த நாட்டுக்காக போராடும் கடைசி மனிதனாக அவன் இருப்பான்” என்கிறார் சல்மான்கான்.

டைகர்-3

மேலும் அவர் கூறும்போது…

“யஷ்ராஜ் பிலிம்ஸ் மூலமாக பெரிய திரையில் ‘டைகர்’ எப்படி காட்டப்பட்டு இருக்கிறது என்பதை நான் ரசிக்கிறேன். அதுதான் ரசிகர்களின் ரசனையை இழுத்து பிடித்திருக்கிறது, அவர்கள் டைகரை ஆக்சனில் பார்க்க விரும்புகிறார்கள்..

ஏனென்றால் எப்போதும் பார்த்திராத கரடுமுரடான மற்றும் கூலான ஆக்சன் காட்சிகளை பார்ப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் டைகர்-3 டிரைலரை விரும்புவார்கள் என நம்புகிறேன்.

ஏனென்றால் இன்றுவரை மக்கள் பார்த்திராத பித்துப்பிடிக்க வைக்கும் மூர்க்கத்தனமான ஆக்சன் தருணங்களை இது கொண்டுள்ளது” என்கிறார் .

மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைகர்-3’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புடன் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 100 சதவீத பிளாக்பஸ்டர் ரிசல்ட்டை வழங்கிய யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸை ஆதித்யா சோப்ரா எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான அடுத்த அத்தியாயத்தை இந்தப் படம் வெளிப்படுத்த உள்ளது.

இதுவரை யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் வரிசையில் இப்போது டைகர் 3 இணைந்திருக்கிறது..

டைகர்-3

Salman Khan’s tiger 3 movie trailer release date announcement

சர்வதேச விருதுகளை வென்ற ‘கட்டில்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சர்வதேச விருதுகளை வென்ற ‘கட்டில்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதை நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கட்டில்’.

இந்த படம் நவம்பர் 24 அன்று மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

கட்டில்

வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.

ரிலீசுக்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் விருதுகளை பெற்றுள்ளதால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக இத்திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறுகிறார்.

கட்டில்

Kattil movie release date updates

JUST IN நயன்தாராவை கடத்த தெரியாதா.? பத்திரிகையாளர்கள் கேள்விக்கு சீமான் பதிலடி

JUST IN நயன்தாராவை கடத்த தெரியாதா.? பத்திரிகையாளர்கள் கேள்விக்கு சீமான் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். காவேரி பிரச்சனை குறித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கேட்கப்பட்டது. அவர் பதில் அளிக்கையில்…

“இந்தியா என்ற கூட்டணியில் காவேரி விவகாரத்தில் கட்சிகள் அடித்துக் கொள்கிறது என பிரதமர் பொறுப்பற்ற பதிலை சொல்லி இருக்கிறார். காவிரி நீரை பெற்று தருவது ஒரு பிரதமரின் கடமை ஆனால் அதை அவர் செய்யவில்லை.

வீரப்பன் வாழ்ந்தபோது காடு அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அவர் சந்தன மரத்தை கடத்தி இருக்கலாம். யானைகளை வெட்டி தந்தங்களை எடுத்து விற்று இருக்கலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் அவர் யாருக்கு விற்றார்.? வெளியில் உள்ளவர்களுக்கு தானே விற்றார். அந்த கேள்விக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.

அவர் சந்தன மரங்களை விற்று பங்களா கட்டி கொண்டாரா ? அவர் காட்டு வளத்தை அழித்தாரா? ராஜகுமாரை / நாகப்பாவை கடத்திய அவருக்கு நயன்தாரா கடத்த தெரியாதா? அது தமிழர் மாண்பு. காவிரி நீரை பெற்று தர அவர் முயற்சிகள் மேற்கொண்டார்.

எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் தனித்து நிற்போம். எந்த கட்சியிடனும் கூட்டணி கிடையாது. பிரதமருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.

இங்கே மக்கள் பிரச்சனைக்கு ஒருவன் போராடி முன்னிலை வகித்தால் மக்கள் அவருக்கு ஓட்டளிப்பார்கள். எனவே மக்கள் பிரச்சனைக்காக போராடுவோம்.” என்றார்.

Seeman press meet regarding Cauvery Issue

More Articles
Follows