தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைகளுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ‘இறுகப்பற்று’ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது…
“இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதுவதற்கு ஜஸ்டின் பிரபாகரன் தான் காரணம். ஏற்கனவே அவருடன் இணைந்து பல படங்களில் எழுதியிருந்தாலும் இந்த படத்தில் பாடல் எழுதியது ஸ்பெஷல் என்று சொல்லலாம். இப்படத்தின் காட்சிகளை பார்த்து அதற்கேற்றபடி தான் பாடல்களை எழுதினேன். அதற்கு வசதியாக பாலாஜி மணிகண்டன் தேவையான காட்சிகளை அழகாக படத்தொகுப்பு செய்து தந்தார். எனக்கும் இயக்குனருக்கும் ஒவ்வொரு பாடலை உருவாக்கும்போதும் ஆரோக்கியமான விவாதம் நடந்தது.
இப்படத்தில் விக்ரம் பிரபுவின் காஸ்டியூம் எனக்கு ரொம்பவே பிடித்தது. இந்த படத்தில் அவரை பார்த்துவிட்டு இதுதான் நிஜமான அவரா, இல்லை டாணாக்காரன் படத்தில் பார்த்த அவர் தான் உண்மையா என்கிற ஒரு குழப்பமே எனக்கு ஏற்பட்டு விட்டது.
ஸ்ரீ, சானியா அய்யப்பன் ஜோடியினர் இன்றைய இருக்கிற இளைஞர்களை அழகாக பிரதிபலித்திருக்கின்றனர். லாப நோக்கில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் மத்தியில் நல்ல கதைக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு நன்றி” என்று கூறினார்
ஆடை வடிவமைப்பாளர் ஏகன் பேசும்போது,… “இதுவரை சார்பட்டா பரம்பரை, தங்கலான் என பீரியட் படங்களுக்கு பணியாற்றி வந்த எனக்கு இப்படத்தில் பணியாற்றுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவரவர் தொழிலுக்கு ஏற்ற மாதிரி ஆடைகளை வடிவமைத்தோம். அந்த ஆடைகள் கூட அவர்களை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்த்தனர்” என்று கூறினார்.
படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பேசும்போது…
“தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இந்த சமூகத்திற்கு நல்ல நல்ல படங்களாக கொடுத்து வருகிறார். படம் பார்த்த பல ஜோடிகள் தங்களுடைய உணர்வுகளை என்னிடம் பேசும்போது வெளிப்படுத்தினார்கள். அதிலேயே இந்த படம் எந்த அளவிற்கு அவர்களை பாதித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது” என்றார்.
Lyricist confusion with Vikram prabu character and role