தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து, ஐந்து ஹீரோக்கள் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் பாலா.
இப்படத்தை 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அர்விந்த்சாமி, விஷால், ஆர்யா, ராணா, அதர்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தற்போது பாலாவை போல் கௌதம் மேனனும் நான்கு ஹீரோக்கள் கொண்ட ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.
தனுஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்கவிருக்கிறாராம்.
இப்படத்திற்கு ‘ஒன்றாக’ என பெயரிட்டுள்ளார்.
பிருத்விராஜ், புனித் ராஜ்குமார், சாய் என மூன்று ஹீரோக்கள் கமிட்டாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இவர்களுடன் ஜெயம் ரவியும் விரைவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஹீரோக்களை போல நான்கு ஹீரோயின்களும் இருக்கின்றனர். இதில் நடிக்க அனுஷ்கா, தமன்னா ஆகிய இருவரும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.
மற்ற நாயகிகள் யார்? என்று இதுவரை தெரியவில்லை.
நாலு நண்பர்கள் ஒன்றாக சுற்றுலா செல்வதை கொண்டு இப்படம் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.