நடிகர் ஆர்.கே.சுரேஷ் – மது தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

நடிகர் ஆர்.கே.சுரேஷ் – மது தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.கே.சுரேஷ்.

இயக்குனர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

ஆர்.கே.சுரேஷ் – மது தம்பதியருக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆர்.கே.சுரேஷின் மனைவி மது இரண்டாம் முறை கர்ப்பமாகி வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆர்.கே.சுரேஷ் மற்றும் மது தம்பதிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆர்.கே.சுரேஷ் மற்றும் அவரது மனைவிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆர்.கே.சுரேஷ் - மது

actor rk.suresh wife madhu second child was born

அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை.; திண்டுக்கல்லை திணறடித்த ரஜினி ரசிகர்கள்

அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை.; திண்டுக்கல்லை திணறடித்த ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் திகழ்கிறார்.

இந்த நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்.? என்று விவாதம் கடந்த சில நாட்களாகவே நடக்கிறது.

இந்த நிலையில் திண்டுக்கல் நகரின் முக்கிய இடங்களில் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.

அதில் “உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது, அன்றும் இன்றும் என்றுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான், அண்ணாத்த குரூப்ஸ்-திண்டுக்கல் மாவட்டம் என டிசைன் செய்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இதனை படம் பிடித்து ரஜினி ரசிகர்களும் இணையதளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Super Star Rajini fans poster goes viral

‘வாரிசு’ படத்தில் குஷ்பு எங்கே? மன்னிப்பு கேட்ட எடிட்டர் செய்யப் போகும் காரியம்.!

‘வாரிசு’ படத்தில் குஷ்பு எங்கே? மன்னிப்பு கேட்ட எடிட்டர் செய்யப் போகும் காரியம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இந்த படத்தில் குஷ்பூ நடித்துள்ளார் என்று படக்குழுவும் குஷ்பூவும் தெரிவித்திருந்த நிலையில் படத்தில் ஒரு காட்சியில் கூட குஷ்பூ இல்லை.

‘வாரிசு’ பட இசை வெளியீட்டு விழாவில் கூட குஷ்பூக்கு நன்றி தெரிவித்திருந்தார் விஜய் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதனால் எனவே குஷ்பு சீன்ஸ் எங்கே? என்று ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் எடிட்டர் கே எல் பிரவீன் தன்னுடைய சமீபத்தில் பேட்டியில்..

“வாரிசு பட நீளம் கருதி குஷ்புவின் காட்சிகளை நீக்கி விட்டதாகவும் இதற்காக தான் குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் குஷ்பு நடித்த அனைத்து காட்சிகளையும் யூடியூபில் (Deleted Scene) வெளியிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாரிசு

Deleted Scenes of Khusboo will be released soon from Varisu

முதன்முறையாக அஜித்துடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.; AK படத்தில் 3 ஹீரோயின்ஸ்?

முதன்முறையாக அஜித்துடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.; AK படத்தில் 3 ஹீரோயின்ஸ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தை தொடர்ந்து ஏகே 62 (AK 62) படத்தில் நடிக்கிறார் அஜித்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க, அஜித் கேட்டதன் பேரில் சந்தானம் முக்கிய ரோலில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.

மேலும் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.

இதன் பின்னர் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் இணைய உள்ளதாக வந்த செய்திகளை நாம் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

First time Keerthy Suresh pair with Ajith in AK62

துணிவு – வாரிசு ரிலீஸ்.; சிறப்புக் காட்சி திரையிட்ட தியேட்டர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

துணிவு – வாரிசு ரிலீஸ்.; சிறப்புக் காட்சி திரையிட்ட தியேட்டர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரு படங்கள் ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட தியேட்டர்களில் நள்ளிரவு 1 மணி காட்சி மற்றும் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் அனுமதி வழங்கப்படாத நாட்களில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாக மதுரை மாநகரில் உள்ள சில (30) தியேட்டர்களுக்கு மாவட்ட கலெக்டர் அணில் சேகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இரண்டு வாரங்களில் இதற்கு விளக்கம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.் இல்லையெனில் திரையரங்கு ஒழுங்குமுறை விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கூடுதல் தகவல்..

படம் ரிலீஸ் ஆன 11 & 12ஆம் தேதி முதல் பொங்கல் வரை சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.

இதனை மீறி அனுமதி வழங்கப்படாத நாட்களில் திரையிட்ட தியேட்டர்களில் மீது நடவடிக்கை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Collector warns theatres which screened special shows of Varisu Thunivu

உங்க காசுல நாங்க சொகுசா வாழ்றோம்.; ரசிகர்களுக்கு கொம்பு சீவும் மீடியா.. – ஆர்.ஜே.பாலாஜி

உங்க காசுல நாங்க சொகுசா வாழ்றோம்.; ரசிகர்களுக்கு கொம்பு சீவும் மீடியா.. – ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ள படம் ‘ரன் பேபி ரன்’.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்துள்ளனர்.

ஜெயன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஆர் ஜி பாலாஜி

இதில் கலந்துக் கொண்ட நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது..

“ஒரு திரைப்படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

எதிர்காலத்தில் இயந்திரங்கள் வருகை அதிகரிக்கும்.. அப்போது நிறைய பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும்.

எனவே இன்றைய இளைஞர்கள் இப்போதே அதிக நேரத்தைக் கொடுத்து அதிகளவில் உழைக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டார். அதனை அறிந்து வருத்தமாக இருந்தது.

தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள்.. கருத்து சொல்லுங்கள்.. நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் சொல்லுங்கள்.. கற்றுக் கொள்கிறோம்.

நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள்.. காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம்.

பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

என் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளரின் லாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன்”

இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார்.

‘ரன் பேபி ரன்’ திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ரன் பேபி ரன்

RJ Balaji open talk at Run baby Run Trailer launch

More Articles
Follows