தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும் எதிர்பார்ப்பில் உருவான விஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று (மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ரூ. 4 கோடி நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது.
இந்த நிலையில் தன் சம்பளத்தில் இருந்து 1 கோடியைக் குறைத்துக் கொண்டு வெளியிட சொன்னாராம்.
மேலும் ‘அயோக்யா’ பட மற்ற மொழி டப்பிங்க்கு முதலில் மறுத்த விஷால் இப்போது டப்பிங் செய்யலாம் என்றும் சொல்லிவிட்டாராம்.
அத்துடன் டப்பிங் படம் மூலம் வரும் 2 கோடி ரூபாயையும் தயாரிப்பாளரே எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி இருக்கிறாராம்.
ஆக படம் வெளி வந்தே ஆக வேண்டும் என விரும்புகிறாராம் விஷால்.
எனவே இன்று மாலை படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
அயோக்யா அப்டேட்ஸ்….
1. 20 கோடி செலவில் உருவான அயோக்யா படம் 40 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்திருக்கிறது. தமிழ்நாடு உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் 12 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.
2. கேரளா, கர்நாடகா, வெளிநாடு உரிமைகள் மூலமாகவும் 5 கோடி கிடைத்துள்ளதாம்.
3. ‘அயோக்யா’ தயாரிப்பாளரின் ‘ஸ்பைடர்’ பட நஷ்டமும் இப்போது பிரச்சினை ஆகியுள்ளது.