‘கோப்ரா’ மீது ரசிகர்கள் கோபம்.; அதிரடி முடிவெடுத்த விக்ரம் & படக்குழுவினர்

‘கோப்ரா’ மீது ரசிகர்கள் கோபம்.; அதிரடி முடிவெடுத்த விக்ரம் & படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி, மிருளாளிணி, ரோபோ சங்கர், மீனாட்சி, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்த கோப்ரா திரைப்படம் நேற்று ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆனது.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்திருந்தார்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தது.

இந்த படத்தில் விக்ரமின் நடிப்பை பலர் பாராட்டி வந்தாலும் படத்தின் நீளமே எல்லோர் மனதிலும் பெரிய குறையாக காணப்பட்டது.

இதனையடுத்து ரசிகர்கள் வேண்டுகோளின் படி இன்று முதல் படத்தின் இருபது நிமிட காட்சிகளை படத்திலிருந்து நீக்கி இருக்கிறோம் என பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் இன்று முதல் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

கோப்ரா

Fans are angry with ‘Cobra’.; Vikram & the crew

‘ஆத்தா உன் கோவிலிலே’ பட நாயகன் ரவி ராகுல் இயக்குனராகிறார்.; சித்தார்த் நடிக்கிறார்

‘ஆத்தா உன் கோவிலிலே’ பட நாயகன் ரவி ராகுல் இயக்குனராகிறார்.; சித்தார்த் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் வெளியான கஸ்தாரி ராஜா இயக்கிய ‘ஆத்தா உன் கோவிலிலே’ படத்தில் நாயகனாக நடித்தவர் ரவி ராகுல்.

அதன் பின்னர்தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் ரவி ராகுல்.

இவர் தற்போது சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏழை பையனை பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, வெளிமாநிலம் இழுத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்கிறாள்.

தாலி கட்டிய கையோடு வேலை தேடி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். அவனை தேடுவது தான் மீதி கதை.

கதை, திரைக்கதை எழுதி, ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் எடிட்டிங் செய்ய, இளைய கம்பன், கு.கார்த்திக் பாடல்கள் எழுத, சந்திரிகா நடனம் அமைத்துள்ளார். ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” திரைப்படம் குற்றாலத்தில் தொடங்கி, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது” என்கிறார் இயக்குனர் ரவி ராகுல்.

அடுத்த ‘ஹிட் லிஸ்ட்’ ரெடி செய்த கே எஸ் ரவிக்குமார் – சரத்குமார் கூட்டணி

அடுத்த ‘ஹிட் லிஸ்ட்’ ரெடி செய்த கே எஸ் ரவிக்குமார் – சரத்குமார் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் ஹீரோ & டைரக்டர் கூட்டணி சரியாக அமைந்துவிட்டால் அந்த கூட்டணி பல படங்களில் தொடரும்.

ஒரு சில நடிகர்களுக்கு அதுபோல இயக்குனர்கள் அமைந்து விடுவார்கள்.

1980களில்…

ரஜினியை பொறுத்தவரை எஸ்.பி முத்துராமன் & சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரை சொல்லலாம்.

கமல்ஹாசனை பொருத்தவரை கே பாலச்சந்தரை சொல்லலாம்.

விஜயகாந்தை பொருத்தவரை எஸ்.ஏ. சந்திரசேகரை சொல்லலாம்

பிரபுவை பொறுத்தவரை பி வாசுவை சொல்லலாம். சத்யராஜை பொறுத்தவரை மணிவண்ணனை சொல்லலாம்.

கார்த்தியை பொறுத்தவரை ஆர்வி. உதயகுமாரை சொல்லலாம்.

அதுபோல சரத்குமார் பொருத்தவரை கேஎஸ் ரவிக்குமாரை சொல்லலாம்.

இவர்கள் இணைந்த சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, பாறை, சமுத்திரம், பாட்டாளி என பல படங்களை சொல்லலாம்.

அந்த வரிசையில் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

ஆனால் இந்த முறை கேஸ் ரவிக்குமார் ஒரு தயாரிப்பாளராக சரத்குமார் உடன் இணைந்துள்ளார்.

ஆர் கே செல்லுலாய்டு என்ற தன் கம்பெனி சார்பாக கேஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சரத்குமார் உடன் விஜய் கணிஷ்கா என்பவர் நடிக்கிறார்.

இந்த படத்தை சூரியக்கதிர் காக்கள்ளர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்குகின்றனர்.

இந்த படத்தில் ஷூட்டிங் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்திற்கு ‘ஹிட் லிஸ்ட்’ HIT LIST என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

.@dhanushkaraja launches the #HitListFirstLook ??

Shoot Begins From Tomorrow!

#HitList

@ksravikumardir
@realsarathkumar
@kanvikraman
Directors duo
#Sooryakathirkaakkallar
#KKarthikeyan
@dineshashok_13
@RIAZtheboss https://t.co/aI7WGPrWCw

9 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – அஜித்.; தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

9 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – அஜித்.; தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பண்டிகை தினம் என்றால் பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் சில பண்டிகை தினங்களில் இந்த மோதல்கள் இடம்பெறாது.

விஜய் மற்றும் அஜித் நடித்த பல படங்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் ஒரே நாளில் மோதலை சந்தி்த்துள்ளன.

இதில் விஜய்யின் ஒரு சில படங்கள் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளன. அதுபோல அஜித்தின் சில படங்கள் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளன.

9 ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த ஜில்லா & அஜித் நடித்த வீரம் ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

இந்த நிலையில் (2014ல்) ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது வாரிசு மற்றும் ஏ கே 61 படங்கள் 2023 பொங்கல் தினத்தில் ஒரே நாளில் மோத உள்ளன.

வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படம் வருகின்ற 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மஞ்சு வாரியார் நடிக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்

இதன் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

பண்டிகை தினங்களில் பெரிய நடிகர்கள் படங்கள் மோதினால் தியேட்டர்காரர்கள் வசூலை அள்ளலாம். எனவே அவர்களும் உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஏகே 61 படத்தின் டைட்டிலும் ரிலீஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

 

அருண் விஜய் – அறிவழகன் இணையும் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

அருண் விஜய் – அறிவழகன் இணையும் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு படைப்புகளும் ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் ஒருங்கே பாராட்டை குவித்துள்ளது.

தொடர் வெற்றிகளால் வர்த்தக வட்டாரங்களிடையே அருண் விஜய் படங்களுக்கு பெரிய மதிப்பு ஏற்பட்டுள்ளது.

All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்துள்ள “பார்டர்” படம் அறிவிக்கப்படதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பாக வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் அக்டோபர் 5, 2022 அன்று உலகம் முழுவதும் இப்படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 Production Dr. பிரபு திலக் கூறுகையில்…

தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான அருண் விஜய் சாரின்” பார்டர்” படத்தை 11:11 Productions சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் 11:11 Productions ல் எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம், சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம் அனைத்து காரணிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது.

தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இயக்குநர் அறிவழகன் எழுதி இயக்கியுள்ள “பார்டர்” படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.

T.விஜயராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்தை 11:11 Production Dr. பிரபு திலக் வெளியிடுகிறார்.

மற்றும் தொழில் நுட்ப குழுவில் சாம் CS (இசை), B ராஜசேகர் (ஒளிப்பதிவு), சாபு ஜோசப் (எடிட்டிங்), ஷக்தி வெங்கட்ராஜ் M (கலை இயக்கம்), ஹீரா அறிவழகன் (ஆடை வடிவமைப்பாளர்), விவின் S.R. (நிர்வாகத் தயாரிப்பாளர்), உமேஷ் பிரணவ் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), & Sync Cinema (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

“பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது.

இளையராஜா எழுதி மெட்டமைத்த ‘இதயமே.. இதயமே..’ பாடலை பாடிய யுவன்

இளையராஜா எழுதி மெட்டமைத்த ‘இதயமே.. இதயமே..’ பாடலை பாடிய யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் “நினைவெல்லாம் நீயடா”.

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில் பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில்‌ நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது.

இவர்களுடன் முக்கிய இடத்தில் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மற்றும் மனோபாலா முத்துராமன் மதுமிதா ரஞ்சன் குமார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தமிழ்செல்வி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் முத்திரை பதித்திருக்கிறார்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை கையாள ஆசிஸ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரதீப் தினேஷ் மாஸ்டர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

கலையை முனிகிருஷ்ணா கவனிக்க பாடல்களை பழனி பாரதி, சினேகன் எழுதியிருக்கிறார்கள்.

“இதயமே… இதயமே” என்று தொடங்கும் ஒரு பாடலை இளையராஜா எழுதி கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

மாஸ்டர்கள் தினேஷ், தினா ஆகியோர் நடன காட்சிகளை ரசனையாக வடிவமைத்திருக்கின்றனர்‌‌. தயாரிப்பு நிர்வாகம்: இளங்கோ.

பள்ளிப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை சென்னை கொடைக்கானல் திருப்போரூர் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் 41 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் ‌இயக்குநர் ஆதிராஜன்.

இத‌ற்காக தயாரிப்பாளர் ராயல் பாபு இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இறுதி நாள் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

கொட்டும் மழையில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி மற்றும் மாணவியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

மாலையில் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

தற்போது படத்தின் டப்பிங் நடந்து வருகிறது. படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

More Articles
Follows