மியா ஜார்ஜை பார்த்த போது பயம் வந்துட்டு.. ‘கோப்ரா’ ரிலீசுக்கு ரீசன் சொன்ன விக்ரம்

மியா ஜார்ஜை பார்த்த போது பயம் வந்துட்டு.. ‘கோப்ரா’ ரிலீசுக்கு ரீசன் சொன்ன விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. கணித புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், ‘கோப்ரா’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம் உண்டாகி இருக்கிறது.

இதனை மேலும் தூண்டும் வகையில் சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினர் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களைச் சந்திப்பதற்காக ஹைதராபாத் நேற்று வந்தடைந்தனர்.

சீயான் விக்ரம் தலைமையிலான ‘கோப்ரா’ குழுவினருக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோப்ரா

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, தயாரிப்பாளர் என்.வி. திருப்பதி பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் என் வி திருப்பதி பிரசாத் பேசுகையில்…

‘கோப்ரா திரைப்படம் கொரோனா தொற்று காலகட்டத்தில் ரஷ்ய நாட்டில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிரில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகும் முழுமையான பாதுகாப்புடன் ரஷ்யாவில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இது போன்ற கதாபாத்திரங்களில் தென்னிந்தியாவிலேயே விக்ரம் ஒருவரால் தான் ஏற்று நடிக்க இயலும்.

இந்தியாவிலேயே கமல்ஹாசனுக்கு அடுத்து உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரம் தன்னிகரற்றவராக திகழ்கிறார். கோப்ரா திரைப்படம் வித்தியாசமான கதை. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியுடன் உருவாகி இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். புஷ்பா இயக்குநர் சுகுமார் நிகழ்த்திய மாயாஜாலத்தை போல், இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் கோப்ரா படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார்.

கொல்கத்தா, அலிப்பி, சென்னை, ரஷ்யா என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து கோப்ரா படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

விக்ரமின் கலை உலக பயணத்தில் இந்த கோப்ரா மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும். கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கு ரசிகர்கள் பேராதரவு அளிக்க வேண்டும்.” என்றார்.

கோப்ரா

சீயான் விக்ரம் பேசுகையில்…

‘கோப்ரா’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவால் இங்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டு இருக்கிறார். எனக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்த கதையை விவரிக்கும் போது உடனே நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர்.. இதனை கடந்து தான் நடித்தேன்.

எனக்கு இவை அனைத்தும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழி.. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.

கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் ஃபிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.

மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது.

மிருணாளினி ரவி என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.

கோப்ரா

இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட்… என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.

மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். இதன் பின்னணியில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம்.

நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம். தெலுங்கு ரசிகர்களுக்கு கோப்ரா படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். கோப்ரா திரைப்படம் உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படைப்பாக உருவாகி இருக்கிறது.

கோப்ரா

நம் தேசத்தில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் கோப்ரா படத்திலும் இருக்கிறது.

என் நடிப்பில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டது.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படபிடிப்பின் போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு குழந்தை பிறந்தது.

தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்ற போது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது.

‘கோப்ரா’ திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. ஆனால் திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

‘கோப்ரா’ போன்ற பிரம்மாண்டமான படைப்பை தெலுங்கு ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு திருப்பதி பிரசாத் தான் பொருத்தமானவர் என ஆவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் மனமுவந்து எங்களது வேண்டுகோளை ஏற்று கோப்ரா படத்தை தெலுங்கில் வழங்குகிறார்.” என்றார்.

கோப்ரா

ஊடக சந்திப்பில் நடைபெற்ற சுவாரசியமான விசயங்கள்…

• இந்த ‘கோப்ரா’ திரைப்படத்தில் கணித ஆசிரியர் வேடத்தில் நடித்தாலும், நான் மாணவனாக இருந்தபோது கணித பாடத்தில் பலவீனமான மாணவனாகவே இருந்தேன். ஆசிரியர் பலமுறை தலையில் குட்டி, ‘உனக்கு கணக்கு வராதுடா…’ என தெரிவித்தார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் கணிதாசிரியர் வெட்க சுபாவம் உள்ளவராக இருந்தாலும், அசாத்தியமான திறமைசாலி. இவருக்கு ஹாலுஸிநேஸன் என்ற பாதிப்பும் இருக்கும். இயக்குனர் அஜய் ஞானமுத்து பயங்கர புத்திசாலி. படத்தின் இரண்டாம் பகுதியில் தான் என்னுடைய கதாபாத்திரத்தின் வீரியத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். உச்சகட்ட கட்சி வரை கதை சுவாரசியமாக பயணிக்கும்.

• கோப்ரா என்றால் எப்போது தாக்கும் என்று தெரியாது. கோப்ரா ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தோலை உரித்து கொண்டு புது வடிவத்தை பெறும். அதேபோல் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

• படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கெட்டப்பிற்கு ஏற்ற வகையில் உடல் மொழியையும், பின்னணி பேசும் பாணியையும் மாற்றியிருக்கிறேன். ஆறு குரல்களில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறேன்.

கோப்ரா

Vikram shared his working experience with Mia George in Cobra

க்ரீன் சிக்னல் கிடைச்சுடுச்சி.; ‘பேச்சுலர்’ இசையமைப்பாளர் சித்து இனிமே ‘பேச்சுலர்’ இல்லை

க்ரீன் சிக்னல் கிடைச்சுடுச்சி.; ‘பேச்சுலர்’ இசையமைப்பாளர் சித்து இனிமே ‘பேச்சுலர்’ இல்லை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சித்து குமார்.

சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த சித்து குமார் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக உருவெடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும், “அடி போலி…” என்ற தனியிசை வீடியோ பாடலை இசையமைத்து இயக்கிய சித்து குமார் அப்பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.

தமிழ் சினிமாவின் பிஸியான இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ’கண்ணை நம்பாதே’, சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறுகோடி வானவில்’, விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 13, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம், அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் சித்து குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி ராஜி என்பவரை சித்து குமார் மணக்கிறார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனிதவளம் மேம்பாட்டு (HR) அதிகாரியாக பணியாற்றுகிறார்.

பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட சித்து குமார் – ராஜி திருமணம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

சித்து குமார்

Music Director Siddhu Kumar to get married on september 9

இராமநாதபுரத்தில் இறால் வளர்ப்பு தொழிலில் நடிகர் நிதின் சத்யா

இராமநாதபுரத்தில் இறால் வளர்ப்பு தொழிலில் நடிகர் நிதின் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார்.

ராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை.

பேச்சலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார் உடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் ‘ஐங்கரன்’ கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் M செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

தயாரிப்பு – துவாரகா புரொடக்‌ஷன்ஸ் (பிளேஸ் கண்ணன்)
இயக்கம் – சுரேஷ் சாத்தையா
ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து
இசை – தரண் குமார்
படத்தொகுப்பு – சாபு ஜோசப்
கலை – சுரேஷ் களரி
தயாரிப்பு மேற்பார்வை – அன்பு மோகன் ரத்தினவேலு, K.சக்திவேல்
நடனம் – அசார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

கொடுவா

Actor Nithin Sathya starts  farming business in Ramanathapuram

‘விருமன்’-ல் வராத காட்சியை பகிர்ந்து சூரியை வாழ்த்திய ரோபோ சங்கர் மகள்

‘விருமன்’-ல் வராத காட்சியை பகிர்ந்து சூரியை வாழ்த்திய ரோபோ சங்கர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அண்மையில் வெளியான விருமன் படத்தில் நாயகி அதிதியின் தோழியாக நடித்திருந்தார்

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 27ஆம் தேதி நடிகர் சூரியன் பிறந்தநாளை முன்னிட்டு ‘விருமன்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில்…

சூரியை தன் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டிருப்பது போன்ற படம் உள்ளது.

பிறந்தநாள் வாழ்த்துகள் சூரி மாமா. உங்களின் கைகளில் வளர்ந்து, இன்று உங்களுடனேயே நடித்திருப்பது பாக்கியம்.. குத்துக்கல்லு.. கொலவிக்கல்லு…’ என குறிப்பிட்டுள்ளார்.

குத்துக்கல்லு.. சூரி கேரக்டர் பெயர்.. கொலவிக்கல்லு.. இந்திரஜா பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி மீண்டும் வருகிறார்.; ‘த்ரிஷ்யம்’ பட ரசிகர்கள் குஷி

கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி மீண்டும் வருகிறார்.; ‘த்ரிஷ்யம்’ பட ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள்… அது போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்.

ஆனால் அரிதாக ஒரு சில படங்களுக்கு மட்டுமே ரசிகர் இருப்பார்கள். எனவேதான் அந்தப் படத்தின் தொடர்ச்சி பாகங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கும்.

அந்த வரிசையில் மலையாளத்தில் சிபிஐ டைரி குறிப்பு மற்றும் த்ரிஷ்யம் ஆகிய படங்களை சேர்க்கலாம்.

கடந்த 2015ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இதில் ஜார்ஜ் குட்டி என்ற கேரக்டர் பெயரில் மோகன்லால் நடித்திருந்தார்.

இப்படம் சூப்பர் ஹிட் ஆகவே தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றிகளைப் பெற்றது.

எனவே ‘த்ரிஷ்யம் 2’ உருவாகி கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படமும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து த்ரிஷ்யம் 3 பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ’த்ரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாக அப்பட தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி இஸ் பேக் என இப்பட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

‘கேப்டன்’ விஜயகாந்த் பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த நல்ல விஷயம்

‘கேப்டன்’ விஜயகாந்த் பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த நல்ல விஷயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.

சினிமாவில் பல சாதனைகளை படைத்த இவர் தற்போது அரசியலில் இருக்கிறார்.

ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் முன்பு போல ஆக்டிவாக செயல்பட முடியவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடிகர் விஜயகாந்த் தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பொதுவாக விஷால் தனது நண்பர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த மதிக்கத்தக்க பெரியோர்களின் பிறந்தநாள் என்றால் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்த்து அவர்களின் பெயரில் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்து அவர்களின் வாழ்த்தை நண்பர்களுக்கும் மதிக்கத்தக்க பெரியவர்களுக்கும் பரிசாக வழங்குவது வழக்கம்.

அதேபோன்று விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளிலும் பல ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்தது குறிப்பிடத்தக்கது.

இச்செயல் அனைவரையும் வியப்படைய செய்தது. மேலும் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களும் விஷால் செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More Articles
Follows