தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனக்கான கதையை கவனமுடன் தேர்ந்தெடுத்து, அதில் தன் நடிப்பாற்றலை கொடுத்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருபவர் சூர்யா.
ஹரி இயக்கும் சிங்கம்3 படத்தை முடித்துவிட்டு ‘கொம்பன்’ முத்தையா அல்லது ‘கபாலி’ ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.
ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று அறிவித்து தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.
இந்நிலையில் இதனையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று எதிர்பாராத வகையில் அடுத்த இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் சூர்யா.