தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை முன்பு பார்வையற்ற இளைஞரான திருமூர்த்தி அருமையாக பாடியிருந்தார்.
இது இணையத்தில் வைரலாக அந்த பாடலுக்கு இசையமைத்த இமானும் பார்த்துள்ளார்.
எனவே தனது இசையில் பாட திருமூர்த்தியை தேர்ந்தெடுத்து ஜீவா நடித்து வரும் ‘சீறு’ படத்தில் ஒரு பாடலை பாட வைத்துவிட்டார்.
‘செவ்வந்தியே…’ என தொடங்கும் அந்த பாடல் வெளியாக அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்த பாடல் குறித்து இமான் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உண்மையிலேயே இந்த பாடல் பிடிச்சிருந்தால், இவரின் குரல் பிடிச்சிருந்தால் ஷேர் பண்ணுங்க. அனுதாபத்தால் ஷேர் செய்ய வேண்டாம்.
இந்தப் பாடல் வெற்றி மூலம்தான் அவருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வரும். அப்போதுதான் மற்ற இசையமைப்பாளர்களும் இவரைப் பாட வைப்பார்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Dont spread Seeru movie Sevandhiyae song by sympathy says Imman
https://twitter.com/immancomposer/status/1201486294783647744