தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனு கீர்த்தி, புகழ், சிங்கம் புலி, விமல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டிஎஸ்பி’.
இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.
இந்த படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இமான் பேசும்போது…
“15 வருடங்களுக்கு முன்பு.. ‘கூடை மேல கூட வச்சு…” என்ற பாடலை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது… நான் யுகபாரதி அந்தப் படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் மூவரும் நிறைய நடிகர்களை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம்.
அப்போதுதான் விஜய்சேதுபதி இதற்கு சரியாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம். அன்று முதல் அவரை நான் பார்த்து வருகிறேன்..
அவரைப் பொறுத்தவரை நம்பர் ஒன் நம்பர் டூ நம்பர் த்ரீ என்றெல்லாம் கிடையாது.. அதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று அவர் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.
நீங்கள் ஒரு ரேர் பீஸ் (Rare piece) நான் விஜய்சேதுபதியுடன் நிறைய படங்களுக்கு பணிபுரிந்துள்ளேன்.
‘றெக்க’ படத்தில் ஒரு பாடலுக்கு அவர் இருக்க மாட்டார். கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடல் பெண் குரல் மட்டும் தான் இருக்கும்.
ஒரு முன்னணி நாயகர் அது போல பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்களை படத்தில் வைக்க மாட்டார்கள். ஆனால் அதற்கான இடத்தையும் விட்டுக் கொடுப்பார் விஜய்சேதுபதி.
அவருக்கு 100 வயதானாலும் சினிமாவில் தான் இருப்பார்.. காரணம் அவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் செய்து கொண்டே இருப்பார்.
ஒரு முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் வில்லன் கேரக்டரை செய்ய மாட்டார். ஆனால் அதையும் செய்து கொண்டு இருக்கிறார்..
நல்லாயிருமா? நல்லாயிருமா? என்ற பாடல் அவரை நினைத்து தான் எழுதினோம். அவர் நன்றாக இருக்க வேண்டும்” என வாழ்த்தி பேசினார் இமான்.
Imman speech at DSP movie Audio launch