தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கொடி வசூலில் உயரத்தில் பறந்து வருகிறது.
இதனிடையில் சில நாட்களுக்கு முன்பு, விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் தனுஷ்.
#mass announcement soon. Guess what.
அதை என்னவென்று கண்டுபிடியுங்கள் எனவும் தெரிவித்து இருந்தார்.
இதனால் பலரும் பலவாறு கூறி வந்தனர்.
சிலர் வடசென்னை பற்றிய தகவலாக இருக்கும் என்றனர்.
சிலர் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற தகவலாக இருக்கும் என்றனர்.
இன்னும் சிலரோ ரஞ்சித் இயக்கும் ரஜினி பட நாயகியாக இருக்குமோ என்றும் தெரிவித்தனர்.
மேலும் சிலர் விஜய் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்க, அப்படத்தை தனுஷ் தயாரிக்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதனைக் கண்ட தனுஷ் என்ன நினைத்தாரோ தற்போது மற்றொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில்…
பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நவம்பர் 9ஆம் தேதி புதன்கிழமை அறிவிப்பை வெளியிடுவேன். பொறுமைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இந்த நாட்களில் என்ன என்ன செய்திகள் புதிதாக வரப்போகிறதோ? எனத் தெரியவில்லை.