தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிப்பு, தயாரிப்பு என பல துறைகளை கடந்து தற்போது டைரக்சன் துறையிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார் தனுஷ்.
இவர் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி படம் பட்டி முதல் சிட்டி வரை பட்டைய கிளப்பியது.
எனவே அடுத்த படத்தை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் மௌனமே அதற்கு பதிலாக கிடைத்தது.
இந்நிலையில் தன் அடுத்த படத்தை மெர்சல் பட தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்க்கு இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அதில் தான் நடிக்கவுள்ளதையும், மற்ற விவரங்களை 2018ல் வெளியிடுவேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.