‘கைதி – மாஸ்டர்’ பட நடிகர் KPY தீனா திருமணம்.; Love or Arranged.?

‘கைதி – மாஸ்டர்’ பட நடிகர் KPY தீனா திருமணம்.; Love or Arranged.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனா சினிமா அல்லது தொலைக்காட்சியில் எப்படியாவது பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை கிளம்பி வந்தவர்.

இவர் ஆரம்பத்தில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது இவருடைய டைமிங் காமெடி பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்கள்.

நம்பிக்கையுடன் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டேஜ் ஏற, அந்த நிகழ்ச்சியே தீனாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

இதன்பின்னர் சினிமா பக்கம் வந்த தீனா, தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் நல்ல கேரக்டரில் நடித்திருந்தார்.

நடிகர் தீனா கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியிருந்தார்.

இந்நிலையில், தீனாவுக்கு இனிதே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கிராஃபிக் டிசைனராக பணியாற்றி வரும் பரமேஸ்வரி என்ற பெண் தான் தீனாவுக்கு மனைவியாக அமைந்துள்ளார்.

இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.

திருவாரூரில் நடக்கும் கல்யாணத்தில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் நடிகர் தீனா சினிமா, சின்னத்திரை பிரபலங்களுக்காக சென்னையில் அடுத்த வாரம் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீனா

master fame kpy dheena gets married

10 வருடங்களில் 150+ குறும்படங்களுக்கு இசை.; சைலன்ட்டாக வளரும் ‘சைத்ரா’ இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன்

10 வருடங்களில் 150+ குறும்படங்களுக்கு இசை.; சைலன்ட்டாக வளரும் ‘சைத்ரா’ இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சைத்ரா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன்.

இவரைப் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள…

இசையமைப்பாளராவதற்காக கடந்து வந்த பாதை..?

கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே முறைப்படி கர்நாடக சங்கீதம் மற்றும் மேற்கத்திய சங்கீதத்தை கற்றுக் கொண்டேன். பெற்றோர்களின் விருப்பத்திற்காக தனியார் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினேன்.

இருப்பினும் இசை மீது இருந்த பேரார்வத்தின் காரணமாக இசையமைப்பாளராக வேண்டும் என திட்டமிட்டேன்.

2012 ஆம் ஆண்டில் முதன்முதலாக குறும்படத்திற்கு இசையமைக்க தொடங்கினேன். அதன் பிறகு தற்போது வரை 150 க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.

இதில் 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக விருதுகளையும் வென்றிருக்கிறேன். ‌

இதைத்தொடர்ந்து ‘முஸ்தபா -தி மேஜிசியன்’ எனும் அனிமேஷன் திரைப்படத்திற்கு இசையமைத்தேன். இந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுக்கான சிறந்த அனிமேஷன் படப் பிரிவில் போட்டியிட்டது.

இதனைத் தொடர்ந்து ‘மேகி’ எனும் படத்திற்கு பின்னணி இசையமைத்தேன். தற்போது இயக்குநர் எம். ஜெனித் குமார் இயக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘சைத்ரா’ படத்திற்கு இசையமைத்திருக்கிறேன்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்தப் திரைப்படத்தில் இடம் பெற்ற சிங்கிள் ட்ராக்கும் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

எதிர்கால இலக்கு?

இசைத்துறையில் முத்திரை பதிக்க வேண்டும். இசை என்பது பெருங்கடல். இங்கு சாதித்தவர்கள் ஏராளம். திரையிசை, சுயாதீன பாடல்கள் என அனைத்து இசை வடிவங்களிலும் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி சிறந்த இசையமைப்பாளராக முன்னேற வேண்டும்.

Music for 150+ short films in 10 years.; Prabhakaran Meiyappan’s growth

ரஜினி – தனுஷை தொடர்ந்து சத்யராஜை இயக்கும் சௌந்தர்யா

ரஜினி – தனுஷை தொடர்ந்து சத்யராஜை இயக்கும் சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா, இவர் ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார்.

இதை தொடர்ந்து, தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இப்படத்தில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார்.

இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சவுந்தர்யா இயக்கும் வெப் தொடர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

soundarya rajinikanth to direct web series starring sathyaraj

ஒரு ஊர்ல ஒரு ராஜா சூர்யா.; சினிமாவில் என்ட்ரீயாகும் ‘சின்ன சிவகார்த்திகேயன்’

ஒரு ஊர்ல ஒரு ராஜா சூர்யா.; சினிமாவில் என்ட்ரீயாகும் ‘சின்ன சிவகார்த்திகேயன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ எனும் டிவி சீரியல் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் ராஜா சூர்யா.

வசீகரிக்கும் புன்னகை.. தனித்துவமான நடிப்பு.. என திறமையை வெளிப்படுத்தி இன்று முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் இவர், ‘மேதகு 2’ எனும் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகராகவும் தன் பயணத்தை விரிவுப்படுத்தியவர்.

சின்னத்திரை.. வண்ணத்திரை.. டிஜிட்டல் திரை.. என எந்த திரை வடிவமாக இருந்தாலும் தன் கடின உழைப்பை வழங்கி, ரசிகர்களின் பேரன்பை சம்பாதித்து, அவர்களிடத்தில் ‘சின்ன சிவகார்த்திகேயன்’ என்ற பட்டத்தை வென்றிருக்கிறார்.

‘ஈடாட்டம்’ எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவரைச் சந்தித்து உரையாடினோம்.

தினமும் வளர்ச்சி அடைந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் மாற்றம் பெற்று வரும் திரைப்படத்தில், முதன்மையான வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பொறுப்புணர்வு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து…?

முதன்மையான வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பங்களிப்பும், பொறுப்பும் கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகி இருக்கிறது. தற்போது நான் ஒரு வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறேன் என்றால், அதுவும் குடும்பத்துடன் ஈடுபட்டிருக்கிறேன் என்றால்.. அதனால் ஏற்படும் லாப நஷ்டம் என் குடும்பத்தை மட்டுமே சார்ந்திருக்கும்.

ஆனால் வளர்ச்சி அடைந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் சினிமா என்பது நூறு குடும்பங்களை கூட்டு உழைப்பு என்பதை கடந்து, ஆயிரம் குடும்பங்களின் கூட்டு முயற்சியாக விரிவடைந்து இருக்கிறது. இதனால் முன்னணி வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பொறுப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.

சினிமாவில் அறிமுகமாவதும், அதில் தொடர்ந்து பணியாற்றுவதும் பெரிய சவால்தான். திரைத்துறையில் இருக்கும் அரசியலை எதிர்கொண்டு இங்கு முன்னேறுவது அதைவிட பெரிய சவால் தான்.

தற்போதைய சூழலில் திரைத்துறையில் பணியாற்றும் நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தங்களது வாரிசுகளை எளிதாக அறிமுகப்படுத்த இயலும்.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திர நடிகர்கள் எந்த திரைத்துறை பின்புலமும் இல்லாமல், கடினமாக உழைத்து, இன்று திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என கனவு காணும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரண நாயகர்களாக வலம் வருகிறார்கள்.

சினிமாவில் உங்களை அதிகம் கவர்ந்தது எது நடிப்பா? நாட்டியமா? சண்டைக் காட்சிகளா?

அனைத்தும் பிடிக்கும். இருப்பினும் நடனத்தின் மீது தனி ஈர்ப்பு உண்டு. நான் சிறிய வயதில் மேடை நாடகத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறேன். என் ஆரோக்கியமும் இதில் இருப்பதால் நடனத்தை மிகவும் நேசிக்கிறேன்.

உங்களது வெற்றியின் சூத்திரம் என்ன?

பொறுமையும், விடாமுயற்சியும் தான் வெற்றிக்கான ரகசிய சூத்திரம். எந்த குழந்தையும் பிறந்தவுடன் நடப்பதில்லை. அதற்கான காலம் வரும்போது தான் நடக்கத் தொடங்குகிறது.

நம்முடைய எண்ணங்கள்தான் வாழ்க்கை என்பதால், நல்ல எண்ணங்கள் தான் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அடித்தளம்.

வளர்ச்சி என்பது இயல்பாகவும், மெதுவாகவும் தான் இருக்க வேண்டும். அதுதான் நிலையானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை மரணத்தை தழுவுவதற்கு முன்பு கூட ஒரு முறை வெற்றி பெற்றால் போதும். அந்த வெற்றி நம் சரித்திரத்தை அடுத்து வரும் தலைமுறைக்கு அடையாளமாக இருக்கும்.

உங்களுடைய எதிர்கால இலக்கு என்ன..?

இலக்கு என்று எதையும் பெரிதாக நிர்ணயித்துக் கொள்வதில்லை. என்னுடைய தலைமுறையில் இருப்பவர்களையும், அடுத்து வரும் தலைமுறையினருக்கும் ஏதேனும் ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஏனெனில் சினிமாவின் மட்டும் தான் நல்ல கருத்துகளையும், நல்ல விசயங்களை தொடர்ந்து சொல்ல முடியும். அரசியல் – சினிமாவை விட பெரிய கடல் என்பதால், அதனைத் தவிர்த்து விட்டு, சினிமாவிற்குள்… சினிமா மூலமாக தொடர்ந்து மக்களுக்கு தேவையான விசயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். சினிமாவில் மட்டும்தான் நாம் இறந்த பிறகும், நாம் திரையில் சொல்லிய கருத்துக்கள் குறித்த விவாதங்கள் மக்களிடத்தில் இருக்கும்.

ஏதோ ஒரு வேலையில் சேர்ந்தோம். சம்பாதித்தோம். திருமணம் செய்து கொண்டோம். குழந்தையை பெற்றுக் கொண்டோம். வீடு கட்டினோம். இறந்து விட்டோம்… என்று இருப்பதைவிட, மக்களின் மனதில் எப்போதும் வாழ வேண்டும். நமக்கான அடையாளங்கள் காலம் கடந்தும் பேசப்பட வேண்டும்.

சரித்திர திரைப்படங்களில் நடிக்கும் விருப்பம் உண்டா..?

நான் இதுவரை சின்னத்திரைகளிலும், பெரிய திரையிலும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் ‘பொன்னியின் செல்வன்’, ‘யாத்திசை’ போன்ற சரித்திர திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்காமல் ஒப்புக் கொள்வேன்.

நடிகைகளுடன் படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் மறக்க இயலாத அனுபவம் குறித்து..

படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுடன் கசப்பான எந்த அனுபவமும் இதுவரை ஏற்பட்டதில்லை. சின்னத்திரையாக இருந்தாலும்.. பெரிய திரையாக இருந்தாலும்.. படப்பிடிப்பு தளத்தில் சக கலைஞர்களுடனும், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இயல்பாக பழகுபவன். அனைவரிடத்திலும் பிரத்யேக திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். அதனால் படபிடிப்பு தளத்தில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறேன்.

ஈடாட்டம் குறித்து..?

இன்றைய சூழலில் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படம். இதில் விக்கி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். குடிப்பழக்கம் -நட்பு- காதல்.. என இன்றைய இளைய தலைமுறையின் எண்ணங்களை திரையில் பிரதிபலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறேன்.

ரசிகர்கள் என்னுடைய விக்கி கதாபாத்திரத்தை விட, திரைப்படம் சொல்ல வரும் விசயத்தை ரசிப்பார்கள். புரிந்து கொள்வார்கள். தங்களது தவறுகளை திருத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன். இயக்குநர் ஈசன் நேர்த்தியாக ‘ஈடாட்டம்’ படைப்பை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு என்னுடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனை ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

Serial actor Raja Suriya entry in kollywood

இமான் இசையில் பிரபுதேவா ஆடும் ‘பேட்ட ராப்’.; இயக்குநர் இவரா.?

இமான் இசையில் பிரபுதேவா ஆடும் ‘பேட்ட ராப்’.; இயக்குநர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.

புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

‘தேரு’ (2023) மற்றும் ‘ஜிபூட்டி’ (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதல், சண்டைக் காட்சிகள், இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘பேட்ட ராப்’ உருவாக உள்ளது. இதற்கேற்ற வகையில் “பாட்டு, அடி, ஆட்டம் – ரிபீட்” என்ற சுவாரசியமான டேக்லைன் இப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

பிரபுதேவாவை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்த வகையில் இப்படம் காட்டும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

கதை மற்றும் திரைக்கதையை டினில் பிகே எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. புதுச்சேரி மற்றும் சென்னையில் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட உள்ளன.

டி இமான் இசையமைக்க, ஐந்துக்கும் அதிகமான பாடல்களோடு வண்ணமயமாக ‘பேட்ட ராப்’ உருவாகிறது. படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் மற்றும் கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றுகின்றனர்.

விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் படத்தின் மற்ற நடிகர்கள் ஆவர்.

தொழில்நுட்ப குழுவினர்:

தலைமை இணை இயக்குநர் – சோழன், தயாரிப்பு நிர்வாகி – எம்.எஸ்.ஆனந்த், சசிகுமார் என், பாடல்கள் – விவேகா, மதன் கார்க்கி, ப்ராஜெக்ட் டிசைனர் – துஷார் எஸ், கிரியேட்டிவ் பங்களிப்பு – சஞ்சய் கசல், ஆடை வடிவமைப்பு – அருண் மனோகர், ஒப்பனை – அமல் சந்திரன், ஸ்டில்ஸ் – சாய் சந்தோஷ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பிரதிஷ் சேகர், வி எஃப் எக்ஸ் – விபின் விஜயன், டிசைன்ஸ் – மனு டாவின்சி.

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Prabhudeva joins forces with director SJ Sinu for Petta Rap

5G படம் : இளையராஜா இசையில் விஜயகாந்த் பட இயக்குநருடன் இணைந்த ஷாம்

5G படம் : இளையராஜா இசையில் விஜயகாந்த் பட இயக்குநருடன் இணைந்த ஷாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

5E கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி மற்றும் சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் ‘நம்பர் 1 புரொடக்சன்’ ஆக உருவாகி வரும் இந்தப்படத்தின் டைட்டிலை வெகு விரைவில் வெளியிட உள்ளனர்.

சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் நடித்த ஷாம் நடிக்க உள்ளார்.

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய எம்.பாரதி கணேஷ் இந்த படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபு கவனிக்க, படத்தொகுப்பை நாகூர் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, திரு குமரன் (மகாலட்சுமி பெண்கள் கல்லூரி MD), அஜய் (ஜமீலா A.K), ஆஷிகா யாஷ் (Dada) பெங்களூரு ஈஸ்வரி அம்மா, ஜாஸ்பர், மணிரத்னம், மானஸ்வி கொட்டாச்சி, விஷ்வநாதன் பிரபாகரன், ஆவடி லயன் செந்தில் அரசு, ஷிவானி ஹரிகுமார், ராக்ஸ்டார் கமலேஷ், ஆர்வன் வெற்றி இளங்கோ, முகுந்தன் மற்றும் நிஜய் என்ற திண்டுக்கல் நஷிர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இன்றைய 5G ஜெனேரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல் செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான கருத்தினை விளக்கும் ஒரு பதிவாக சென்னை சிட்டியில் நடக்கும் ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்தப்படம் தயாராகி வருகிறது.

வரும் ஜூன்-2ஆம் தேதி இசைஞானியின் 80வது பிறந்தநாளன்று இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது..

*தயாரிப்பாளர்* ; சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன்

*இணை தயாரிப்பு* ; சிட்டி கிளப் இராஜேந்திரன். S.S.அன்பு‌ தெட்சிணாமூர்த்தி

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*

இசை ; இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு ; எம்.எஸ்.பிரபு DF Tech

படத்தொகுப்பு ; நாகூர் ராமச்சந்திரன் DF Tech

மக்கள் தொடர்பு ; A.ஜான்

இணை இயக்குனர் ; V.ராமச்சந்திரன்

இணை இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ; பவித்ரா தேவராஜன் BE

தயாரிப்பு மேற்பார்வை ; A.V.பழனிச்சாமி

கதை திரைக்கதை, வசனம், இயக்கம் ; எம். பாரதி கணேஷ் MA, DFTech

Shaam teamed up with director of Vijayakanth film in the music of Ilayaraja

More Articles
Follows