அருள்நிதி-பரத் நீலகண்டன் இணையும் படத்திற்கு தர்புகா சிவா இசை

அருள்நிதி-பரத் நீலகண்டன் இணையும் படத்திற்கு தர்புகா சிவா இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbuka Siva will be composing music for Arulnithis next movieஒரு இசையமைப்பாளரின் உண்மையான வெற்றி என்பது குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் மயங்குவதும், அந்த படைப்பாளியை பற்றி இணைய தளத்தில் தேடுவதும் தான்.

தற்காலத்திய சகாப்தத்தில் மிகவும் திறமையான கலைஞர்களுக்கிடையில் பெரும் போட்டி இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு கடினமான சூழ்நிலை நலவுகிறது.

ஆனால் தர்புகா சிவா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தனது தனித்துவமான பண்புகளால் இசை ரசிகர்களை கவர்ந்திழுப்பதோடு, ரசிகர்களிடம் அமோக வரவேற்புகளையும் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் தர்புகா சிவா தனது இசைப்பயணத்தை புதுமையான இசையாலும், ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தையும் வழங்கி வருகிறார்.

எனை நோக்கி பாயும் தோட்டாவின் மூன்று சிங்கிள் பாடல்களால் (மறுவார்த்தை, விசிறி மற்றும் நான் பிழைப்பேனா) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டுள்ளார் தர்புகா சிவா.

மேலும், இன்னும் ரிலீஸாகாத ஒரு படத்தின் பாடல்கள் நீண்ட காலமாக டாப் பாடல்கள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பது மிகவும் சவாலான விஷயம்.

தற்போது, இந்த இசையமைப்பாளர் அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க தயாராகி விட்டார்.

எஸ்பி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
“எங்கள் படத்தின் மதிப்பு தர்புகா சிவாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்த பிறகு மேலும் அதுகரித்துள்ளது.

அவரது இசை திறமை மற்றும் இளம் இசை ரசிகர்களிடம் அவரின் பிரபலத்தன்மையை பார்த்து நாங்கள் வியப்படைந்தோம்.

அவரது இசையால் படத்தை நாங்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்” என பெருமையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஷங்கர்.

உச்சபட்ச கலைஞர்கள் பலர் இந்த படத்துக்குள் வருவது, நம்மை மிகவும் உற்சாகப்படுத்தும் விஷயங்கள் படத்தில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

Darbuka Siva will be composing music for Arulnithis next movie

சிவகார்த்திகேயனின் அப்பா பிறந்தநாளில் அவரது இரு பட முக்கிய நிகழ்வுகள்

சிவகார்த்திகேயனின் அப்பா பிறந்தநாளில் அவரது இரு பட முக்கிய நிகழ்வுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan24AM ஸ்டுடியோ சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் புதிய படத்தின் சூட்டிங் பூஜை மற்றும் சூட்டிங் நேற்று ஆரம்பமானது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிக்குமார் இயக்குகிறார்.

இதே நாளில் சிவகார்த்திகேயன் முதல் படத் தயாரிப்பான கனா என்ற படத்தின் டப்பிங்கும் துவங்கப்பட்டது.

இப்படத்தை நடிகரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்க, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த இரு படத்தின் முக்கிய நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பதும், இன்று என் அப்பாவின் பிறந்தநாள் என்பதால் அவரின் ஆசியுடன் செய்கிறேன் என சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தந்தை இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today,On Appa’s bday started my new film shoot and #Kanaa ‘s dubbing wit his blessings thanks to all the lovely people for wishing us..Spl thanks to my brothers and sisters for all the love.. love u all

மீண்டும் இணையும் மெகா காமெடி கூட்டணி பார்த்திபன்-வடிவேலு

மீண்டும் இணையும் மெகா காமெடி கூட்டணி பார்த்திபன்-வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban vadiveluநடிகர் பார்த்திபன் சரியான நக்கல் பார்ட்டி என்பது நாம் தெரிந்த ஒன்றுதான்.

அதுவும் இவர் வடிவேலு உடன் சேர்ந்துவிட்டால் வடிவேலுவின் கதி அந்தோ பரிதாபம்.

இவர்களின் கூட்டணியில் வந்துள்ள அனைத்து படங்களுமே இவர்களின் காமெடிக்காகவே ஓடியது.

தற்போது இந்த கூட்டணி விமல் நடிக்கும் படமொன்றில் இணைகிறது.

சுராஜ் இயக்கும் ஒரு படத்தில் விமல் – வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.

இதில் நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகவேள் எம்ஆர். ராதாவின் வாழ்க்கையை படமாக்கும் பேரன் ஐக்

நடிகவேள் எம்ஆர். ராதாவின் வாழ்க்கையை படமாக்கும் பேரன் ஐக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MR Radhaநடிகவேள் எம்ஆர். ராதா நடித்த படங்களை இன்று பார்த்தால் கூட அவர் அன்று சொன்னது இன்று நடக்கிறதே என வியக்காதவர்களே இருக்க முடியாது.

அவரின் வசனங்கள் இன்றைய காலகட்டத்திற்கு அப்படியே பொருந்தி வருகிறது.

நடிப்பு, அரசியல், சுயமரியாதை இயக்கம் என ஒட்டுமொத்த தமிழகத்தை கவர்ந்த அவரது வாழ்க்கை இப்போது ஒரு படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை எம்ஆர். ராதாவின் பேரன் ஐக் என்பவர் இயக்கவுள்ளார்ர்.

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்த `சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கியவர் அவரே.

இப்படம் குறித்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

`நடிகவேளைப் பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன்.

பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ike radha‏ @thenameisike

For those who’ve never seen him but never forgotten him – This ones for U ! Unveiling untold stories of my legendary grandfather ‘Nadigavel’ M.R.Radha in a Film which I hope I do justice to as a grandson & more importantly as a fan #MRRadhaTheFilm #Nadigavel #WorkInProgress

சிம்புவை இயக்கும் வெங்கட் பிரபுக்கு தமிழ்படம்2 டைரக்டர் வேண்டுகோள்

சிம்புவை இயக்கும் வெங்கட் பிரபுக்கு தமிழ்படம்2 டைரக்டர் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and venkat prabhuசிம்புவின் அடுத்த படத்தை தான் இயக்குவதாக வெங்கட் பிரபு அறிவித்தார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படம் 2019-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலரும் இந்த புதிய கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்ப்படம் 2 இயக்குநர் சி.எஸ்.அமுதனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அமுதன் தெரிவித்ததாவது,

`இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்! ஒரு பர்ஸ்ட் லுக் விட்டீங்கனா வசதியா இருக்கும்’ என்று வெங்கட் பிரபுக்கு அமுதன் கோரிக்கை வைத்தார்.

அவருக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, `எப்படியும் உங்க பட ரிலீசுக்கு அப்பறம் தான் சார்! நன்றி’. என்று பதில் அளித்தார்.

பன்னி மூஞ்சி வாயன் போல குழந்தைகளை கவர வரும் *காட்டேரி*

பன்னி மூஞ்சி வாயன் போல குழந்தைகளை கவர வரும் *காட்டேரி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaatteri aka Kaateri movie will attract Childrenஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’.

இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே.

படத்தைப் பற்றி இயக்குநர் டீகேயிடம் கேட்டபோது,‘ காட்டேரி என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்று நினைக்கிறார்கள். ஆனால் காட்டேரி என்றால் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்று அர்த்தமும் இருக்கிறது.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் ஒன் லைனைச் சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டது. அத்துடன் இந்த கதைக்கு ‘காட்டேரி ’ என்றடைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும் அபிப்ராயமும் சொன்னார்.

அந்த தலைப்பு எனக்கும் பிடித்திருந்தது. கதைக்கும் ஏற்றதாக இருந்தது.

இந்த படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கும் திட்டமிருந்தது. ஆனால் எனக்கு தெலுங்கு தெரியாததால், தமிழில் இந்த படத்தை எடுக்க தீர்மானித்தோம்.

அதனால் வைபவ் நாயகன் ஆனார். அவருக்கு ஜோடியாக சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணாலி ரத்தோர் என நான்கு நாயகிகள் ஒப்பந்தமானார்கள்.

இதில் சற்று சுயநலமிக்க கேரக்டரில் சோனம் பஜ்வா நடிக்கிறார். மன நல மருத்துவராக ஆத்மிகா நடிக்கிறார். வரலட்சுமியும், மணாலி ரத்தோரும் கதையில் இடம்பெறும் 1960 சம்பந்தப்பட்ட பீரியட் போர்ஷனில் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார்கள்.

என்னுடைய முதல் படமான யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டர் பிரபலமானது போல், இந்த படத்திலும் ரகளையான கேரக்டர்கள் இருக்கிறது.

இதனால் இந்த காட்டேரியை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்த காட்டேரி ரத்தம் குடிக்காத காமெடி பேய்.’ என்றார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kaatteri aka Kaateri movie will attract Children

More Articles
Follows