தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சினிமா பாடலை நாம் ரசிக்க முக்கிய காரணம் அதன் இசையும் அந்த பாடல் வரிகளும் தான்.
அதன் பின்னரே பாடகர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள முயல்வோம்.
ஆனால் பலருக்கும் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் யார்.?
ஒரு பாடலைக் கேட்க பாடல் வரிகள் மிக முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு பாடலைப் பார்த்து ரசிக்க காரணமாக அமைவது நிச்சயமாக நடனம்தான்.
ஒரு பாடலைப் பார்த்த உடனே நாமும் ஆட தோன்றினால் அது தான் நடன இயக்குனரின் வெற்றி ஆகும்.
இந்த வரிசையில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த சின்னா என்பவர் இன்று மரணமடைந்தார்
பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அஜித் நடித்த அமராவதி, விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, விஜய் நடித்த செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா வயது 69 இன்று மரணமடைந்தார்.
Dance master Chinna passed away