‘விஜய்-அஜித் இப்படி வருவாங்கன்னு நான் எதிர்பாக்கல..’ பிரபல நடிகை

‘விஜய்-அஜித் இப்படி வருவாங்கன்னு நான் எதிர்பாக்கல..’ பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanghaviவிஜய், அஜித்தின் ஆரம்ப கால படங்களில், அவர்களுடன் நடித்தவர் சங்கவி.

அதன்பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார்.

தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், கொளஞ்சி என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்து வருகிறார்.
இதில் இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்து வருகிறார்.

இப்படம் குறித்த இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

கொளஞ்சி படம் எனக்கு, 99வது படம். இரண்டு குழந்தைகளுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

புஷ்பா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நாத்திகவாதியாக சமுத்திரக்கனி நடிக்கிறார். தன்ராம் சரவணன் இயக்குகிறார்.

அஜித், விஜய்யுடன் நடித்தது குறித்து கேட்டதற்கு…

அமராவதி படத்தில் அஜித்துடன் நடிக்கும்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பின்னர் விஜய்யுடன் பல படங்களில் நடித்தேன்.

அவர்கள் இருவரும் இப்படி இவ்வளவு பெரிய நடிகர்களாக வருவார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.
அவர்களின் கடின உழைப்பும், விடா முயற்சியுமே இதற்கு காரணம்.” என்றார் சங்கவி

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷின் அடுத்த அதிரடி!

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷின் அடுத்த அதிரடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and soundarya rajini joins for new projectதொடரி படம் வெளியானதை தொடர்ந்து, கொடி படத்தை தீபாவளி விருந்தாக தரவிருக்கிறார் தனுஷ்.

இதனிடையில் ராஜ்கிரண் நடிக்க, பவர் பாண்டி என்ற படத்தையும் இயக்கி தயாரித்து வருகிறார்.

விரைவில் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.

இவையில்லாமல், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதி தயாரிக்க போகிறாராம்.

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை கூட இப்படத்திற்காக தேர்வு செய்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.

கோச்சடையானை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னேகாவுக்கு விஜய் சேதுபதியை பிடிக்க இதான் காரணம்!

ஸ்னேகாவுக்கு விஜய் சேதுபதியை பிடிக்க இதான் காரணம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

snehaதன் புன்னகையால் தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் ஸ்நேகா.

திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்களில் நடிக்கிறார்.

மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில், இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்சேதுபதி என தெரிவித்துள்ளார்.

அவரின் கேரக்டர், வசன உச்சரிப்பு என அனைத்தும் ஹீரோயிஸம் இல்லாமல் மிகவும் யதாத்தமாக இருக்கிறது என்றார்.

இதை விஜய்சேதுபதியிடமே ஒரு முறை தெரிவித்தும் இருக்கிறாராம்.

குஷ்பு-சுஹாசினி-ராதிகா-ஊர்வசி ஆகிய நால்வரையும் இயக்கும் பிரபலம்

குஷ்பு-சுஹாசினி-ராதிகா-ஊர்வசி ஆகிய நால்வரையும் இயக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radhika Urvashini Suhasini Kushboo20-25 வருடங்களுக்கு தங்கள் அழகிய நடிப்பால் ரசிகர்களை கவந்தவர்களில் குஷ்பு, சுஹாசினி, ராதிகா மற்றும் ஊர்வசி ஆகிய நால்வருக்கும் முக்கிய இடம் உண்டு.

இவர்களில் சிலர் ஒரு சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

தற்போது இவர்கள் நால்வரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போகிறார்களாம்.

இப்படத்தை பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இயக்கவுள்ளார்.

இவர் இதற்கு முன்பே, ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கியுள்ளது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

‘சிவான்னு பேரு மாத்தினதும் சதீஷ் ஓகே சொன்னார்’ – விஜய்சேதுபதி

‘சிவான்னு பேரு மாத்தினதும் சதீஷ் ஓகே சொன்னார்’ – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rekka vijaysethupathiரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி, லெட்சுமி மேனன், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சிஜாரோஸ், ஹரீஷ் உத்தமன், கபீர் சிங், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் றெக்க.

இமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

இதன் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய்சேதுபதி பேசும்போது…

“சதீஷ் மற்றும் ஹரீஷ் உத்தமன் இருவரும் இப்படத்தில் நடித்தற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சதீஷிடம் நடிக்க கேட்டதற்கு முதலில் கால்ஷீட் இல்லை. முடியாது என்று மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் இப்படத்தில் என் கேரக்டர் பெயரை சிவா என மாற்றிய பின் நடிக்க ஒப்புக் கொண்டார்.” என பேசினார்.

சதீஷின் நெருங்கிய நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது தாங்கள் அறிந்ததே

குமுதம் பத்திரிக்கை & கஞ்சா கருப்பு மீது ‘கள்ளன்’ பட இயக்குனர் புகார்

குமுதம் பத்திரிக்கை & கஞ்சா கருப்பு மீது ‘கள்ளன்’ பட இயக்குனர் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ganja karuppuகடந்த குமுதம் இதழில் அதாவது 28.9.16 என்ற தேதியிட்டு வெளியான குமுதம் இதழில் நடிகர் கஞ்சா கருப்பு அவர்களின் பேட்டி வெளியானது.

அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சந்திரா பற்றியும் அவரது கணவர் வீகே.சுந்தர் மீதும் பல்வேறு அவதூறுகளை சொல்லியிருந்தார் நடிகர் கஞ்சா கருப்பு.

இதுகுறித்து நேற்று (23.9.16) அன்று நடிகர் கஞ்சா கருப்பு மீதும், அநாகரீகமான வார்த்தைகளை பிரசுரித்த குமுதம் இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன், நிருபர் மகா, பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்திரா.

இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…

எனக்கும் எனது கணவர் திரு வீ.கே.சுந்தருக்கும் 19995 ல் திருமணம் ஆனது முதல் நான் சென்னையில் வசித்து வருகிறேன்.

முதலில் பத்திரிகைத்துறையில் செய்தியாளராக பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தேன்.

நான் தற்போது ’கள்ளன்’ என்ற திரைப்படத்திற்கு கதை.திரைக்கதை.வசனம் ஆகிய பணிகளை ஏற்று அப்படத்தை இயக்கி முடித்துள்ளேன்.

மேலும் நான் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளேன்.

இந்நிலையில் திரு. கஞ்சா கருப்பு என்ற திரைப்பட நடிகரை திரு ம.க.என்ற கடற்கரை எடுத்த பேட்டி 28.9.2016 நாளிட்ட குமுதம் தமிழ் வார இதழில் பக்கம் 12 முதல் பக்கம் 18 வரை செய்தியாக வெளிவந்துள்ளது.

மேற்சொன்ன பேட்டி மற்றும் செய்தியில் என் கணவர் திரு. வீ.கே.சுந்தர் பற்றியும் அவரது நண்பர்கள் மற்றும் சில பொதுநபர்களைப் பற்றியும் பொய்யான, தவறான, உண்மைக்கு மாறான அவதூறான செய்திகளை கஞ்சா கருப்பு பேட்டியாக அளித்துள்ளார்.

மேற்சொன்ன இதழில் வெளிவந்த பேட்டிச் செய்தி தெரிந்து, நானும் என் கணவர் வீ.கே.சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அவமானத்திற்கும் அவமரியாதைக்கும் ஆளாகியுள்ளோம்.

மேலும் அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாங்க இயலாத துயரத்தையும் மான நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்சொன்ன பேட்டிச் செய்தியில் திரு. கஞ்சா கருப்பு அவர்களின் பணத்தை வைத்து என் பெயரில் கார் வாங்கியதாக அவதூறாக கூறியுள்ளார்.

எனக்குச் சொந்தமாக எந்தக் காரும் இல்லை. என் பெயரில் இதுவரை எந்தக் காரும் வாங்கப்படவில்லை.

திரு.கஞ்சா கருப்பு அவர்கள் அவரின் தாயார் பெயரில் அவரின் சொந்த ஊரில் உள்ள சொத்தை என் பெயரில் மாற்றி பதிவு செய்து தரும்படி என் கணவரிடம் நான் கோரியதாக தெரிவித்துள்ளதும் பொய்யான ஒன்றாகும்.

நான் தற்போது இயக்கிவரும் ’கள்ளன்’ திரைப்படத்தை எட்ஸெட்ரா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக திரு வி.மதியழகன் அவர்களால் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

அவர்களே முழு தயாரிப்புச் செலவையும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படம் என் சொந்த தயாரிப்பிலோ செலவிலோ எடுக்கப்படவில்லை. இது திரைத்துறையினர் அனைவருக்கும் தெரிந்த செய்தி.

உண்மை இவ்வாறிருக்க மேற்சொன்ன திரு. கஞ்சா கருப்பு அவர்கள் அளித்துள்ள பேட்டி உண்மைக்கு மாறான ஒன்று.

இது தெரிந்தும் அவரால் வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட செய்தியாகும்.
அச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து என்னிடமோ அல்லது என் கணவரிடமோ உறுதி செய்யாது, வெறும் வியாபார நோக்கத்துடன் பத்திரிக்கை தர்மத்திற்கு மாறாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே மேற்சொன்ன நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், மேற்சொன்ன குமுதம் வார இதழ்களை பறிமுதல் செய்யும்படியும் வேண்டிக் கொள்கிறேன்.

பின் குறிப்பு – இது இயக்குனர் சந்திரா குமுதம் இதழின் இயக்குனர்கள், பதிப்பாளர்,ஆசிரியர்,பொறுப்பாசிரியர், நிருபர் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது அளித்துள்ள காவல் நிலைய புகார் நடவடிக்கை மட்டுமே…

பிஆர்.ஓ வீகே.சுந்தர் தன்மீது கஞ்சா கருப்பு கூறியுள்ள அவதூறுகளுக்கும் அதனை வெளியிட்ட குமுதம் இதழின் மீதும் தனியாக அவதூறு வழக்கு பதிவு செய்ய தனது வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.

More Articles
Follows