அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் மனைவி மரணம்

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் மனைவி மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amaravathi director selvaஅமராவதி படத்தில் அறிமுகமாகி இன்று 56 படங்களில் நடித்துள்ளார் அஜித்.

விரைவில் 57வது படத்தில் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவரை அமராவதி படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வா.

இப்படம் 1993ஆம் ஆண்டு வெளியானது. இது இயக்குனரின் இரண்டாவது படமாகும்.

மேலும் கர்ணா, பூவேலி, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார் செல்வா.

இந்நிலையில் இன்று அதிகாலை செல்வாவின் மனைவி மரணமடைந்துள்ளார்.

அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, முகப்பேரில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

 

‘என்னால தூங்க முடியல; ரஞ்சித்துக்கு நன்றி..’- ‘கபாலி’ தன்ஷிகா

‘என்னால தூங்க முடியல; ரஞ்சித்துக்கு நன்றி..’- ‘கபாலி’ தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanshika in kabaliரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் இளையவர்கள் நடித்து பெயர் வாங்குவது சிரமம்.

ஆனால் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன், மன்னன் படத்தில் விஜயசாந்தி ஆகியோர் இதற்கு விதிவிலக்கு எனலாம்.

அதுபோல் நேற்று முன்தினம் வெளியான ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பெரும் பெயரை பெற்றுள்ளார் தன்ஷிகா.

யோகி என்ற கேரக்டரில் ஆண் பிள்ளை போல உடையணிந்து ரஜினி மகளாக தோன்றினார்.

இவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை நேரில், ட்விட்டரிலும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் தன்ஷிகா கூறியதாவது…

“உங்களுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்த பின் சத்தியமாக என்னால தூங்க முடியல.

இதற்கு எல்லாம் காரணமான ரஞ்சித்துக்கு என் ஆழ் மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் பாடலுக்கு மாணவர்களுடன் ஆட்டம் போட்ட விக்ரம்

தனுஷ் பாடலுக்கு மாணவர்களுடன் ஆட்டம் போட்ட விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram danceமுன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தனர்.

இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று முதல் கொண்டாடப்படுகிறது.

இதற்காக இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

எனவே பழைய மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவின் கொண்டாட்டமாக விக்ரம், இன்றைய மாணவர்களுடன் நடனம் ஆட விரும்பினார்.

அதன்படி தனுஷ் நடித்த மாரி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டாராம்.

நிறைவு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

முதல் நாள் வசூல்: மற்ற படங்களை காலி செய்த ‘கபாலி’

முதல் நாள் வசூல்: மற்ற படங்களை காலி செய்த ‘கபாலி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth Kabaliரஜினிகாந்த்-கலைப்புலி தாணு கூட்டணியில் உருவான கபாலி நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

ரஞ்சித் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் படத்தின் வசூலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என கூறப்படுகின்றது.

இப்படம் சென்னையில் மட்டும் ரூ 2 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ரூ. 20-24 கோடி வரை வசூலித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மற்ற மாநிலங்கள் விவரம்…

  • ஆந்திரா+தெலுங்கானாவில் ரூ 10 கோடி
  • கேரளாவில் ரூ 4 கோடி
  • கர்நாடகாவில் ரூ 6 கோடி
  • மற்ற மாநிலங்கள் அனைத்து சேர்த்து ரூ 5 கோடி
  • இந்தியாவில் மட்டும் ரூ. 49-50 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இவையில்லாமல் வெளிநாடுகளில்…

  • அமெரிக்காவில் ரூ 16 கோடி
  • மலேசியா, துபாய், சிங்கப்பூரில் ரூ 12 கோடி
  • மற்ற நாடுகள் ரூ 21-26 கோடி வரை
  • ஆக மொத்தம் உலக முழுவதும் ரூ. 104 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இந்திய படங்களிலேயே முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளதாம்.

மேலும் வசூலில் பல சாதனைகளை படைக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கபாலி மாஸ் படம் அல்ல; கிளாஸ் படம்..’ குவியும் பாராட்டுக்கள்!

‘கபாலி மாஸ் படம் அல்ல; கிளாஸ் படம்..’ குவியும் பாராட்டுக்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajini and radhika apteசினிமாவையே ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கபாலிதான்.

எதிர்ப்பார்ப்பு இருந்தளவு படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன.

நேற்று படம் வெளியானதால் முற்றிலும் ரஜினி ரசிகர்களே பார்த்தனர்.

நாம் எதிர்பார்த்து வந்த ரஜினி படம் இது இல்லை என அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் சிலர் ரஜினியை அவருக்கு ஏற்ற வயதில் பார்க்க முடிந்துது.

காளி, முள்ளும் மலரும் படத்தில் பார்த்த ரஜினியை இதில் நாங்கள் பார்த்தோம் என்றனர்.

இன்று மற்ற தரப்பு ரசிகர்களும் குடும்பங்களும் கூட்டம் கூட்டமாக வந்து கபாலியை பார்த்து வருகின்றனர்.

ரஜினிக்கு வயதாகி விட்டது. அவர் அமிதாப்பை போல வேடங்களை ஏற்பது நல்லது என்று கூறியவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம்.

இதுவரை நாம் பார்க்காத ரஜினியை இதில் பார்க்க முடிகிறது. ஜெயிலில் இருந்து விடுதலை ஆகும் ஒரு நபர் மிகவும் பக்குவப்பட்டு நிதானமாகதான் செயல்படுவார்.

அதுமட்டுமில்லாமல் மனைவி, மகளை இழந்த ஒருவர் அதற்கான மன உளைச்சலில்தான் இருப்பார். எனவே அப்படியான ஒரு கேரக்டரைதான் ரஜினிகாந்த் இப்படத்தில் செய்து இருக்கிறார்.

அதை மிக இயல்பாக செய்து காட்டியிருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் படம் இல்லை. கபாலி ஒரு கிளாஸ் படம். இப்படத்தை பார்க்க பார்க்கதான் உங்களுக்கு பிடிக்கும்.

மேலும் முதல் காட்சி பரபரப்பு, எதிர்மறை விமர்சனங்கள் இவை ஓய்ந்தபின் படத்தை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என பாராட்டுக்கள் தெரிவிக்கின்றன.

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சூர்யா சொன்ன செய்தி

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சூர்யா சொன்ன செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surya speechநடிகர் சூர்யா இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

எனவே இதனை முன்னிட்டு நேற்று தன் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இருந்து வந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசியதாவது..

“என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு வருட இடைவேளைக்கு பின் ரசிகர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

ரசிகர்கள் சிறப்பான முறையில் நற்பணிகளை செய்து வருவது எனக்கு பெருமையையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது.

ஆனால் எல்லோரும் முதலில் உங்கள் தாய், தந்தை, குடும்பம் மற்றும் நீங்கள் செய்யும் தொழிலுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அதன் பின்னர் நீங்கள் நற்பணி மன்ற பணிகளில் ஈடுபட்டால் போதும்.

இதுவரை 20,000 பேர் சூர்யா அரசு இரத்ததான வங்கிக்கு இரத்தம் வழங்கி உள்ளீர்கள். இது மிகப்பெரிய சாதனை ஆகும்.

இதனை பாராட்டி சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை பார்த்தேன்.

நிஜமாகவே இது பெருமைக்குரிய ஒன்றாகும்.

இந்த முறையும் நீங்கள் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததானம், அன்னதானம் மரக்கன்று நடுதல், கோவிலில் சிறப்பு பூஜை ஆகிய நற்பணிகளில் ஈடுப்பட்டு வருகிறீர்கள். எல்லோருக்கும் நன்றி.

இதே போல் நீங்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்.

கல்வியால் ஒரு குடும்பம் மட்டும் அல்ல ஒரு நாடே பயனடையும்.” என்றார்.

விழாவிற்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

சூர்யா வந்திருந்த ரசிகர்கள் அனைவரிடமும் புகைப்படம் எடுத்து கொண்டார். விழாவில் ராஜசேகர பாண்டியன் , ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Articles
Follows