தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று டிசம்பர் 10ஆம் தேதி ரஜினியின் ‘பாபா’ படம் ரீ ரிலீஸ் ஆகிறது.
இந்த படம் 20 வருடங்களுக்கு முன்பு வந்தாலும் தற்போதும் அதை பரபரப்புடன் புதிய படம் போல காணப்படுகிறது.
நேற்று டிசம்பர் 9ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது.
இந்த சிறப்பு காட்சிக்கு ரஜினி மனைவி லதா, ஐஸ்வர்யா ரஜினி, நடிகர் லாரன்ஸ், நாய் சேகர் இயக்குனர் கிஷோர், கலைப்புலி தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் லதா ரஜினி கூறியதாவது..
“ஒரு புதிய படம் போல பாபா ரி ரிலீஸ்க்கு கூட்டம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரசிகர்கள் எங்களின் குடும்ப போன்றது. எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு திகட்டாது. அது போல தான் ரசிகர்களுக்கும் ரஜினி படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.
தற்போது புயல் மழை உள்ளது. எனவே அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்” என தெரிவித்தார் லதா ரஜினி