சர்கார் & பில்லாபாண்டி-யுடன் தீபாவளி கொண்டாடும் களவாணி மாப்பிள்ளை

சர்கார் & பில்லாபாண்டி-யுடன் தீபாவளி கொண்டாடும் களவாணி மாப்பிள்ளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalavani mappillaiநவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று விஜய் நடித்துள்ள சர்கார் மற்றும் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி ஆகிய படங்கள் வெளியாகிறது.

இத்துடன் தினேஷ் – அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “களவாணி மாப்பிள்ளை“ படத்தை தயாரித்துள்ளது.

தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்

நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி. படமாக உருவாக்கி உள்ளோம். படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

விஜய்யுடன் மோதலை தவிர்க்க விலகும் விஜய் ஆண்டனி

விஜய்யுடன் மோதலை தவிர்க்க விலகும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vijay antonyவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால் இதன் பின்னர் அவர் நடித்த அண்ணாதுரை, காளி ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. இதை விஜய் ஆண்டனியே அண்மையில் ஒரு மேடை நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டார்.

எனவே விரைவில் வெளியாகவுள்ள திமிரு புடிச்சவன் படத்தைதான் பெரிதும் நம்புயிருக்கிறார் விஜய் ஆண்டனி.

கணேசா இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் ரோலில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி,

இப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே தினத்தில் சர்கார் படம் வெளியாகவுள்ளதால் திமிரு புடிச்சவனுக்கு போதிய தியேட்டர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து படத்தை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

வைரமுத்து படுக்க கூப்பிட்டது தப்பில்லை.; மாரிமுத்து பேச்சுக்கு சித்தார்த் கண்டனம்

வைரமுத்து படுக்க கூப்பிட்டது தப்பில்லை.; மாரிமுத்து பேச்சுக்கு சித்தார்த் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mari muthu and siddharthகவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இது திரையுலகில் பெரும் சர்ச்சை உண்டாக்கியுள்ளது.

ஒரு சிலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

நடிகர் சித்தார்த் ஆரம்பம் முதலே இது குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து என்பவர் த்ன் பேட்டியில், ஆண்களின் ஹார்மோன் வளர்ச்சி அப்படி. பெண்ணைத் தானே படுக்க கூப்பிட முடியும். ஆண்டுகளையா கூப்பிட முடியும்.

கவிஞர் வைரமுத்து மீது தப்பில்லை. அவரது புகழுக்கு களங்கமில்லை என அதிரடியாக பேசியுள்ளார்.

இதனை கண்டிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவு இதோ…

Siddharth‏Verified account @Actor_Siddharth

Siddharth Retweeted Baradwaj Rangan

I wish this small-minded, disappointing man #Marimuthu was not part of my favourite Tamil film of the decade. A classic about equality and change! Unfortunately he always will be. This interview hurt me and so many others so much. Sad! Paavam yen #Karuppi. @Mari_selvaraj @beemji

அட யாராச்சும் கேஸ் போடுங்கப்பா…; ஆடம்ஸ் அடம்; பிரபு கண்டிப்பு!

அட யாராச்சும் கேஸ் போடுங்கப்பா…; ஆடம்ஸ் அடம்; பிரபு கண்டிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu and adamsடிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருப்பவர் ஆடம்ஸ்.

அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருகிறார்.

இவர் தற்போது உதயா தயாரித்து நடித்துள்ள உத்தரவு மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற நவம்பர் 16ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஆடம்ஸ் பேசியதாவது…

” உத்தரவு மகாராஜா படத்தில் உதயாவின் நண்பராக நான் நடித்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்துவிட்டு, இந்த படத்தின் மூலம் தான் பெரிய திரைக்கு வந்திருக்கிறேன்.

விஜய்யின் சர்கார் படத்துக்கு விளம்பரமே தேவையில்லை. ஆனால் அந்த படத்தின் மீது கேஸ் போட்டு புரோமோஷன் தருகிறார்கள்.

எங்கள் படத்தின் மீதும் யாராவது கேஸ் (வழக்கு) போட்டால் எங்களுக்கும் புரோமோஷனாக இருக்கும். பாஜக. எச்.ராஜா போன்றோர் எங்கள் படம் பற்றி ஏதாவது பேசினால் ஒரு விளம்பரமாக இருக்கும்.

எங்களைப் போன்ற படங்களுக்கு புரோமோஷன் கிடைப்பதில்லை”, என அவர் கூறினார்.

அதன் பின்னர் பேசிய நடிகர் பிரபு.. “ஆடம்ஸ் சொல்வதை யாரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் தெரியாமல் பேசிவிட்டார் என்பது போல கண்டித்தார்.

எந்திரன்-கோச்சடையான் படங்களுக்கு பிறகு டிவி.யில் ரஜினி பேட்டி

எந்திரன்-கோச்சடையான் படங்களுக்கு பிறகு டிவி.யில் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth interview will telecast in Zee TV on Diwaliகடந்த 40 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் இவரை டிவி பேட்டிகளில் பார்ப்பது மிக அரிதான ஒன்று.

தன் படம் விளம்பரம் சம்பந்தமாக டிவி நிகழ்ச்சிகளில் கூட கலந்துக் கொள்வதில்லை.

இருந்தபோதிலும் எந்திரன், கோச்சடையான் படங்களின் ரிலீசின் போது டிவி சேனல்களுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு 2.0 பட புரோமோசன் சம்பந்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று மதியம் 3 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் தன் படம் குறித்த அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘2.0’ படத்தை சுமார் 110 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை ஜீ குழுமம் வாங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கிட்டதட்ட 500 கோடியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

Rajinikanth interview will telecast in Zee TV on Diwali

36 நாட்களில் சூர்யா பட சூட்டிங்கை முடித்த *உறியடி2* டைரக்டர்

36 நாட்களில் சூர்யா பட சூட்டிங்கை முடித்த *உறியடி2* டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijaykumar completed his Uriyadi2 Shooting in 36 daysகடந்த 2016-ம் ஆண்டு விஜய்குமார் என்பவர் இயக்கி நாயகனாக நடித்த உறியடி படம் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யா தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.

இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் விஜய்குமாரே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாடல் உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இதன் சூட்டிங் குற்றாலம், தென்காசி போன்ற பகுதிகளில் நடந்துவந்த நிலையில் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இப்பட சூட்டிங்கை வெறும் 36 நாட்களிலேயே விஜய்குமார் இயக்கி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijaykumar completed his Uriyadi2 Shooting in 36 days

Vijaykumar completed his Uriyadi2 Shooting in 36 days

More Articles
Follows