தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தியா இயக்கி நடித்துள்ள கன்னா பின்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குனர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது…
“இனி யாராவது திருட்டு சிடி பாத்தீர்கள் என்றாலோ, விற்றீர்களோ என்றாலோ கைகள் உடைக்கப்படும், உங்கள் கடைகள் கொளுத்தப்படும்” என ஆவேசமாக பேசியார்.
அதன் பின்னர் பாக்யராஜ் பேசும்போது…
“திருட்டு விசிடி கடைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது என சேரன் சொன்னார்.. ஆனால் அவை ஓப்பனாகவே இருக்கும்போது நம்மால் என்ன பண்ண முடியும்.
இதில் மக்களை குறைசொல்ல முடியாது. பஸ்ஸில் ஏறும்போதே ஊர்ப் பெயரோடு சேர்த்து அந்த பஸ்ஸில் என்ன படம் போடுகிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆட்களை ஏற்றுகிறார்கள்.
அதற்காக கண்ணை மூடிக்கொண்டு பயணம் செய்ய முடியுமா? கேபிள் டிவியிலும் புதுப்படம் போடுகிறார்கள். பார்க்காமல் இருக்க முடியுமா?
மக்கள் ரசிக்கும் விதமாக நல்ல படங்களை கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள்.
ரஜினி உட்பட பலரும் ஜோக்கர் படத்தை பாராட்டினார்கள். நல்லா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் நானும் தியேட்டரில் போய் பார்த்தேன்.
நாம் நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடிகாரர்களால் ஒன்றும் பண்ண முடியாது. என்றார்.
மேலும் பேசியதாவது…
படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் தயவு செய்து தயாரிப்பாளரை காப்பாற்றுகிறேன் என யாரும் படம் எடுக்காதீர்கள்.
முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படம் எடுங்கள். தயாரிப்பாளர் ஒரு படத்தில் காசை விட்டால் கூட, அடுத்து இன்னொரு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்து சம்பாதித்துக்கொள்வார்.
முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படங்களை எடுங்கள். அது உங்களையும் காப்பாற்றும்.. அதோடு தயாரிப்பாளரையும் காப்பாற்றிவிடும்.
என்று பேசினார் பாக்யராஜ்.