தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள திரைப்பட ஒளிப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” ஒப்புதல் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதமே இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த சமயமே எதிர்ப்பு எழுந்ததால் நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும்.
எனவே கமல் சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன் ட்விட்டர் பதிவில்..,
“ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா நாட்டின் இறையாமை காக்கவே என ஒரு கூட்டம் கம்புசுத்துகிறது.
இவ்வாறான விசயம் முன்பே இருந்திருந்தால் #அருவி #ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை! ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.
மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!! என பதிவிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி தன் ட்விட்டரில்…
While draft measures to curb piracy are commendable, it is highly undesirable to strangle freedom of expression in a civilized society as ours. Therefore request the goverment to heed our request.
#CinematographAct2021 #FreedomOfExpression
Producer SR Prabhu against for Cinematograph act 2021