கேரளாவிடம் கற்றுக் கொரோனாவை கொல்லுங்க..- புரொடியூசர் SR பிரபு

கேரளாவிடம் கற்றுக் கொரோனாவை கொல்லுங்க..- புரொடியூசர் SR பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sr prabhuஇந்தியாவில் முதலில் கொரோனா தொற்று கேரளாவில் தான் கண்டறியப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம் மலையாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் தான் வசிக்கிறார்கள். அவர்கள் சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியபோது கொரோனா தொற்றி அதிகளவில் பரவியது.

ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா விழிப்புணர்பு மற்றும் உலக சுகாதார துறையினர் பரிந்துரை செய்த வழிகாட்டுதலின்படி கேரளா அரசு நடவடிக்கைகளை சரியான தருணத்தில் எடுத்தது.

கேரள அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு மலையாளிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

கொரோனா தொற்றில் முதல் இடத்தில் இருந்த கேரளா, தற்போது பின்னுக்கு சென்றுவிட்டது.

இப்போதும் சிலர் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் அந்த நிலை உடனே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஜோக்கர், அருவி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கொரோனா குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களும் கேரளாவை பின்பற்றி தங்கள் மாநிலங்களில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்

ஜாஸ்மின் இயக்குனரின் அடுத்த படம்

ஜாஸ்மின் இயக்குனரின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jegan saiஇயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் சார்பாக இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.

தமிழ்ப் புத்தாண்டான இன்று இப்படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் ஜெகன்சாய் வீட்டிலே நடைபெற்றது.
எல்லாத்தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஜெகன்சாய் உருவாக்கியுள்ள இப்படத்தின் கதையில் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முன்னணி டெக்னிஷியன்ஸ் பணியாற்ற இருக்கிறார்கள் அதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது.

ஜெகன்சாய் ஏற்கனவே ‘ஜாஸ்மின்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அப்படம் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு நாட்கள் முடிந்த பின் வெளியாகும்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையை இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆன ஜெகன் சாய் மிகப்பிரம்மாண்டமாக நடத்த நினைத்தார். கொரோனா காரணமாக மிக எளிமையான முறையில் அவரது வீட்டில் நடைபெற்றது. அதைப்பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெகன் சாய் கூறுகையில், “எளிமையில் எண்ணற்ற வலிமை இருக்கிறது என்பார்கள். அந்த வலிமை மக்களை கொரோனாவில் இருந்தும் மீட்டெடுக்கும் தமிழ்சினிமாவும் விட்டதை எல்லாம் வென்றெடுக்கும்” என்று நம்பிக்கையோடு தெரிவித்து படக்குழு சார்பாக அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும் கூறினார்.

மாஸ்டராக இருந்த போதும் இப்போதும்..; ‘மாஸ்டர்’ விஜய்யுடன் உதய்ராஜ்

மாஸ்டராக இருந்த போதும் இப்போதும்..; ‘மாஸ்டர்’ விஜய்யுடன் உதய்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor udayaraj in masterவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய்பேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே நட்சத்திர பட்டாளமே நடித்தள்ள நிலையில் நடிகர் உதய்ராஜ் என்பவரும் இதில் நடித்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது விஜய்யுடன் ‘திருமலை’ படத்தில் மெக்கானிக்காக நடித்துள்ளார்.

மாஸ்டராக தன் சினிமா கேரியரை தொடங்கிய இவர் தற்போது மாஸ்டர் விஜய்யுடன் நடித்துள்ளதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், ”தளபதி விஜய் அண்ணாவுடன் இணைந்து 17 வருடங்களுக்கு பிறகு மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன். அப்போ திருமலை, இப்போ மாஸ்டர். லோகேஷ் கனகராஜிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

5 கோடி நிவாரணம் ரெடி.. ஆனா இப்போ கொடுக்க மாட்டோம் : விஜயகாந்த்

5 கோடி நிவாரணம் ரெடி.. ஆனா இப்போ கொடுக்க மாட்டோம் : விஜயகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dmdk vijayakanthகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் தினம் வருமானத்தை நம்பியிருப்பவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

தற்போது நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால்‌ வரலாறு காணாத நிகழ்வு உலகம்‌ முழுவதும்‌ நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம்‌ உள்பட நாடு முழுவதும்‌ ஊரடங்கு உத்தரவு மே மாதம்‌ 3ம்‌ தேதி வரை நீட்டுக்கப்பட்டுள்ளது.

இதனால்‌ பொருளாதாரத்தில்‌ சிக்கியிருக்கும்‌ மக்கள்‌, வறுமை கோட்டிற்கு கீழ்‌ உள்ள ஏழை எளிய மக்கள்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. ஏற்கனவே ஆண்டாள்‌ அழகர்‌ பொறியியல்‌ கல்லூரியும்‌, தேமுதிக தலைமை கழகமும்‌ கொரோனா பயன்பாட்டிற்கு தமிழக அரசிடம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பல மாவட்டங்களில்‌ மக்களுக்கான மக்கள்‌ பணி தொடங்கப்பட்டிருக்கும்‌ வேளையில்‌, ஊரடங்கு உத்தரவு மேலும்‌ நீட்டிக்கப்பட்டுள்ளதால்‌ மக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில்‌ 5 கோடி ரூபாய்‌ மதிப்பிலான நிவாரணப்‌ பொருட்கள்‌ மே 3ம்‌ தேதிக்கு பிறகு வழங்கப்படும்‌.

ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஊரடங்கு, சமூக இடைவேளி, இவையெல்லாம்‌ நீங்கிய பிறகு தேமுதிக சார்பில்‌ மாவட்ட வாரியாக, நகரம்‌, ஒன்றியம்‌, பேரூர்‌ கழகம்‌, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள்‌, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும்‌. உண்ண உணவு, இருக்க இருப்பிடம்‌, உடுத்த உடை, மருத்துவம்‌, வேலை வாய்ப்பு மற்றும்‌ பொருளாதாரத்தில்‌ சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம்‌ தாயராக இருப்போம்‌.

கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம்‌ தேதிக்கு பின்னர்‌ கழக நிர்வாகிகள்‌ ஒவ்வொரும்‌ மக்களுக்கு நிவாரணப்‌ பொருட்களை வழங்க தயாராக இருங்கள்‌ என கேட்டு கொள்கிறேன்‌.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

அட்லியின் அந்தகாரத்தில் ‘மாஸ்டர்’ டச்… விஜய் ரசிகர்கள் ஹாப்பி

அட்லியின் அந்தகாரத்தில் ‘மாஸ்டர்’ டச்… விஜய் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

andhaghaaram trailerவிஜய்யின் ஹிட் படங்களை இயக்கிய அட்லி தற்போது படத்தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

இவர் தயாரித்துள்ள படத்திற்கு ‘அந்தகாரம்’ (DARKNESS) என்று தலைப்பிட்டு அதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

இதில் ’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார்.

இவருடன் பூஜா ராமச்சந்திரன், குமார் நடராஜன், மீஷா கோஷல், ஜீவா ரவி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விக்ன ராஜன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப் இசையமைத்துள்ளார்.

இப்பட டிரைலரில் ஒரு மனோதத்துவ நிபுணர் தன் முன்னால் இருப்பவரிடம் ‘புலி கூண்டிற்குள் நீ இருந்தால் அந்த புலிக்கு நீ எப்படி தெரிவாய்? என்று கேட்கிறார்.

அந்த நபர், ’அந்த கூண்டுக்குள் நீங்கள் இருந்தால் அந்த புலிக்கு நீங்கள் எப்படி தெரிவீர்கள்? என்று கேட்க அதற்கு அந்த மனோதத்துவ நிபுணர் ‘மாஸ்டர்’ என்று பதில் கூறுகிறார்.

அந்த டாக்டர் ஏன் ‘மாஸ்டர்’ என்று கூறினார் தெரியாது.

ஆனால் மாஸ்டர் என்ற வார்த்தை விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாலும் விஜய்யின் ராசியான டைரக்டர் தயாரித்துள்ள படம் என்பதாலும் இந்த ட்ரைலரை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் மாளவிக்காவுக்கு குரல் கொடுத்த நடிகை

மாஸ்டர் படத்தில் மாளவிக்காவுக்கு குரல் கொடுத்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raveena raviவிஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் பேராசிரியராக நடித்துள்ளார். அத்துடன் இறுதி காட்சியில் இவர் போலீசாக வருகிறார் எனவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

இதில் மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

மாளவிகா மோகனனுக்கு நடிகை ரவீனா ரவி என்பவர் டப்பிங் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் விதார்த் நடித்த ’ஒரு கிடாயின் கருணை கதை’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ரவீனா ரவியின் தாயார் ஸ்ரீஜாவும் ஒரு டப்பிங் கலைஞர் தான். இவரும் சில படங்களில் நடித்துள்ளார்.

More Articles
Follows