தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் முதலில் கொரோனா தொற்று கேரளாவில் தான் கண்டறியப்பட்டது.
அதற்கு முக்கிய காரணம் மலையாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் தான் வசிக்கிறார்கள். அவர்கள் சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியபோது கொரோனா தொற்றி அதிகளவில் பரவியது.
ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா விழிப்புணர்பு மற்றும் உலக சுகாதார துறையினர் பரிந்துரை செய்த வழிகாட்டுதலின்படி கேரளா அரசு நடவடிக்கைகளை சரியான தருணத்தில் எடுத்தது.
கேரள அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு மலையாளிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
கொரோனா தொற்றில் முதல் இடத்தில் இருந்த கேரளா, தற்போது பின்னுக்கு சென்றுவிட்டது.
இப்போதும் சிலர் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் அந்த நிலை உடனே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ஜோக்கர், அருவி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கொரோனா குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மாநிலங்களும் கேரளாவை பின்பற்றி தங்கள் மாநிலங்களில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்
This is an outstanding recovery compared to any state or country from corona. #kerala should be respected for that and others should take the right guidance from them. Hope that’s happening! #Coronaindia #COVID19 pic.twitter.com/zs6gUI0pZ8
— S.R.Prabhu (@prabhu_sr) April 15, 2020