ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை 3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை 3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aranmanai 3அவ்னி மூவிஸ் சுந்தர்.சி தயாரிப்பில் “அரண்மனை3” படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில் வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரமாண்டமான அரண்மனையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரண்மனை, அரண்மனை2 மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் 3ஆம் பாகமான ’அரண்மனை3’ எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. இதில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்கம் – சுந்தர்.சி
இசை- சத்யா
ஒளிப்பதிவு-U.K. செந்தில் குமார்.

முழுப்படப்பிடிப்பையும் முடித்த “குருதி ஆட்டம்” படக்குழு !

முழுப்படப்பிடிப்பையும் முடித்த “குருதி ஆட்டம்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kuruthi aattamதனித்தன்மை கொண்ட இயக்குநர்களின் இயக்கத்தில் வரும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களுக்கு, ரசிகர்களிடம் எப்போதும் சிறப்பு வரவேற்பு இருந்து வருகிறது. “எட்டு தோட்டாக்கள்” என ஒரே படம் மூலம், புகழ் பெற்ற இயக்குநராக மாறிவிட்ட இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் “குருதி ஆட்டம்” திரைப்படம், தலைப்பு முதலாகவே அழுத்தமான பின்புலம் கொண்டதாக, ரசிக்ர்களிடம் அதீத கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் படக்குழு படப்பிடிப்பை முழுமையாக முடித்த மகிழ்ச்சியில் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளுக்கு தயராகி வருகிறது படக்குழு.

இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது…

மிகதிறமை வாய்ந்த நடிகர்களான அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெரும் மகிழ்ச்சியையும், கற்றுக்கொள்ளும் நல்ல அனுபவத்தையும் தந்தது. அதர்வா முரளி எப்போதும் இயக்குநர்களின் நடிகராகவே இருந்து வருகிறார். ஆனால் எப்படிப்பட்ட நடிகரானாலும் தொடர்ந்து வெற்றிபடங்களை தந்து வருபவர்கள் என்னைப் போல் புதுமுக இயக்குநர்களுக்கு திரைக்கதையில், இயக்கத்தில், தங்களது அறிவுரையை வழங்குவார்கள். ஆனால் அதர்வா முரளி ஒரு சிறு துளி கூட அப்படி நடக்கவில்லை. திரைக்கதையை கேட்டு ஒப்புக்கொண்ட பிறகு, அவர் தன்னை முழுதாக என்னிடம் ஒப்புவித்துவிட்டார். ப்ரியா பவானி சங்கர் தமிழ் பேசும் நடிகையாக பல உயரங்களுக்கு செல்லக்கூடிய திறமைசாலி. அவர் தந்து வரும் தொடர் வெற்றிபடங்கள் மட்டுமல்ல, வரவிருக்கும் அவரது படங்களும் மிகப்பிரமாண்டமான இடத்தை அவருக்கு தரக்கூடியது. ராதிகா மேடம், நடிகர் ராதாரவி அவர்களுடன் வேலை செய்ய முதலில் என்னுள் பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்ட அனுபவமாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்தும் அனைவருடனும் அவர்கள் வெகு எளிமையாக பழகினார்கள். பேபி திவ்யதர்ஷினி இத்திரைப்படம் மூலம் மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவில் இருந்த அனைவரின் செல்லமாக மாறிவிட்டார். இத்திரைப்படத்தை நினைத்தபடியே உருவாக்க பெரும் ஆதராவாக இருந்த தயாரிப்பாளர் முருகாநந்தம் அவர்களுக்கு இந்நேரத்தில் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படம் “எட்டு தோட்டாக்கள்” போன்று ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்கு தரும் என்றார்.

Rockford Entertainment சார்பாக முருகாநந்தம் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். டிரெயலர் மற்றும் இசை விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தினை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharath in Last 6 Hoursலேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’. சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் (தூத்துக்குடி) கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன? திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.

அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அப்புறம் கம்ப்ளைன்ட் பண்ண கூடாது; வரலட்சுமிக்கு ராதிகா ஆதரவு

அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அப்புறம் கம்ப்ளைன்ட் பண்ண கூடாது; வரலட்சுமிக்கு ராதிகா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radika and Varalaxmiஎந்த ஒரு விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக பேசக் கூடியவர் வரலட்சுமி.

இவர் பெண்கள் மீதான பல அவலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.

தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் தன்னிடம் வைத்திருப்பதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.

தான் என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட தனக்கும் அந்த அவலம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

சினிமா சான்ஸ் வேண்டும் என்றால். தயாரிப்பாளர்களுடன் மற்றும் இயக்குநர்களிடமும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள சொன்னதாகவும், தான் அப்படி செய்ய மாட்டேன் அதற்காக சினிமா சான்ஸ் போனாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பலர் பேசிய ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எல்லாம் நடந்த முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்காப்புக்காக பெண்கள் தங்களையே தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், வரலட்சுமிக்கு ஆதரவாக ராதிகா சரத்குமார், ”சரியாக சொல்லியிருக்கிறாய் வரு… உனக்கு பலமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ராஜூ முருகனின் ஜிப்ஸி-யை பார்த்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

ராஜூ முருகனின் ஜிப்ஸி-யை பார்த்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK stalin with gypsy teamராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் வரும் மார்ச் 6’ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சென்சார் கமிட்டியால் நீக்கப்பட்ட காட்சியொன்றினையும் படக்குழு வெளியிட்டது.

Gypsy – Moviebuff Sneak Peek (Censor Cut – 01)

இந்த நிலையில் இப்பட சிறப்புக் காட்சியை திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்துள்ளார்.

இவருடன் துரைமுருகன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் பார்த்துள்ளனர்.

BREAKING இந்தியன் 2 விபத்து; போலீஸ் விசாரணையில் கமல் என்ன சொன்னார்..?

BREAKING இந்தியன் 2 விபத்து; போலீஸ் விசாரணையில் கமல் என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanகடந்த மாதம் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் கமல், ஷங்கர், லைகா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விபத்து குறித்து ஏற்கெனவே ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்திலும் உள்குத்து..?

இந்த நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களில் நானும் ஒருவன்.

அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன்.

இழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன்.

இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க நடந்த கலந்துரையாடலாகவே இதை நான் பார்க்கிறேன்.

இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

எங்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் விரைவில் சந்தித்து பேசவுள்ளோம். அது குறித்த தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறோம்” எனத் கமல் பேசினார்

More Articles
Follows