30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் கலக்கும் நடிகர் விச்சு விஸ்வநாத்

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் கலக்கும் நடிகர் விச்சு விஸ்வநாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விச்சு விஸ்வநாத்.

குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர்.

30 வருடங்களுக்கு மேலாக இந்த திரையுலகில் ஒரு நடிகராக நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர் விச்சு விஸ்வநாத் கூறுகையில்…

“30 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்துள்ளேன்.

நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்புபவன் நான்.

அதனால் தானோ என்னவோ நான் குணசித்திரம் கலந்த நகைச்சுவை வேடங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

தற்போது இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’ படத்தில் நடித்துள்ளேன். அவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 படத்திலும் நடித்துள்ளேன்.

அரண்மனையின் முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசமான தோற்றித்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது அரண்மனை 3 படத்திலும் அதே போல் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன்.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சுந்தர்.C அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ‘அரண்மனை 3’ படம் அமைந்துள்ளது.” என்றார்.

Actor Vichu Viswanath completes 30 years in cine industry

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ‘உடன் பிறப்பே’ பட ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ‘உடன் பிறப்பே’ பட ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அதன்படி ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன் பிறப்பே‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது.

இதில் ஒன்றான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் ஓடிடியில் ரிலீசாகிவிட்டது.

சூர்யா நடித்துள்ள ‘ஜெய்பீம்’ படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ல் வெளியாகிறது.

மற்றொரு படமான ‘உடன்பிறப்பு’ படம் ஜோதிகாவின் 50 வது படமாக தயாராகி உள்ளது.

இந்தப் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

மாதங்கியும், வைரவனும் உடன்பிறப்புகள். மாதங்கியின் கணவன் சற்குணத்தால் இவர்கள் உறவில் விரிசல் விழுகிறது.

அண்ணனா,? கணவனா? என்ற இரு துருவங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவராக மாதங்கியின் கேரக்டர் எழுதப்பட்டுள்ளது.

இதில் மாதங்கியாக ஜோதிகாவும், உடன்பிறந்த சகோதரன் வைரவனாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் சற்குணமாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் கலையரசன் மற்றும் சூரி நடித்துள்ளனர்.

இமான் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் தயாராகி உள்ளது. சரவணன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர் 2015ல் வெளியான கத்துக்குட்டி படத்தை இயக்கியவர்.

வருகிற அக்டோபர் 14ல் ஆயுதபூஜை ஸ்பெஷலாக அமேசானில் ‘உடன்பிறப்பு’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்பட ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

உடன் பிறப்பு…
தயாரிப்பு – 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – இரா.சரவணன்
இசை – இமான்
நடிப்பு – சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன், சூரி மற்றும் பலர்.
பிஆர்ஓ – யுவராஜ்

The trailer of Udan Pirappe is dropping today at 5PM

‘சீன் நம்பர் 62’ படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள பாடகி நஞ்சியம்மா

‘சீன் நம்பர் 62’ படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள பாடகி நஞ்சியம்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள பாடகி நஞ்சியம்மா ‘சீன் நம்பர் 62’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் அவர் பாடிய ‘கலக்காத…’ பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து யூடியூபில் 4 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது.

‘சீன் நம்பர் 62’ திரைப்படத்திற்காக உயிரோட்டமுள்ள பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.

மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிக் பாஸ் புகழ் ஆஜீத் காலிக்கும் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

திரைப்படத்துறை குறித்து தமிழில் ஏற்கனவே படங்கள் வெளியாகி உள்ள போதிலும், இது வரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தில் உருவாகி வருகிறது, திகில் கலந்த கிரைம் திரில்லரான ‘சீன் நம்பர் 62’.

‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த ‘ஆதாம்’ சமரின் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘சீன் நம்பர் 62’ திரைப்படத்தை வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

பவன்புத்ரா பிலிம் புரொடக்ஷனின் நிகில் ஆர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார்.

பௌதிஷ், அமல்தேவ், கோகிலா கோபால், ஜாய்ஸ் எலிசபெத், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல் மற்றும் பொள்ளாச்சியில் ‘சீன் நம்பர் 62’ படமாக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘இரட்டையர்’ மற்றும் தெலுங்கில் ‘ஓய் இடியட்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிகேவி, ‘சீன் நம்பர் 62’-க்கு இசை அமைக்கிறார்.

விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’, ‘பாம்பு சட்டை’, ‘ஜோதி’ மற்றும் ‘டைரி’ ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான எஸ் ஆர் ராஜா சேதுபதி ‘சீன் நம்பர் 62’-ன் எடிட்டர் ஆவார்.

பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை ‘மிரட்டல்’ செல்வா மற்றும் ஹைப்ரிட் களரி அர்ஜுன் வடிவமைத்துள்ளனர். கலை இயக்கத்தை டி கே தினேஷ்குமார் கையாண்டுள்ளார்.

அன்சாரி இஸ்மாக் ஒப்பனையையும், சோஹிப் ஜயி உடைகளையும், விளம்பர வடிவமைப்பை சரோவ்வும் கையாண்டுள்ளனர்.

ரஜீஷ் பதம்குளம் மற்றும் ரினீஷ் திட்ட வடிவமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்களோடு ‘சீன் நம்பர் 62’ விரைவில் வெளியாகவுள்ளது.

Malayali singer Nanjiyamma sung one song in scene no 62

சதீஷை அடுத்து ‘கோமாளி’ இயக்குனரையும் ஹீரோவாக்கிய ‘நாய் சேகர்’ படக்குழு

சதீஷை அடுத்து ‘கோமாளி’ இயக்குனரையும் ஹீரோவாக்கிய ‘நாய் சேகர்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’.

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கிய இந்த படம் 2019ல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பணிபுரிந்து இருந்தனர்.

‘கோமாளி’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றதால் பிரதீப்பின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில் ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் அவரே நாயகனாக நடித்து இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரிக்கிறது.

விஜய் நடித்த ‘பிகில்’ & ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் 22வது படமாக இது உருவாகவுள்ளது.

Comali director turns hero for his next film

நேற்று ஹீரோஸ்.. இன்று புரொடியூசர்ஸ்..; மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி

நேற்று ஹீரோஸ்.. இன்று புரொடியூசர்ஸ்..; மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் ‘டாக்டர்’.

இதில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்க வில்லனாக வினய் நடித்துள்ளனர்.

இவர்களுடன் அர்ச்சனா, டோனி, யோகிபாபு, தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரடெக்‌ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி சனிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், டாக்டர் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முகிழ்’ படம் அக்டோபர் 8-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இதில் நாயகியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்க விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் சேதுபதி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ல் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படமும் & விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ படமும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஒரே நாளில் மோதியது.

தற்போது சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி இருவரும் தங்கள் படத்தின் தயாரிப்பாளர்களாக மாறி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Vijay Sethupathi films to clash again

அடுத்த படத்தை இயக்க ரெடியான ஐஸ்வர்யா தனுஷ்.; ஆல்ரெடி அறிவித்த படங்கள் என்னாச்சுன்னே தெரியல.?!

அடுத்த படத்தை இயக்க ரெடியான ஐஸ்வர்யா தனுஷ்.; ஆல்ரெடி அறிவித்த படங்கள் என்னாச்சுன்னே தெரியல.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3′ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ்.

இவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த குடும்பம் சார்ந்த த்ரில்லர் படக்கதையை சஞ்சீவ் எழுதியுள்ளார்.

இந்தப் பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

கூடுதல் தகவல்.. :

2016ஆம் ஆண்டில் ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப் படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார் ஐஸ்வர்யா தனுஷ்.

சினிமாவின் உண்மையான ஹீரோக்களே ஸ்டண்ட் மாஸ்டர்களும், கலைஞர்களும்தான். அவர்களின் உழைப்பு வெளியுலகிற்கு தெரிவதில்லை.

எனவே அவர்களைச் சிறப்பிக்க இந்த படம் எடுக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.

இந்த ஆவணப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுக்கவுள்ளார் என அப்போது பேசப்பட்டது. ஆனால் அது என்னாச்சு..?

அதுபோல கடந்த 2017 ஆண்டில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘மாரியப்பன்’ என்ற பெயரில் படமாக்கவுள்ளதாக அறிவித்தார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.

(இந்தாண்டும் 2021ல் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது வேறுக்கதை)

ஆனால் ஐஸ்வர்யாவின் 2 படங்கள் அறிவிப்பு என்ன ஆச்சு? என்பதே இப்போதைய கேள்வி.

Aishwarya Dhanush announced her next project

More Articles
Follows