‘அரண்மனை 3’ திரைப்படம் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை 12 நாட்களில் கடந்து சாதனை

‘அரண்மனை 3’ திரைப்படம் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை 12 நாட்களில் கடந்து சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா, ராஷிக்கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம், சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘அரண்மனை 3’ திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில் படக்குழுவினரும், ZEE5 குழுவினரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ZEE5 நிறுவனம் அடுத்தடுத்து அட்டகாசமான கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை அசத்தி வருகிறது. இந்த வெற்றி வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம்’ திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது ‘அரண்மனை 3’ திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

ZEE5 நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் “சித்திரை செவ்வானம்”, இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் பிரத்யேக வெளியீடாக ZEE5 தளத்தில் 3 டிசம்பர் அன்று வெளியாகிறது.

மேலும் பல சிறப்பு மிக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, பல்வேறு படைப்புகளுடன் அடுத்தடுத்த மாதங்களில் ZEE5 தனது சந்தாதாரர்களை மகிழ்விக்க உள்ளது.

‘Aranmanai 3’ garners over 7 Crore streaming minutes on ZEE5 in 12 days

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘கபளீகரம்’

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘கபளீகரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் நடக்கின்றன சில குற்றங்கள் காவல் துறைக்கே பெரும் சவாலாக இருக்கும். அப்படி காவல்துறையைக் கதிகலங்க வைத்த லாரி கொள்ளை என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘கபளீகரம்’.

வட இந்தியாவில் லாரிகளைத் திட்டமிட்டு ஒரு கும்பல் திருடிக் கொண்டுபோகும் குற்றங்கள் நடைபெற்று வந்தன.பல்வேறு சவால்கள், சிரமங்களுக்கிடையே இதைக் காவல்துறை கண்டுபிடித்தது பரபரப்பூட்டியது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துத்தான் ‘கபளீகரம்’ படம் உருவாகியிருக்கிறது

இப்படத்தை மகிழ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தக்ஷன் விஜய் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார்

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செல்வம், இசை கார்த்திக்.

ஒரு நேர்மையான துடிப்பான காவல்துறை அதிகாரியாக நாயகன் தக்ஷன் விஜய் நடித்துள்ளார். மேலும் மைம் கோபி, யோகிராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், கிருஷ்ணகிரி, ஓசூர், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

கதை கிருஷ்ணகிரியிலிருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் நடப்பதால் பெரும் பகுதி படப்பிடிப்பு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

“சில உண்மைச் சம்பவங்கள் கற்பனையை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இப்படிப்பட்ட லாரி திருடும் கும்பல் கல்கத்தாவில் சிக்கியது. இந்தக்கும்பல்
லாரிகளைத் திருடும் போது லாரி ஓட்டி வந்த ஓட்டுநரையும் உடனிருக்கும் கிளீனரையும் கொலைசெய்து எரித்து அடையாளம் தெரியாமல் ஆக்கி விடுவார்கள்.எந்தத் தடயமும் இருக்காது அவர்களின் செயல்களைப் பார்த்த போலீசார் அது கற்பனையையே மிஞ்சுவதாக இருந்ததாக வியந்துள்ளனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது” என்கிறார் இயக்குநர் தர்ஷன் விஜய்.

இப்படத்தில் சோகப் பாடல் ஒன்றும் மெலோடி பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் உள்ளன. ஒன்றை மதுபாலகிருஷ்ணனும் இன்னொன்றை ஸ்ரீகாந்த் ஹரிசரணும் பாடியுள்ளனர்.சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளனர்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Dharshan Vijay’s Kabaleegaram based on true events

‘ஜெயில்’ திரைப்பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

‘ஜெயில்’ திரைப்பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அந்த மனுவில், படத்தை தயாரித்துள்ள
கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை,
ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9 ம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது,ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் படத்தின் விநியோக உரிமையை வழங்கிவிட்டு தற்போது வேறொரு நபர் மூலம் படத்தை வெளியிட முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்

தயாரிப்பு நிறுவனம் தர்ப்பில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு காப்புரிமை வழங்கவில்லை எனவும்,
படத்தை வெளியிட தகுதியான விநியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

தொடர்ந்து,ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து வரும் 6 ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் க்கு உத்தரவிட்ட நீதிபதி,
திரையரங்க விநியோக உரிமை குறித்து வரும் திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Court verdict on Jail film release

‘வலிமை’ வில்லன் கார்த்திகேயாவுக்கு அஜித் கொடுக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட்

‘வலிமை’ வில்லன் கார்த்திகேயாவுக்கு அஜித் கொடுக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருபவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா.

இவர் தான் காதலித்து வந்த லோஹிதாவை அண்மையில் திருமணம் செய்தார்.

இந்த திருமண விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என ரசிர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அஜித் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் விரைவில் புதுமண தம்பதிகளை தன் வீட்டிற்கு அழைத்து கல்யாண விருந்து அளிக்கவிருக்கிறாராம் அஜித்.

Ajith’s surprise treat to Valimai villain

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான் பட நாயகி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது டான் மற்றும் அயலான் படங்கள் ஆகிய படங்கள் திரைக்கு வரத்தயாராகி வருகிறது-

இந்த படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ளார் என்ற செய்திகளை பார்த்தோம்.

நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் இவர்.

இந்த நிலையில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ரித்து வர்மாவிடம் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாம்.

துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ரிதுவர்மா.

மேலும் தீனி என்ற படத்தில் அசோக் செலவனுடன் நடித்தார் ரிது வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Dulquer Salman film actress joins with Sivakarthikeyan

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ‘விக்ரம் 61’

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ‘விக்ரம் 61’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம்.

விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Chiyaan and Pa Ranjith joins for Vikram 61

More Articles
Follows